Sunday 30 November 2008

மும்பை பயங்கரம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلاَ يَسْتَخْفُونَ مِنَ اللّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لاَ يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا
அவர்கள் மக்களிடம் மறைத்து விடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களில் இரவில் பேசி அவர்கள் சதி செய்தபோது அவன் அவர்களுடன் இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் : 4:108

'' இந்தியாவின் தொழில் நகரம் பம்பாய்''

'' இந்தியாவின் இதயம் பம்பாய்''

என்றெல்லாம் சொல்லக் கூடிய அளவுக்கு பம்பாய்க்கு வெளியிலும் உலக அளவிலும் பேசக் கூடிய அளவுக்கு பம்பாய்.

''பம்பாய் ச்சலோ''

''பம்பாய்மே ஹமாரா காரேபார் ஹே, டிப்போ ஹே, டெம்போ ஹே,

என்றக் குரல் பம்மாய்க்கு வெளியில் உள்ள மாநிலங்களில் பரவலாக ஒலிப்பதை கேட்டிருக்கின்றோம் அந்தளவுக்கு பிரபலமான தொழில் நகரம் பம்பாய்.

பிரபலமான பம்பாய் நகரம் இந்திய பெரும் கண்டத்திற்குட்பட்டப் பகுதியாகும். இந்தியாவுக்கு வெளியில் உள்ளதல்ல. (வெளியில் இருப்பதாக நினைத்துக் கொண்டு தான் மராட்டிய தாக்கரேக்கள் கூச்சல் போடுகிறார்கள்)

யாரால் பிரபலமானது ???

பம்பாய்க்கு வெளி மாநிலத்தில் உள்ள செல்வந்தர்கள் கோடிக் கணக்கான பணத்தை எடுத்துக் கொண்டு வந்து பம்பாய் நகரத்தில் கொட்டி பிரம்மாண்டமான தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள்.

பம்பாய்க்கு வெளிமாநிலத்தில் உள்ள நடுத்தரவர்க்கத்தினரும் தங்களிடம் உள்ளப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டு வந்து தங்களுக்குத் தெரிந்த குடிசை தொழில்களை பம்பாயில் செய்தர்கள்.

கனிசமான இந்தியர்களை வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு அனுப்பி இந்தியாவுக்கு Foreign Correncyயை ஈட்டித் தருவதற்காக அதிகமான Recruitment அலுவலகங்களை பம்பாயில் நிருவியது வெளிமாநிலத்தவர்களே.

பம்பாயிலிருந்து வெளிநாடுகளுக்கு இந்திய தயாரிப்புகளை அனுப்புவதற்காக அதிகமான Export நிருவனங்களை நிருவியது வெளி மாநிலத்தவர்களே !

இன்னும் பம்பாய் நகரத்தில் பணம் கோடி, கோடியாக புரளுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து பம்பாயை நோக்கிப் படையெடுத்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் 'ஹாலிவுட்' சினிமா நிருவனத்திற்கு நிகராக பம்பாயில் ‘பாலிவுட்’ சினிமா நிருவனத்தை உருவாக்கி ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படங்களை தயாரித்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் திரையிட செய்ததன் மூலமாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலமாகவும் வெளிநாட்டுக் கரன்ஸிகளும், உள்நாட்டுப் பணங்களும் கோடிகளுக்கு மேல் கோடிகளாக பம்பாயில் குவியச் செய்த சினிமாக்காரர்கள் பம்பாய்க்கு வெளியிலிருந்து வந்தவர்களே ( நாம் சினிமாவுக்கு சப்போட் பண்ணுவதாக நினைக்க வேண்டாம் எல்லா வழிகளிலும் பம்பாயை உலக அளவில் பேசவைத்தவர்கள் பம்பாய்க்கு வெளியிலிருந்து வந்து குடியேறிவர்களேயாவார்கள் என்பதை விளக்குவதற்காகவே சினி உலகத்தையும் குறிப்பிட்டோம் ) .

எக்ஸ்போர்ட் நிருவனங்கள், ரெக்ருய்ட்மென்ட் அலுவலகங்களுடைய சேவையினால் வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய நகரமாக பம்பாய் மாறியது, வெளிநாட்டவர்கள் அதிகமானோர் பம்பாய்க்கு அடிக்கடி வரத்தொடங்கினர் இதனால் இந்தியாவில் இயங்கக் கூடிய சர்வதேச விமான நிலையங்களில் பம்பாய் சர்வதேச விமான நிலையம் எந்த நேரமும் பரபரப்பாக காட்சி அளிக்கும் பம்பாய்க்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அடுக்குமாடி நட்சத்திர ஹோட்டல்கள் மற்ற மாநிலங்களை விட பம்பாயில் அதிகரித்தது.

பம்பாயில் பெரிய தொழிற்சாலைகள் முதல்கொண்டு ''கையேநதி பவன்'' என்று சொல்லக் கூடிய ப்ளாட்பாரக் கடைகள் வரை நடத்தி வருவது 99 சதவிகிதம் வெளிமாநிலத்தவர்களே!

இவ்வாறு வெளியிலிருந்து பம்பாயில் வந்து குழுமியவர்களால் தான் பம்பாய் தொழில் நகரம், என்றும் காசு கொழிக்கும் நகரம், என்றும் இந்தியாவின் இதயம் என்றும் வர்ணிக்கப்பட்டது.

அதனால் இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலிருந்தும் பிழைப்புத்தேடி அன்றாடம் 'பம்பாய் எக்ஸ்ப்ரஸ்' ஸில் பயணித்து வந்து மக்கள் குவிந்தனர் அவர்கள் அனைவரும் இந்தியப்பெரும் கண்டத்தின் குடிமக்களே ''

வெளிமாநிலத்தவர்களுடைய உழைப்பு இல்லை என்றால் இன்று பம்பாய் ஒரு ஒரிஸாவைப் போல், அஸ்ஸாமைப் போல் தேர்தல் நேரங்களில் ஊடகங்களில் வாசிக்கும் மாநிலமாகவே இருந்திருக்கும். வெளி மாநிலத்துக்கும் வெளி உலகுக்கும் பம்பாய் தெரிய வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

தாக்கரே குடும்பத்தினரால் உசுப்பேற்றி விடப்பட்ட மராட்டிய மக்கள் பம்பாய் நகரத்தை உருவாக்குவதற்காக எந்த முயற்சியையும் மேற்கொண்டதாக வரலாறு இல்லை.

மேற்கானும் விதம் வெளியிலிருந்து பம்பாயில் வந்து குடியேறி பம்பாயை உருவாக்குவதில் முஸ்லிம்கள் கனிசமானவர்கள் என்பது இன்றும் அதிகமானோருக்குத் தெரியாது. ஆனால் தெரிய வேண்டியவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது.

இனவெறியும், மதவெறியும் பிடித்த தாக்கரேக்கள்:

மராட்டியம் என்ற இனவெறியும், முஸ்லிம் எதிர்ப்பு என்ற மதவெறியும் பிடித்த தாக்கரேக்கள் வெளி மாநிலத்தவரை விரட்டுகிறோம் என்றப்பெயரில் ஒவ்வொரு முறை கலவரம் செய்யும் போதெல்லாம் மராட்டிய மக்களையும், மராட்டிய காவல்துறையையும் ஏவி விட்டு கனிசமான முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்யாமல் விட்டதில்லை.

