Wednesday 18 July 2007

துபை TNTJ யின் தஃவா பணியும்! இஸ்லாத்திற்கு மாறும் மாற்றுமத சகோதரர்களும்


அல்லாஹ்வின் மார்க்கத்தில் அலை அலையாய் மக்கள் இணையும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நாள்தோறும் பெருகி வருவதன் தொடரில் ஒன்றாய் கடந்த 13.07.07 வெள்ளியன்று JT மர்கஸில், துபையில் பணியாற்றும் இலங்கை கட்டுநாயக பகுதியை சேர்ந்த, புத்த மத தாய்க்கும் கிருஸ்தவ மத தந்தைக்கும் பிறந்த ''சுரங்கா' என்ற சிங்கள சகோதரர் இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தில் முஹம்மது ரிஸான் என்ற பெயரோடு தன்னை இணைத்துக் கொண்டார், அல்ஹம்துலில்லாஹ்.

எத்தனையோ இயக்கங்கள் இருக்க தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதன் வெளிப்பாடே கடந்த 4 வாரங்களில் JT மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற 3 வது சகோதரர் இவர் என்ற நிஜம்.
பிறந்து வளர்ந்த மதங்களை துறந்து, குர்ஆன் ஹதீஸை விளங்கி மார்க்கத்தை ஏற்கும் இம்மக்களிடமிருந்து இஸ்லாத்திற்குள்ளேயே தன்னை மாற்றிக் கொள்ள மறுக்கும் மத்ஹபு மற்றும் தர்காவாதிகள் பாடம் கற்க வேண்டும் என்ற இலங்கை மவ்லவி.
முஹம்மது நாசர் அவர்களின் கூற்று இந்நிகழ்வின் சிந்திக்கத் தூண்டும் சிறப்பம்சங்களில் ஒன்றாய் அமைந்தது.

செய்தி:
துபையிலிருந்து... அதிரை அமீன்

No comments: