Saturday 28 June 2008

இந்து பயங்கரவாதிகளின் வீடுகளில் வண்டி வண்டியாக வெடிமருந்து!


முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று ஜோடிக்கப்பட்டு வரும் சூழலில், தானே நகர தியேட்டர் ஒன்றில் வெடித்த வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன் படுத்தப் பட்ட வெடிமருந்துகள், மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் இந்துத் தீவிரவாதிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.


புதிய மும்பையின் வாஷி பகுதியில் உள்ள விஷ்ணு தாஸ் பாவே அரங்கத்திலும் தாணே பகுதியில் உள்ள கட்காரி ரங்கயாதன் அரங்கத்திலும் மிகப்பெரிய உயிர்சேதத்தை விளைவிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்ட நால்வரை மஹாராஷ்டிரக் காவல் துறைக் கைது செய்துள்ளது.


இந்துத் தீவிரவாதிகளின் பெயர்கள் பின்வருமாறு:


1. மங்கேஷ் தின்கர் நிகம்

2. ரமேஷ் ஹனுமன்த் கட்கரி

3. சந்தோஷ் ஆங்ரே மற்றும்

4. விக்ரம் பாவே


கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் Janjagruti Samiti மற்றும் Sanatan Sanstha ஆகிய ஹிந்துத்துவாக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


ராய்காட் மாவட்டத்திலுள்ள வார்சாய் கிராமத்தில் உள்ள விக்ரம் பாவே மற்றும் மங்கேஷ் தின்கர் நிகம் ஆகியோரின் வீட்டிலும் விளைநிலத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது.


அதில் துப்பாக்கிகளும், 92 குண்டுகளும், 20 டெட்டோனேட்டர் குண்டுகளும், 19 ஜெலட்டின் குச்சிகளும், பெரும் அழிவை ஏற்படுத்தவல்ல மிக அதிக அளவிலான அமோனியம் நைட்ரேட் தூளும் கைப்பற்றப்பட்டன.


இது தவிர டைம் பாம் மற்றும் ரிமோட் கண்ரோலில் வெடிக்கச் செய்யும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைமர்களும் வோல்ட்டேஜ் மீட்டர்களும் ரேடியோ சர்க்கியூட் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன.


பயங்கரவாதத் தடுப்புப் படையினரின் இந்தத் திடீர் சோதனையைப் பற்றி எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு வெடிமருந்துகளை அவசரமாக வெடிக்க முயன்ற ஹரி பாவ் தேவ்கர் என்பவனையும் காவல்துறை கைது செய்தது.


இதில் மங்கேஷ் என்பவன், கடுமையான விசாரணைக்குப் பிறகே பெரும் அளவிலான வெடிமருந்துகளை சட்டாரா மாநிலத்தில் மறைத்து வைத்துள்ளதை ஒப்புக் கொண்டதாகக் காவல் துறை அறிவித்துள்ளது.


இந்தத் தகவல் கிடைத்தவுடன் விரைந்த காவல் துறை, அவன் கொடுத்தத் தகவல்படி, வெடிகுண்டுகள் செய்யப் பயன் படுத்தும் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது.


இதன் மூலம் நடக்கவிருந்த இன்னொரு மிகப் பெரும் சமூக அழிவு தடுக்கப்பட்டுள்ளது.தானே நகரத்தின் கட்காரி ரங்கயாதன் அரங்கத்தில் இவர்கள் நிகழ்த்திய கொடூர வெடிகுண்டு சம்பவத்தின் மூலம் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.


அதில் இவர்கள் டெட்டோனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைம் பாம் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.


புதிய மும்பையிலுள்ள விஷ்ணு தாஸ் பாவே தியேட்டரில் இவர்கள் நிகழ்த்த இருந்த மிகப் பெரும் உயிர்ச்சேதம் இறுதி நேரத்தில் கிடைத்த தகவல்கள் மூலமாக குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 21 June 2008

ஊடக வலையில் முஸ்லிம்கள்

பெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கை வகிக்கிறது. இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிகொண்டுருக்கிறது. செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதனை உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது ஊடகத்தின் உச்சானி கொம்பாக இருக்கின்ற இணையதளம். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை முழுவீச்சுடன் செலுத்தியுள்ளது.

இன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் கலங்கப்படுத்தபடுகிறது, காரணம் இன்று ஊடகம் ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.

ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர். ஆதிக்கவாதிகள் நிரம்பி வழியும் ஊடகங்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொண்டு வருகின்றன. ‘முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள்' என்ற மதவெறிக் கருத்தை இவை வெளிப்படையாக மக்களிடையே பரப்புகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியாமல் மூலையில் முடங்கிக்கிடக்கிறார்கள். கல்வியில் முன்னேறாத சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும்? மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதே மீடியாவைக்கொண்டு பதில் தாக்குதல் எப்படிக் கொடுக்கமுடியும்.

இஸ்லாத்திற்கு எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துப்போரில் முழுவீச்சுடன் செயல்படுகின்றனர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தொலைகாட்சி பார்ப்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் சுலபமாக விழ வைத்திருக்கிறார்கள்.

ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற ஊடகம், இன்னொரு பக்கம் தீவிரவாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் பாசிசவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது.

மாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் தியாகிகள் எனப்போற்றப் படுகிறார்கள் ஊடகங்களால்.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா?பர்தா பாதுகாப்பு என்கிறது இஸ்லாம். இல்லை பழமைவாதம் என்கிறார்கள் எதிரிகள். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருந்தால் ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப்போரில் வாள் வீசுவது யார்? சற்று சிந்தனை செய்யவேண்டாமா? இன்று ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கெதிரான அவர்கள் செய்யும் பனிப்போரில் உச்சகட்டத்தை அடைந்துயிருக்கின்றார்கள் என்றால் யார் காரணம்? நாமல்லவா சகோதரர்களே! இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. 9/11 நிகழ்வுகளுக்கு பின்பு இஸ்லாம் பயங்கரவாதம் என்கின்ற ஒரு தவறுதலான கருத்தாக்கம் ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தைப் பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியாவில் மதவெறியர்களின் கைப்பாவையாகச் செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக் கைதிகள் கொல்லப்படுவது போன்ற வெறிச்செயல்களை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை. உலக வர்த்தகமையக் கட்டடத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், பாதுகாப்புப் படைகளால் கொல்லப்படும் காஷ்மீரியாகட்டும், வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வேதனையும் மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.
இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே! ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக - மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.

சோவியத் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமே பெரிய எதிரியாகத் தெரிகிறது. காரணம் அங்கெல்லாம் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இஸ்லாம் தங்கள் நாடுகளை ஆட்கொண்டு விடுமோ என அஞ்சுகிறார்கள். எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போட வேண்டும் என்ற தீய நோக்கோடு, அனைத்து ஊடகங்களும் அமெரிக்க, யூத பணத்திற்கு அடிமையாகி அவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே மாறி மாறி ஊடகத்தின் மூலமாக பரப்பி வருகின்றன.

ஆனால் என்ன செய்வது, அறிவின் பிறப்பிடமான இஸ்லாமிய மக்களுக்கு கல்வியே இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதற்கு வறுமையும் மிகப்பெரிய எதிரியாக உள்ளது, இந்த வறுமையை போக்கக்கூடிய இடஒதுக்கீடும் பாசிசத்திற்கு எதிராக உள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

மனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண்-பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும்? பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது. பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம்பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம் அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை! எமக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது.

மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம்தான். பீகாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்குகூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம்தான் உள்ளது. குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத்திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.

முஸ்லிம்கள் உயர் பதவிகளில், மேற்கு வங்கத்தில் பூஜ்யம். மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில்கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம்தான் உள்ளனர். மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில்கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ அவர்களின் பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர். வகுப்புவாதிகள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் ‘குற்றவாளி'களாகவும், பாசிசவாதிகள் ‘நீதிமான்'களாகவும் உள்ளனர்.

இவ்வாறு இஸ்லாமிய மக்கள் வறுமையிலும் கல்வியிலும் மிகவும் தாழ்வு நிலைமையில் இருக்க இதற்கு மருந்தாக இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டையும் கிடைக்கவிடாமல் எதிர்க்கிறது மனித வடிவில் மிருகமாக இருக்கிற பாசிசம். அவ்வாறுயிருக்கையில் எவ்வாறு இஸ்லாமிய சமூகம் ஊடகத்துறையிலும், மற்ற ஏனய துறையிலும் முன்னேற முடியும். ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்கின்ற மாயத்தோற்றத்தை பாசிச சக்திகள் மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள்.

ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.

இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர்.

இப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவனாக!

ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை. குர்ஆன் (8:53)

Monday 16 June 2008

துருக்கி பல்கலைக்கழகங்களின் சர்வாதிகாரம்!


துருக்கி பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை துருக்கி உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.


99 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட துருக்கியில் மாணவிகளுக்கு ஹிஜாப் அணியும் உரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது.


11 நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் இந்த அறிவிப்பினை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நாடெங்கும் போராட்டம் பரவியது.


இஸ்தான்புல் பல்கலைக்கழக மாணவிகள் தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் என்னும் தலைக்கவசம் அணிந்து தங்களது போராட்டங்களை நடத்தினர்.


ஏராளமானோர் இஸ்தான் புல் பல்கலைக்கழகம் முன்பு திரண்டனர்.
துருக்கி குடியரசாக அறிவிக்கப்பட்டு 84 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆளும் ஏ.கே. கட்சி தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நகராட்சி அமைப்புகளில் உணவு விடுதிகளில் மதுபான விற்பனையைத் தடை செய்துள்ளது.


ஐரோப்பிய யூனியனில் இணைய துருக்கி முயற்சித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனில் துருக்கி இணைவதை எதிர்க்கும் சக்திகள் துருக்கி மத சுதந்திரத்தை மீறுகிறது.


மறைமுகமாக இஸ்லாமிய அஜென்டாவை செயல்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறது.


இந்நிலையில் ஹிஜாப் உரிமைக்கான மாணவிகளின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Sunday 15 June 2008

TNTJ இணையதளத்திற்கு செய்தி சேகரிப்பாளராக ஆக விரும்புகின்றீர்களா? இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

தன்னார்வ முள்ள சகோதர சகோதரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு

உலகம் முழுவதும் உள்ள TNTJ கிளைகள் தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் உலகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும், சமுதாயமக்களுக்கு பயனுள்ள இன்னபிற செய்திகளையும் நமது இணையயதளத்தில் உடனுக்குடன் வெளியிடுவதற்காக TNTJ இணையதளத்திற்கு செய்தி சேகரிப்பாளர்கள் தேவைப்படுகின்றது.
"TNTJ இணையதள செய்தி சேகரிப்பாளராக" ஆக விரும்பும் தன்னார்வமுள்ள சகோதர சகோதரிகள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். ஜுன் மாதம் 20 ஆம் தேதிக்குள் இது சம்பந்தமாக எங்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கெட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு, கர்நாடகா, வளைகுடா, சிங்கப்பூர், இலங்கை, போன்ற நாடுகளில் உள்ளவர்கள வரவேற்கப்படுகின்றனர்.
நீங்கள் அனுப்பும் செய்திகள் உலகம் முழுவதும் ;உள்ள மக்களை சென்றடையும் என்பதால் நீங்கள் செய்யும் இந்த பணிக்காக மகத்தான கூலியை மறுமையில் இறைவனிடம் நிச்சயம் பெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ்!
இந்த அறிவிப்பு TNTJ மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகின்றது.
இப்படிக்கு,
எஸ்.எம் அப்பாஸ்வெப்மாஸ்டர்
-TNTJ

இது சம்பந்தமாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்!


உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது.


சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.


ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது.


உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.

விமானங்களில் கட்டண சலுகை : ஏர்இந்தியா அறிவிப்பு


சென்னை :

உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் பதிவு செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என்று ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்திய அரசு நிறுவனமான ஏர்இந்தியா, ஸ்பாட் பேர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.


இத்திட்டத்தின்படி, உள்நாட்டில் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்குள்ளாக, விமான டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்படும்.


இதன்படி சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் என்றும், இச்சிறப்புத் திட்டத்தின்படி டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 5400 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஏர்இந்தியா அறிவித்துள்ளது.


இதற்கான டிக்கெட்களை விமான நிறுவன அலுவலகம், விமான நிலையம் மற்றும் இன்டெர்நெட