இதற்கு முன்பொரு முறை மஹாராஸ்டிராவில் ஊடுருவிய வங்காள தேசத்தவர்களை விரட்டுகிறோம் என்றப்பெயரில் ''ச்சோப்டா பெட்டியில்'’ வாழும் ஆயிரக் கணக்கான பம்பாய் முஸ்லிம்களை 'பங்காளிகள்' என்றுக் கூறி விரட்டி அடித்தனர், வெளியேற மறுத்தவர்களை கொன்று குவித்தனர்.

உத்தரபிரதேசத்தில் இழந்த பாபரி மஸ்ஜிதுக்காக பம்பாயில் தான் முதன் முறையாக மூவாயிரம் முஸ்லிம்கள் மதவெறிப் பிடித்த பால்தாக்கரேயினால் தூண்டி விடப்பட்டு மராட்டிய தீவிரவாதிகளாலும் மராட்டிய போலீஸாராலும் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.

இவ்வாறு அவ்வப்பொழுது வெளிமாநிலத்தவர்களை விரட்டுகிறோம் எனும் பெயரில் முஸ்லிம்களுடைய எண்ணிக்கையை குறைத்து வந்தவர்கள் இப்பொழுது பெரிய அளவில் குறைப்பதற்காக தீட்டிய பயங்கர சதி திட்டத்தை மாலேகான் குண்டு வெடிப்பின் மூலம் வல்ல இறைவன் வெளி உலகுக்கு யார் தீவிரவாதிகள் ? என்பதை காட்டச் செய்தான்.

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காட்டுவதற்காக அதிக முயற்சியை மேற்கொண்ட ‘Anti-Terrorism Squad’ chief hemant karkare அவர்களை கொலை செய்வதற்காக தீட்டிய பயங்கர சதி திட்டமே பம்பாயில் 9 இடங்களில் வெடித்த குண்டுகளும் துப்பாக்கிச் சண்டைகளுடைய நாடகமுமாகும்.

Y P Rajesh Posted: Nov 27, 2008 at 1604 hrs IST

ATS chief Hemant Karkare was killed in the Mumbai seige
Related Stories:
Major counter-offensive launched against terrorists'We could hear desperate shouts, bachao, bachao'Mumbai under siege: A massive intelligence failure'Terrorists wore caps, black blue jackets & a backpack''We were scared but knew it is safer outside'

Mumbai: The last days of
Maharashtra Anti-Terrorism Squad (ATS) chief Hemant Karkare were probably some of the busiest in his 26-year career in the Indian Police Service (IPS), and apparently tormented as well.
The ATS believed it had cracked the September 29 Malegaon bomb blast case, and about a month ago arrested Hindu extremists in a breakthrough that shocked the nation and added a new twist to the entire discourse on
Terror and religion.
But as the probe unravelled the alleged plot and the role of some Hindu leaders, the case got caught in the politics of terror and the ATS was at the centre of charges that it was being used as a tool to target the Sangh Parivar amid allegations of illegal detention and torture by some of the 11 arrested for the blast.
The BJP, RSS and VHP leaders, among others from the Hindu nationalist brigade, accused the ATS of being on a witch-hunt, with some even demanding that ATS officers be subjected to a narco-analysis to establish their motives.
No less a leader than the BJP's Prime Ministerial candidate, L K Advani, had demanded a change in the ATS team and a judicial inquiry into the torture allegations made by Sadhvi Pragya Singh Thakur, a key suspect in the Malegaon case.
The Shiv Sena too had come out in support of the suspects and on Wednesday had threatened in its mouthpiece Saamna that it would publish the names of some ATS officers and shame them as it said they had tortured the Malegaon suspects.
That Karkare was affected by this was apparent when we met at his office on Tuesday to get an update on the probe, less than 36 hours before he was killed. The Indian Express has decided to break the confidence of what was an off-the-record conversation in an attempt to highlight the anguish of the investigators over the currents in which the Malegaon probe was getting caught as well as the larger debate over the politics of terror.
"I don't know why this case has become so political," was one of Karkare's first comments. "The pressure is tremendous and I am wondering how to extricate it from all the politics."
Was the pressure telling on the investigation, what with someone who could be the next prime minister of the country questioning the credibility of the ATS?
"Of course," was the answer. "We are being very very careful. In...


தாஜ்மஹால், மற்றும் ஒபராய் ஹோட்டல்களின் வளாகங்களில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் பதுங்கி இருப்பதாகவும், ஹோட்டலை போலீஸார் முற்றுகையிட்டுள்ளதாகவும் அதிரடி செய்திகளை ஊடகங்கள் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றார்கள்.

உலக அளவில் இந்திய ரானுவம் நான்காவது இடத்தில் இருப்பதுடன் அதில் 'நேவி' 'கப்பல் படை' இன்னும் அதிதிறமை வாய்ந்தது என்று எல்லோராலும் பேசப்பட்டு வரும் வேளையில் கராச்சியிலிருந்து தீவிரவாதிகள் கப்பல் மூலமாக பம்பாய் வந்தார்கள் என்பது சொல்வதற்கும், கேட்பதற்கும் கேவலமாக இல்லையா ??? வர முடியாது என்பது தான் யதார்த்தம்.

அதற்கடுத்து இவற்றிற்கு காரணம் டெக்கான் முஜாஹித், என்றும் அதற்கடுத்து அல்கொய்தா என்றும் மாற்றி மாற்றி பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இறந்த போலீஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் என்று நரேந்திரமோடி அறிவித்ததிலிருந்து ATS chief Hemant Karkare அவர்களை குறி வைத்து கொல்வதற்கு கூலியின் அடிப்படையில் ஏவிய குண்டர் பட்டாளமும், போலீஸ் படையும் என்பது தெளிவாகிறது.

அதனால் இது மோடியிலிருந்து தாக்கரேக்கள் வரை தீட்டிய '' நெட்வொர்க்'' சதி திட்டம் என்பது தெளிவாகிறது. வல்ல அல்லாஹ் இதையும் வெளிக்கொண்டு வரும் ஆற்றல் படைத்தவன்.

ஜார்ஜ் புஷ் அமெரிக்காவை அழிவின் பாதையில் இட்டுச் சென்றதைப் போல் இந்தியாவின் இதயப் பகுதியாகிய பம்பாயை தாக்கரேக்கள் அழிவின் பாதையில் இட்டுச் செல்வதற்கு தூரம் அதிகமில்லை.

இறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் தாக்கரேக்களையும், மோடிகளையும், சாமியார் வேடத்தில் பதுங்கி இருக்கும் தீவிரவாத கும்பலையும் அல்லாஹ்விடம் ஒப்படையுங்கள் மனம் தளராதீர்கள் அல்லாஹ் போதுமானவன். உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. திருக்குர்ஆன் . 85:12.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

நன்றி: அதிரை ஏ.எம்.பாரூக்

Wednesday 26 November 2008

சட்டக்கல்லூரி "கலவரத்தில் நிஜக் குற்றவாளி" யார்?

அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த கலவரம், மற்ற பிரச்னைகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது.

நாள்தோறும் மாணவர்கள் கைது, தாக்குதலைக் கண்டித்துத் தீக்குளிப்பு, போராட்டம் என விதவிதமான ஆர்ப்பாட்டங்கள் பரபரப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருக்கின்றன.


பொதுமக்கள் மத்தியில் இந்தக் கலவரம் இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது, அதற்கான காரணங்களைக் கண்டறியும் முயற்சியில் வழக்கறிஞர்கள் குழு களத்தில் இறங்கியது. பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையிலான இந்தக் குழுவில் பேராசிரியர்கள் சிவக்குமார், சந்தோசம், லெனின், வழக்கறிஞர் லெனின், மனோகரன், சுஜாதா உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் நவம்பர் 20-ம் தேதி தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு அளித்தனர்.

கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் களத்தில் இறங்கிய உண்மை அறியும் குழுவினர் கல்லூரி நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தினர். இந்தக் குழுவில் இடம்பெற்ற குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கேசவனை சந்தித்தபோது, "சட்டக் கல்லூரி கலவரம் தொடர்பாக மீடியாக்களில் வெளியான வன்முறைக் காட்சிகளில் ஓரளவுதான் உண்மை இருக்கிறது. மோதலுக்குப் பிரதானமாக பல காரணங்கள் இருக்கின்றன'' என்றவர்,
"சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் 160 பேர் தங்கியுள்ளனர்.


இவர்களில் 149 பேர் தலித் மாணவர்கள். அதிகப்படியான தலித் மாணவர்கள் இருப்பதால், சாதி மோதலாகத்தான் இந்தப் பிரச்னை கவனிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே முக்குலத்தோர் மாணவர் பேரவைக்கும், தலித் மாணவர்களுக்கும் இடையில் விழாக்கள் நடத்துவதில் தொடர் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதலை பல்வேறு சாதி அமைப்புகள்தான் பின்புலத்தில் இருந்து இயக்கி வந்துள்ளன. அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்ற உச்சரிப்பையே தலித் அல்லாத சில மாணவர்கள் வெறுத்துள்ளனர். குறிப்பாக, விஜய் பிரதீப் என்ற மாணவர் சாதாரண ராக்கிங் நடக்கும்போதுகூட, `நான் யார் தெரியுமா? மேலவளவு முருகேசன் படுகொலையில் முதல் குற்றவாளியான ராமர் என் சித்தப்பாதான். என் பேக்ரவுண்ட் புரிஞ்சுக்கோ' என மிரட்டி வந்துள்ளார். இதை கல்லூரி நிர்வாகிகளும் உறுதிப்படுத்தினர். தற்போது அடிபட்டு சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன் உள்பட சிலர் மீது வன்கொடுமைச் சட்டம், அடிதடி என பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
பிரச்னைக்கான தொடக்கப்புள்ளி கடந்த 7-ம் தேதி பாரிமுனை பஸ் நிலையத்தில் நடந்துள்ளது. தேர்வு எழுதிவிட்டு வந்த ஏழுமலை, மேகநாதன், ராஜா, சிவராஜ் ஆகிய தலித் மாணவர்களை கிருஷ்ணசாமி, அய்யாத்துரை, நாகராஜ், பிரதீப் உள்ளிட்ட சில மாணவர்கள் சேர்ந்து, `ஏன்டா எக்ஸாம் எழுத வந்தீங்க? சொல்றதைக் கேட்க மாட்டீங்களாடா?' என்றவாறு பலமாக அடித்துவிட்டனர். இவர்களது நோக்கம் விடுதி மாணவர்கள் தேர்வு எழுதக் கூடாது என்பதுதான். அடுத்து வந்த நாட்களில் பாரதிகண்ணன் உள்பட சில மாணவர்கள் கத்தியோடு கல்லூரி வளாகத்தில் வலம் வந்துள்ளனர். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர்.


சம்பவம் நடந்த 12-ம் தேதியன்று பாரிமுனை பஸ் நிறுத்தத்தில் அடிவாங்கிய மாணவர்கள், `தேர்வு எழுத முடியவில்லை. பாதுகாப்புக் கொடுங்கள்' என்று விடுதி மாணவர்களுக்குத் தெரிவிக்க, விடுதி மாணவர்களும் உருட்டுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளனர். அப்போது பஸ் ஸ்டாண்டில் மாணவர்களை அடித்த அய்யாத்துரையை அழைத்து அடித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கீழே விழுந்த அவருக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். அவர் இந்தத் தகவலை கல்லூரிக்குள் சுற்றிக் கொண்டிருந்த பாரதிகண்ணனுக்குத் தெரிவிக்க, ஆத்திரமான பாரதியும், ஆறுமுகமும் கத்தியைத் தீட்டிக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.


இதைக் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்ரீதேவ், உடனே போலீஸ் உதவி கமிஷனர் நாராயணமூர்த்தியிடம் புகார் கொடுத்துள்ளார். ஏ.சி.யோ, `பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங்கையும், வக்கீல் சங்கத் தலைவர் பால் கனகராஜையும் அழைத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார். போலீஸார் முதலில் புகாரை வாங்கவில்லை. மீண்டும் மீண்டும் முதல்வர் வற்புறுத்திய பின்னரே புகாரை வாங்கியுள்ளனர். இதற்குள் பாரதிகண்ணன் கத்தியை எடுத்துக் கொண்டு எதிரில் வந்த தலித் மாணவர் சித்திரைச் செல்வனை நோக்கிச் சுழற்ற, அவரது காது துண்டாகியுள்ளது. தலையில் வெட்டியதால் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் கொதித்துப் போன விடுதி மாணவர்கள் உருட்டுக் கட்டை, மண்வெட்டிகளோடு தாக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், முதல்வர் புகார் தரவில்லை என போலீஸ் தவறாகச் சொல்கிறது. அவர் செய்ய வேண்டிய கடமையை சரியாகச் செய்திருக்கிறார். அவர் மீது அரசு எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கை தேவையற்றது.


எங்கள் ஆய்வில் தெரியவந்த வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்திற்குப் பிறகு தலித் மாணவர்களை மட்டுமே குறிவைத்து போலீஸ் கைது செய்கிறது. சித்திரைச் செல்வனைக் கத்தியால் குத்திய பாரதிகண்ணன் மீது வெறும் கொலை மிரட்டல் வழக்கும், காயமடைந்த சித்திரைச் செல்வனைக் கைது செய்தது மட்டுமல்லாமல், கொலை முயற்சி வழக்கையும் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், திருப்பதியில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் கோகுல்ராஜ், உயர்நீதிமன்ற வளாக கேண்டீனில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்ற போலீஸார் `என்ன சாதி? எந்தக் கல்லூரி?' எனக் கேட்டுள்ளனர். அவரோ, `நான் எஸ்.சி. அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று சொல்லியிருக்கிறார். சம்பவத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். அதேபோல், தாக்குதலில் இறங்கிய தலித் மாணவர்களை, `அடிக்க வேண்டாம். விட்ருங்க' என ஒவ்வொருவரையும் தடுத்து விரட்டிக் கொண்டிருந்த திலீபன் ஜோ என்ற மாணவரையும் இதே பிரிவில் கைது செய்திருக்கிறார்கள்.


அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோரையும் சந்தித்தோம். இதில் ஆறுமுகம் என்ற மாணவர், `ஆமாம். நாங்கள் கத்தியோடுதான் கல்லூரிக்கு வருவோம்' என சாதாரணமாகத் தெரிவித்தார். தலித் மாணவரான சித்திரைச் செல்வனுக்குத் துணையாக இருந்த, சம்பவத்துக்குத் தொடர்பில்லாத கோவிந்தன், இளமுகில், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.


எங்கள் விசாரணையில், மாணவர்களின் நிலைக்கு முக்கியக் காரணமே தமிழக அரசுதான். சட்டக் கல்லூரியில் பணம் கட்டிப் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தந்துள்ளனர். ஆனால், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. 55 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. கூடுதல் தகுதி வளர்க்கும் வசதியோ, சரியான கல்வியோ இந்த மாணவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. திட்டமிட்டே அரசு இவர்களைப் புறக்கணிக்கிறது. ஜாதி அமைப்புகள் இந்த மாணவர்களை நெருங்குவதற்கு இதுவே காரணமாகிவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கவுன்சலிங் கூடம் நிறுவப்படுவது அவசியம்.


சட்ட அறிவை வளர்க்கும் முறையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க உள்ளோம். தமிழக அரசு சரியான தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்காலத்தில் இன்னொரு கலவரம் நடக்காமல் தடுக்கலாம்'' என்றார் முடிவாக.சட்டக் கல்லூரி கலவரத்தில் தலித் மாணவர்களைத் தடுக்க கல்லூரி முதல்வர் அழைப்பின்பேரில் சென்ற வக்கீல் ரஜினிகாந்த் நம்மிடம், "கலவரத்திற்கு முக்கியக் காரணம் எழும்பூரில் மையமாகச் செயல்படும் ஒரு ஜாதிப் பேரவைதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூவேந்தர் முன்னேற்ற முன்னணியின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்காக கல்லூரியில் இருந்து முளைப்பாரி எடுத்துச் செல்லும் வைபவங்களை நடத்தினர். சாதித் தலைவர்கள் தங்கள் சாதிகளை வளர்க்க மாணவர்களுக்கு `மூளைச் சலவை' செய்யும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


இதைவிடக் கொடூரமான பல தாக்குதல்கள் தலித் மாணவர்கள் மீது நடந்துள்ளன. அவையெல்லாம் வெளியே வரவில்லை.


இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கையில் கத்தி, கொடுவாள் போன்ற இரும்பு ஆயுதங்கள் வைத்திருந்தது பாரதிகண்ணன், ஆறுமுகம் இருவரும்தான். இதன்மூலம் திட்டமிட்ட தாக்குதலுக்குத் தயாராக வந்தது எந்தத் தரப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திருப்பித் தாக்கிய தலித் மாணவர்களுக்கு அவர்களைக் கொலை செய்யும் நோக்கமில்லை. அதனால்தான் திட்டமிட்டு அவரது கை, கால்களில் தாக்கினர். பாரதிகண்ணன் தப்பித்து ஓட அனைத்து வாய்ப்புகளும் இருந்தது. அவர் திரும்பத் திரும்ப கத்தியை எடுத்துக் குத்த வந்ததால்தான் பிரச்னை வேறு மாதிரியாகத் திரும்பியது. இதில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தாக்குதலில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் தலித் மாணவர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் உண்மை!'' என்றார்.

``சாதிப் பேரவைகளை ஒழியுங்கள்..!''


முக்குலத்தோர் மாணவர் சார்பில் நம்மிடம் பேசிய அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் கோபிநாத், "நான் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவன். பாரதிகண்ணன் தி.மு.கவில் மாணவரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். முக்குலத்தோர் பேரவை உருவாகக் காரணமே தலித் மாணவர் அமைப்புதான். அரசியல்வாதிகளின் புகலிடமே சட்டக் கல்லூரிகள்தான். வன்னியர் பேரவை, கொங்கு மாணவர் பேரவை என பல பேரவைகள் செயல்படுகின்றன. அந்தந்த ஜாதிக்குத் தகுந்த மாதிரி ஜாதித் தலைவர்கள் தூண்டிவிடுகின்றனர். இப்போது எங்கள் மாணவர்கள் 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தேவையற்றது. இந்தப் பிரச்னையை பொதுமக்களின் தீர்ப்புக்கே விட்டுவிட்டோம்'' என்றார் அவர்.

Thursday 20 November 2008

துபாயில் மரணம் அடைந்த அதிராம்பட்டினம் சகொதறருக்கக் துவாச் செய்யுங்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகியஅல்லாஹ்வின்

அன்புச்சகோதரருக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) (இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

சகோதரர் தமீம் துபாயில் வேலை பார்த்து கொண்டு இருந்தபொழுது
பைக்கில்விபத்து ஏற்பட்டு 20தினங்கள் துபாய் மருத்துவமனையில் இருதார்கள்.

நேற்று அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள்.

அந்த சகோதரருக்காக வல்லஅல்லாஹ்விடம் துவாச் செய்யுங்கள்.


Wednesday 19 November 2008

யுஸ் வெளிநாட்டு மாணவர்கள்-முதலிடத்தில் இந்தியா



வாஷிங்டன்: 2007-08ம் ஆண்டில் அமெரிக்காவில் கல்வி கற்க உலகிலேயே அதிக அளவிலான மாணவர்களை இந்தியா தான் அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 94,563 இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இணைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டில் சென்ற மாணவர்களை விட 13 சதவீதம் அதிகமாகும்.

அடுத்தபடியாக சீனா 81,127 மாணவர்களையும்
தென் கொரியா 69,124 மாணவர்களையும் அனுப்பியுள்ளது.

10 விருப்ப பாடங்கள்:

வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் சேர்ந்த படிப்புகளில் டாப் 10 படிப்புகள் விவரம்:
பிஸினஸ் மேனேஜ்மென்ட் (20%),
என்ஜினியரிங் (17%),
இயற்பியல் மற்றும் உயிரியல் தொடர்பான கல்வி (9%),
சமூக அறிவியல் (8%),
கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் (8%),
கலை மற்றும் பைன் ஆர்ட்ஸ் (6%),
சுகாதரக் கல்வி- Health Professions (5%),
சிறப்பு ஆங்கிலக் கல்வி-Intensive English Language (5%),
கல்வி (3%),
ஹூமானிடீஸ் (3%),
விவசாயம் (2%)

மாணவர்களை ஈர்க்கும் டாப் 11 பல்கலைகள்:

7வது ஆண்டாக தென் கலிபேர்னியா பல்கலைக்கழகம் தான் தொடர்ந்து அதிக அளவிலான வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு 7,189 வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளது.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள கல்வி நிலையஙகள்,

நியூயார்க் பல்கலைக்கழகம்- 6,404 வெளிநாட்டு மாணவர்கள்
கொலம்பியா பல்கலைக்கழகம்- 6297
இலினாய்ஸ் பல்கலைக்கழகம் - 5,933
புர்டியூ பல்கலைக்கழகம் - 5,772
மிச்சிகன் பல்கலைக்கழகம் - 5,748
லாஸ் ஏஞ்செலஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகம்- 5,557
டெக்ஸஸ் பல்கலைக்கழகம்- 5,550
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்- 4,948
பாஸ்டன் பல்கலைக்கழகம்- 4,948
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் - 4,610 வெளிநாட்டு மாணவர்கள்.

ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு 7 சதவீதம் அதிகரித்து 6,23,805 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளதாம்.

aol தமிழ்

Monday 17 November 2008

இ‌ந்‌து‌த்துவா பய‌ங்கரவாத‌ அமை‌ப்பை உருவா‌க்க ராணுவ ‌நி‌தியை‌ பய‌ன்படு‌த்‌திய புரோஹ‌ி‌த்!

மாலேகா‌ன் கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ராணுவ அ‌திகா‌ரி லெ‌ப்டின‌ன்‌ட் க‌ர்னல் ‌பி.எ‌ஸ். புரோஹ‌ி‌த் ராணுவ‌ப் புலனா‌ய்வு‌த் துறை‌ ‌நி‌தியை‌ப் பய‌ங்கரவாத நடவடி‌க்கைகளு‌க்கு பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர் எ‌ன்று அவ‌ரிட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌‌‌ந்து‌ள்ளது.

மாலேகா‌ன் கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌‌‌ல் இதுவரை 9 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் ஓ‌ய்வுபெ‌ற்ற ராணுவ மேஜ‌ர் ரமே‌ஷ் ‌சி‌‌வ்‌ஜி உப‌த்யாய, ச‌மீ‌ர் கு‌ல்க‌ர்‌னி, அஜ‌‌ய் ஏ‌க்நா‌த் ரஹ‌ி‌ர்க‌ர், ராகே‌ஷ் த‌த்தா‌த்ரேயா த‌வ்டே, ஜக‌தீ‌ஷ் ‌சி‌ந்தாம‌ன் மா‌ட்ரே ஆ‌கிய 5 பே‌ரி‌ன் காவ‌ல் துறை காவ‌ல் முடிவடை‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து, இவ‌ர்க‌ள் அனைவரு‌ம்‌ நவ‌ம்ப‌ர் 17 வரை‌யிலான ‌நீ‌திம‌‌ன்ற‌க் காவ‌‌லி‌ற்கு‌த் ‌தி‌ங்க‌ட்‌கிழமை அனு‌ப்ப‌ப்ப‌ட்டன‌ர்.

காவ‌ல் துறை ‌விசாரணை‌யி‌ல் உ‌ள்ள லெ‌ப்டின‌ன்‌ட் க‌ர்ன‌‌ல் ‌பி.எ‌ஸ். புரோஹ‌ி‌த் நவ‌ம்ப‌ர் 15 ஆ‌ம் தே‌தி ‌நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்‌ப்படு‌த்த‌ப்படுவா‌ர். அவ‌ர் உ‌ள்ப‌ட 4 பே‌ரிடமு‌ம் ‌தீ‌விர ‌விசாரணை நட‌ந்து வரு‌கிறது.

மாலேகா‌ன் ச‌தி‌‌யி‌ல் புரோஹ‌ி‌த்‌ மு‌க்‌கிய‌க் கு‌ற்றவா‌ளியாக இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம், ராணுவ‌ப் புலனா‌ய்வு‌த் துறை‌க்கு ஒது‌க்க‌ப்ப‌ட்ட ‌நி‌தியை அவ‌ர் பய‌ங்கரவாத நடவடி‌க்கைகளு‌க்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர் எ‌ன்று முத‌ல்க‌ட்ட ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது எ‌ன்று‌ம் அவ‌ரிட‌ம் ‌விசாரணை நட‌த்‌தி வரு‌ம் அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர்.

அ‌பின‌வ் பார‌த் எ‌ன்ற ‌சி‌றிய இ‌ந்‌து‌த்துவா அமை‌ப்பை உருவா‌க்க ராணுவ ‌நி‌தியை‌ப் புரோஹ‌ி‌த் பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர் எ‌ன்பது தெ‌ரிய வ‌‌ந்து‌ள்ளது.

மேலு‌ம், 2005- 06 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் புனே‌‌‌வி‌‌ல் ராணுவ‌ப் புலனா‌ய்வு‌த் துறை‌யி‌ல் ப‌‌‌ணியம‌ர்‌த்த‌ப்ப‌ட்டபோது இ‌ந்து‌த்துவா அமை‌ப்புக‌‌‌ளி‌ன் தலைவ‌ர்களுட‌னான தொட‌ர்பை புரோஹ‌ி‌த் வள‌ர்‌த்து‌க் கொ‌ண்டு உ‌ள்ளா‌ர் எ‌ன்பது‌ம் ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்து‌‌ள்ளது

Sunday 16 November 2008

~மக்கள் உரிமை~யின் மண்டையில் உறைக்கட்டும்!

த.மு.மு.க. புதிதாக அரசியல் கட்சி தொடங்குகிறதாம் - தொடங்கட்டும்...ஆனால்..... அதற்கு ஏன் முஸ்லிம் லீகை வம்புக்கு இழுக்க வேண்டும்?
புதிய கட்சியை விரும்பி தொடங்கவில்லையாம்... மாறாக சமுதாய நிர்ப்பந்தத்தில் தொடங்குகிறார்களாம்... அவர்களின் ~மக்கள் உரிமை~ வார ஏடு சொல்கிறது.
விருப்பம் எப்போதிருந்து - ஏன் வந்தது என்பதற்கு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) அவர்களின் ~முன்னாள் நண்பர்கள் பதில் சொல்லியும் ~உணர்வு~ வரவில்லையா?
அவர்கள் கட்சி தொடங்க சமுதாய நிர்ப்பந்தமாம் - அடடடடடா.....தமிழ்நாட்டின் பன்னிரண்டாயிரம் பள்ளிவாயில் களும் மஹல்லா ஜமாஅத்தும், ~நீங்கள் கட்சி தொடங்கி எங்களை காப்பாற்றுங்கள் என்று வரிசையில் நின்றல்லவா இவர்களை கெஞ்சினார்கள்?
மாபெரும் முஸ்லிம் லீக் மாநாடும் சமுதாயம், யார் பக்கம் எனச் சொல்லிக் காட்டியது. பங்கேற்ற தோழமைத் தலைவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். பத்திரிகைகள் அனைத்தும் வித்தியாசம் பாராமல் வியந்து எழுதின. ஆனால்...~மக்கள் உரிமைக்கு~ மட்டும் இது ~நோயாளி கட்சி~யாக தெரிகிறதாம்.

அவர்களுக்கு அப்படித்தான் தெரியும்.

கருப்புக் கண்ணாடி உயர்த்தப்பட்ட சிவப்பு விளக்கு சுழலும் ஏ.சி. காரில் ஓசி பயணம் செல்பவர்களுக்கு இந்த மாபெரும் எழுச்சி தெரியவா போகிறது?தென்காசி கலவரம் - முஸ்லிம் சிறைவாசிகள் பிரச்சினையில் முஸ்லிம் லீக் குரல் எதிரொலிக்கவில்லையாம்.சொல்வது யார் தெரியுமா......?
நம் சமுதாயத்தின் அணிவகுப்பை சீர்குலைத்தவர்கள்!சகோதர சமுதாயங்களோடு நல்லுறவை நாசமாக்கி யவர்கள் - அப்பாவி இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி ~உள்ளே~ தள்ளி விட்டு அவர்கள் குடும்பங்களை நடுவீதிக்கு கொண்டு வந்தவர்கள்!!
இவர்கள் கூற்றுக்கு இந்த மாதத்தின் அத்தனை முஸ்லிம் பத்திரிகைகளும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
என்ன செய்வது? இந்த முழக்கம் இவர்களுக்கு மட்டும் கேட்கவில்லையெனில் கோளாறு அவர்கள் காதுகளில்தான்!
ஏன்....~வக்ஃபு வாரிய தலைவர்~ பதவியை வாதாடி போராடி கெஞ்சி கூத்தாடி கேட்டுப் பெற்றதற்கு பதில் ~முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை~யை கேட்டுப் பெற்றிருந்தால்...
இல்லை.... இல்லை.....10 ஆண்டு காலம் சிறையில் வாடும் த.மு.மு.க.வின் நிறுவனத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்களின் விடுதலையை மட்டுமாவது கேட்டுப் பெற்றிருந்தால் இவர்கள்தான் உண்மையான சமுதாய காவலர்கள் என பாராட்டு விழாவே நடத்தியிருப்போம் என்று சமுதாயம் சொல்கிறது.
ஆனால்.... எந்த இயக்கத்தால் வளர்ந்தார்களோ அந்த ~சிமி~ இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்டதையே கண்டுகொள்ளாதவர்கள் இந்த அப்பாவிகளை கண்டுகொள்ளப் போகிறார்களா என சமுதாயம் முணுமுணுப்பதும் நம் காதில் விழுகிறது.

'இறைவனை நம்பி தூய எண்ணங்களோடு" கட்சிதொடங்குகிறார்களாம். அடடா... எவ்வளவு இறை பக்தி! எத்தனை தூய எண்ணம்!! 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்றைக்கும் அரசியலுக்கு வரமாட்டோம்" என பொது மேடையில் சத்தியம் செய்தவர்கள்...
~அந்த சத்தியம் என்னாயிற்று?
என அல்லாஹ் கேட்கவா போகிறான் என்ற அலட்சியத்தில் இன்று அவனை வம்புக்கு இழுக்கின்றனர்.

'சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும், சாக்கடை அரசியலை விட்டும் பாதுகாப்பு தேடுகிறோம்" என மேடைதோறும் சொல்லிவிட்டு, இன்று என்ன தூய எண்ணத்தோடு அரசியல் கட்சி தொடங்குகிறார்களே...?
சாக்கடை சுத்தமாகி விட்டதா? அல்லது அவர்கள் சாக்கடையாகி விட்டார்களா...?
என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தெரியாது.
~பொதுச் செயலாளருக்கே~ வாரியத் தலைவர் பதவி என்றால் ~தலைவருக்கும்~ ஒரு பதவி வேண்டாமா? என்ற ஆசையின் வெளிப்பாடுதான் அவர்களின் அரசியல் பிரசவம்.
இதை சமுதாயம் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறது.

தூய எண்ணத்தோடு கட்சி தொடங்குபவர்களுக்கு ஒரு கேள்வி:

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் முஸ்லிம் லீக் தலைவர்களை சுயநலவாதிகள் என வர்ணித்தவர்களே...!
இந்த ஒப்பந்தம் தொடர்பாக முஸ்லிம் லீகின் நிலைப்பாட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.இதுதொடர்பான செய்திகளும், சிறப்புக் கட்டுரையும் ~மணிச்சுடரில்~ வெளிவந்துள்ளன.

புகைக்கு பயந்து நெருப்பில் விழுவது புத்திசாலித்தனம் அல்ல!அணுசக்தி ஒப்பந்தம் என்ற புகையைவிட பாரதீய ஜனதா ஆட்சி என்ற நெருப்பு பயங்கரமானது.

எனவே....த.மு.மு.க. ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டாம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. ஒரு பிரதான கட்சி. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அது ஆதரவளிக்கிறது.இப்படி ஆதரவளிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு அடையாளமாக தி.மு.க. எங்களுக்குத் தந்த வக்ஃபு வாரிய தலைவர் பதவியை திரும்ப தருகிறோம் என்று சொல்லி பதவி விலகல் கடிதத்தையும், சிவப்பு விளக்கு காரையும் கொடுத்து விட்டு தங்கள் தூய எண்ணத்தை நிரூபித்து காட்டட்டும்.

அதற்கு சுயநலம் தடையாக இருக்கும் எனில் த.மு.மு.க. வாயை மூடிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேன்களில் ஜனாஸா வேலையை மட்டும் பார்க்கட்டும்.

நன்றி :முஸ்லிம் லீக் அதிரை கிளை

Thursday 13 November 2008

வெட்கித் தலைகுனி!

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அந்த மோதலை, கீழே விழுந்து கிடக்கும் மாணவரை நான்கைந்து பேர் கொலை வெறியுடன் கட்டையால் அடிப்பதை, அதற்கு முன்னர் அடிப்பட்டுக் கிடந்த அந்த மாணவர் அடிபடும் தனது சக மாணவரைக் காப்பாற்ற கத்தியை எடுத்துக் கொண்டு பாய்வதை... நாள் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளை, பத்திரிக்கைகளில் வெளியான அந்தப் புகைப்படங்களை, மருத்துவமனையில் கட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் அந்த மாணவர்களின் படங்களை பார்‌ப்போர் நெஞ்சமெல்லாம் பதறியிருக்கும்.

படிக்கச் சென்ற மாணவர்கள், அதுவும் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்கள், தாங்கள் அடிக்க வேண்டிய மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வருவதற்காக கட்டை, கம்பி, மண் வெட்டி ஆகியவற்றுடன் காத்திருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி, இரண்டு மாணவர்களைப் மற்ற பல மாணவர்கள் கொலை வெறியோடு தாக்குவதையும் எவ்வித பதற்றமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்த காட்சியையும் கண்ணுற்ற மக்களுக்கு உள்ளபடியே நெஞ்சு பற்றி எரிந்திருக்கும்.ஒரு போர்‌க்களம் போல மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகிற நிலையிலும், யாருக்கோ வந்த விருந்து போல கவலைப்படாமல் தனது அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த சட்டக் கல்லூரியின் முதல்வரின் நடத்தை, அவர் என்ன கல்லூரி முதல்வரா அல்லது அடிதடிக் கூட்டத்தின் தலைவரா என்று கேள்வியையும் எழுப்பியிருக்கும்.

பிரச்சனை ஏற்படப்போகிறது என்று தெரிந்தும், ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை.தடுப்பு நடவடிக்கை எடுக்காத ஒரு காவல் அதிகாரி அத்தனை காவலர்களுடன் எதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே அங்கு இருந்ததார் என்பதும் புரியவில்லை.கல்லூரி முதல்வர் புகார் தரும் வரை நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை என்று முடிவோடு இருந்த அந்த காவல் அதிகாரி, எதற்காக தனது படையினருடன் அங்கு வந்து காத்திருக்க வேண்டும்? திரைப்படத்தில் கூட இப்படியொரு காட்சியைக் காணாத மக்களுக்கு காவல் துறையினரின் நடவடிக்கை மிகவும் வினோதமாகத் தெரிகிறது.

இதைப்பற்றி பேசிய மற்ற மாணவர்கள், இதையெல்லாம் முன்பே தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகம் முதல் காவல் துறை வரை தடுத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வை, நடக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

அம்பேத்கர் பெயரைத் தவிர்த்தவர்களை எதிர்த்துப் புறப்பட்ட அந்த மாணவர்கள் யாராவது அவருடைய நூல்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்களா? படித்திருந்தால் இந்தச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முயன்றிருப்பார்களே? இப்படி கட்டையை தூக்கிக்கொண்டு காத்திருந்து அடிப்பதில் கவனத்தை செலுத்தியிருக்க மாட்டார்களே? இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.

இந்த சாதிய மாயை? தெளியுமா நமது சமூக சிந்தனை?

நன்றி : வெப் துனியா

இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது!- பி.ஜே அவர்களின் உரை.

தினமணி பத்திரிக்கையில் வெளியான செய்தி

தினமணி பத்திரிக்கையில் 07-11-2008 அன்று வெளியான
செய்தி

நன்றி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Wednesday 12 November 2008

கோமா நிலைக்கு சென்றுவிட்ட அதிராம்பட்டினம் சகொதறருக்கக் துவாச் செய்யுங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)


அன்புச்சகோதரருக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) (இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

கோமா நிலைக்கு சென்றுவிட்ட சகோதரருக்காக
துவாச் செய்யுங்கள்

சகோதரர் தமீம் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் பைக்கில் சென்று கொண்டு இருந்தபொழுது விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டு 20தினங்களாகிறது. நேற்று மாலை முதல் கோமா நிலைக்கு வந்துவிட்டார்.

(துபாய் மருத்துவமனையில் இருக்கிறார்) அபாயகட்டத்தில் இருப்பதாகவும் 48மணி நேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்று டாக்டர் சொல்கிறார். நான்கு பிள்ளைக்கு தந்தையான தமீம் பூரண குணமாகி நலம் பெற வல்ல அல்லாஹ்விடம் துவாச் செய்யுங்கள்.

சகோதரன்
அலாவுதீன் எஸ்.

அதிரை தவ்ஹீத் பள்ளிவாசல்





























ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் தொடர்பு! பெண் சாமியார் சிக்குகிறார்!!




மாலேகான் குண்டுவெடிப்பு தொடர் பாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பயங்க ரவாதி பிரக்யாசிங் மற்றும் ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் புரோஹிதர் என்ற அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சிலரும் சதிச்செயலில் தொடர்பு டையவர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இந்தியாவை பரபரப்பில் ஆழ்த்தின.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் இவர் களை கண்காணித்தே தீரவேண்டிய நிலைக்கு அவர்களின் பயங்கரவாதச் செயல்களின் விளைவு இருந்தது. சங் பரிவார் சதிவலைப் பின்னல்கள் இந்தியா முழுவதும் பரவி நாட்டையே அபாயத்தில் கொண்டு சென்றுள்ளதாக நடுநிலை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான பெண் சாமி யாரை ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க விரும்பு வதாக ஆந்திர மாநில காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.



இதன்மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாத ஆக்டோபஸ் கரங்கள் இந்தியா முழுவதும் நீண்டுள்ள தகவல்கள் நாட் டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.



கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு நிகழ்ந் தது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தொழுகை செய்யும் அந்தப் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த் தியது, அதில் பலர் பலியானார்கள். பதற்றம் அடைந்த மக்கள் அங்கு மிங்கும் ஓடினர். ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடக்க காவல்துறை கொடூரமான முறைகளைக் கையாண் டது. முஸ்லிம் இளைஞர்கள் மூர்க்கத் தனமாக தாக்கப்பட்டனர். குண்டுவெடிப் பில் இறந்தவர்களை விட அதிகமாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்த வர்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்ட தால் மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிவாசலில் குண்டுவெடித்தால் என்ன? அதற்கும் முஸ்லிம் இளைஞர் களைத்தான் வளைத்துப் பிடிப்போம், ஏனெனில் சொந்த வீட்டில், ஏன் தனக்குத் தானே குண்டு வைத்துக் கொள்ளும் கோமா ளிக் கிறுக்கர்களா கவே முஸ்லிம் களைக் கருதுகி றோம் என சொல்லா மல் சொல்லும் வித மாக முஸ்லிம் களைத் துன்புறுத் தும் கொடுமையையும் ஆந்திர காவல் துறையினர் நிகழ்த்தினார்கள்.



முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறி வித்த டாக்டர் ராஜசேகர ரெட்டியின் இமேஜ் பொடிப் பொடியாய் நொறுங் கியது.



குஜராத் இனப் படுகொலையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் முஸ்லிம் களைக் கருவறுக்கும் வேலைகளை செய்வதில் இந்திய மாநிலங் களிலேயே முதலிடத்தை மகாராஷ்டிர மாநில அரசும்,


இரண்டாவது இடத்தை ஆந்திராவும் பெற்று விட்ட தாக அன்றே மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந் தனர்.



உண்மை அறியும் குழுவினரைக் கூட கைது செய்து கொடுமை செய்யும் அளவுக்கு ஆந்திர அரசின் மூர்க்கத் தனம் இருந்தது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு செல்லும் போக்கு உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்து டன் இல்லை என நடு நிலையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் முஸ்லிம்கள் நிறைந்த மாலேகானில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பள்ளிவாசல் களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. முஸ்லிம்கள் அதிகமாக பலியான நிகழ் விலும் கூட முஸ்லிம்களை பலிகடா வாக்கிய கொடூரங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மக்களின் நம்பிக்கை தகர்ந் தது.

இந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரிவார் பயங்கரவாதி பெண் சாமியார் பிரக்யாசிங் மற்றும் முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளின் கைவரிசை இருப்ப தாக செய்திகள் வெளிவரத் தொடங்கி யதை அடுத்து மகாராஷ்டிர மாநில தீவிர வாத தடுப்புப் படையின் அதிரடி புலனாய்வின் சிக்கிய சங்கும்பல் தீவிர விசா ரணை வளையத்தில் சிக்கியது.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் பிலும் இந்த காவி பயங்கரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என பூர்வாங்க சந் தேகத்தை ஆந்திர காவல்துறை எழுப்பியதோடு, அது குறித்த விசாரணையிலும் குதித்திருக்கிறது.



இதற்காக பெண் சாமியார் பிரக்யா சிங் விசாரிக்கப்படுவார் என ஆந்திர காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை சென்று மகாராஷ்டிர காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புலனாய்வு குறித்து தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியா கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் சாமியார் உள்ளிட்ட சங்பயங்கரவாதிகள் ஆந்திர காவல்துறையினரால் விசாரிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிடுக்கிப் பிடிக்குள் வி.ஹெச்.பி.

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரி வார் சதிகாரர்கள் தொடர்ந்து சிக்கிவரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மகாராஷ்டிர மாநில காவல் துறையினர் தீவிர புலனாய்வில் இறங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் ராணுவ புல்லுருவி குல்கர்னியுடன் குஜராத் மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களுடனான சதித் தொடர்பு குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததை யடுத்து குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

அபூசாலிஹ்
thanks for : adirai thameem

Tuesday 11 November 2008

மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு!

மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு!

மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களுக்கும், கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டு பேருக்கும் தொடர்பு உள்ளதை உத்தரப் பிரதேச காவல்துறையும், அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கான்பூர் நகரத்தில், ராஜீவ் நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்த பூபேந்தர் சிங் சோப்ரா, ராஜீவ் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.அவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து ஏராளமான அளவிற்கு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது அது வெடித்து அவர்கள் உயிரிழந்தது என்று உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில், மாலேகான் குண்டு வெடிப்பில் நேரடி தொடர்புடையவராக கைது செய்யப்பட்டிருக்கும் பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட கும்பலிற்கு, மராட்டியத்தையும் தாண்டி இந்து மதத் தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி, மிக முக்கியமாக, மாலேகானில் வெடித்த குண்டுகளும், கான்பூரில் வெடித்த குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருக்கிறது என்று தடவியல் துறை உறுதி செய்துள்ளதாக உ.பி. காவல் துறை தெரிவித்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்பில் இறந்த இருவருடன் தொடர்புடையவர்கள் பற்றி எந்த ஆதாரமும் உ.பி. காவல் துறைக்கு கிட்டவில்லை.

1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்த பல்வேறு மத ரீதியான குற்றச் செயல்களில் பூபேந்தர் சிங்கிற்கு தொடர்பு இருந்தது மட்டுமின்றி, விஸ்வ ஹிந்து பரிஷத், துர்கா வாஹினி, சிவசேனையின் ராஷ்ட்ரிய முக்தி வாஹினி ஆகிய இயக்கங்களுடன் பூபேந்தருக்கு தொடர்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மாலேகான் தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து ஆராய்ந்துவரும் மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல் பிரிவினருடன் தொடர்பு கொண்டு செயலாற்றி வருவதாக தெரிவித்த உ.பி. காவல் துறையினர், கான்பூரில் கொல்லப்பட்ட பூபேந்திரின் செல் பேசியை ஆராய்ந்தபோது இந்து மத தீவிரவாதிகளுடன் அவருக்கு பரவலான தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

“எங்களுடைய விசாரணையின் ஒரே இலக்கு என்னவெனில், பிரக்யா சிங் தாக்கூருக்கும் பூபேந்தருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை உறுதிசெய்வதே” என்று உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை துணை அமைச்சராக உள்ள சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றத் தொகுதி கான்பூர் என்பதால், இந்த வழக்கில் மத்திய அரசின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

Sunday 9 November 2008

மாலேகான் குண்டுவெடிப்பு


மாலேகான் குண்டுவெடிப்பு: இருவருக்கு நீதிமன்றக் காவல்!

மராட்டிய மாநிலம் மாலேகானில் உள்ள மசூதிக்கு அருகில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய இராணுவ வீரர் உட்பட இருவரை நவம்பர் 10 தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலேகான் மசூதி அருகே அன்று நடந்து குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், 101 பேர் காயமுற்றனர். இதில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை ஏற்பாடு செய்து அளித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாய் ஆகிய இருவரும் இன்று நாசிக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்த இவர்களில் ரமேஷ் உபாத்யாய் இந்திய இராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்தின் அடிப்படையிலேயே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மேஜர் ரமேஷ், நாட்டிற்கு சேவை புரிந்த தான் எந்த விதத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது கிடையாது என்றும, தன்னிடம் இருந்து உண்மையை வரவழைக்க நார்கோ சோதனை நடத்திலும் அதற்கு தனது உடல் நிலை அனுமதிக்குமானால் முழு விருப்பத்துடன் சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூருடன் ரமேஷ் நெருங்கியத் தொடர்பில் இருந்தார் என்றும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே அவரை கைது செய்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் மிஸ்ரா கூறியுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்!

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்து ஜாகிரன் மஞ்ச் என்ற இந்து அமைப்பே காரணம் என கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் நகரில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது.அதே நாளில், குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது.
இதில் மொத்தமாக 6 பேர் உயிரிழந்தனர்.
மாலேகானில் 5 பேர் இறந்தனர்.
இரு சம்பவங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகியுள்ளனர் என்று மாலேகான் நகர காவல்துறை இணை ஆணையர் ஹேமந்த் கர்கரே தெரிவித்துள்ளார். மேல் விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.கைது செய்யப்பட்ட 3 பேரும் நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முன்னதாக ஷியாம் சாஹு, திலீப் நஹர், சிவநாராயணன் சிங் மற்றும் தர்மேந்திரா பைராகி ஆகிய நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர். இவர்கள் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்து அமைப்பே காரணம்
இதற்கிடைேய, இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற இந்து அமைப்பே மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரக்யா சிங் தாக்கூர் என்கிற துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் (இதில்தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது) சூரத்தைச் ேசர்ந்த ஒருவருக்கு சொந்தமானது.
இவருக்கு இந்து அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கிருந்துதான் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான பல முக்கிய துப்புக்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.
மோடாசா குண்டுவெடிப்புக்கும் இந்து ஜாகிரண் மஞ்ச்தான் காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மாலேகான்-2 ராணுவ பள்ளி ஊழியர்கள் கைது

நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ராணுவப் பள்ளி ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் அடுத்தடுத்து பலரைக் கைது செய்து வருகின்றனர்.
முதலில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் 2 பேர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர். இந் நிலையில் நாசிக்கைச் சேர்ந்த போன்ஸாலா ராணுவப் பள்ளியை நடத்தி வந்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் ஷைலேஷ் ரெய்க்கர் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்புக்கு முதல் நாள் (செப்டம்பர் 28) இவரும், பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவரான சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாயா ஆகியோரும் சந்தித்துப் பேசியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதே ராணுவப் பள்ளியைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.
தீவிரவாத பெண் சாமியாருடன் கூட்டு-லெப்டினென்ட் கர்னல் சிக்கினார்

போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஒருவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்துள்ளனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது.

இதையடுத்து அந்தஅமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் இருவர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர்.இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பச்மார்ஹி பகுதியைச் சேர்ந்த ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஒருவர் மகாராஷ்டிர போலீஸ் வசம் சிக்கியுள்ளார்.அவருக்கும்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த அதிகாரியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

உடனடியாக அவர் மும்பை கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

பெண் சாமியாருக்கு சீட்-உமா பாரதி:
இதற்கிடையே பெண் சாமியார் பிரக்யா சிங்கு விரும்பினால், மத்திய பிரதேசத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்படு்ம் என உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சி தெரிவித்துள்ளது.
மூலம் தட்ஸ்தமிழ்
மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யபப்பட்டனர்.இந்நிலையில், ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி வரும் புரோஹித் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவரையும் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீகாந்த் புரோஹித், ராணுவத்தில் அதிகாரியாக இருப்பதால் அவரை போலீஸார் முறைப்படி தங்களிடம் ஒப்படைக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து ராணுவமும், புரோஹித்தை தீவிரவாத தடுப்பு சட்டப் பிரிவு போலீஸிடம் ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். புரோகித் அபினவ் பாரத் என்ற அமைப்பை தொடங்கியதாக கருதப்படுகிறது.

இது ஒரு இந்து தீவிரவாத அமைப்பும் என்று கருதப்படுகிறது.

புரோஹித்துக்கும், ரமேஷ் உபாத்யாயாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

புரோகித் ரமேஸ்க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் புரோகித் ரமேஸை மொபைல் எண்ணை மாற்றும் படியும் வற்புறுத்தியிருக்கிறார்.

இந்தியாவில் முதல் முறையாக ராணுவத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிடிப்பட்டுருக்கிறார்.

மாலேகான் : மும்பையில் சிபிஐ அதிகாரி விசாரணை

மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளை, மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) உயர் அதிகாரி ஒருவர் மும்பையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி புரோஹித் தன் மீதான குற்றச்சாற்றை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சிபிஐ அதிகாரியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இணை இயக்குனர் நிலையிலான சிபிஐ அதிகாரி மும்பையில், வெள்ளிக்கிழமை முழுவதும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினருடன் இருந்து ஆலோசனை நடத்தியதாக அதிகாரிகளை மேற்கோள்காடி பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிலரையும் சிபிஐ அதிகாரி சந்தித்ததாகவும் அந்த தகவல் கூறுகிறது.

சாது ஒருவரும், ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், தற்பொழுது ராணுவத்தில் பணியாறறிவரும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உட்பட இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான புரோஹித் வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இதனிடையே மேலும் சில ராணுவ அதிகாரிகளுக்கும் மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,விசாரணையில் குண்டுவெடிப்பில் தமக்குள்ள தொடர்பை புரோகித் ஒப்புக் கொண்டுள்ளார்.

மாலேகானில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 8 November 2008

குண்டு வைப்பது யார்? என்ற தலைப்பில் பி.ஜே ஆற்றிய உரை!

'குண்டு வைப்பது யார்?' என்ற தலைப்பில் 01-11-2008 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பி.ஜே அவர்கள் ஆற்றிய 1.30 மணிநேர உரை (வீடியோ)

உண்மையான தீவிரவாதிகள் யார் என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் விரிவான உரை!


ஆன்லைனில் பார்க்க : www.tntj.net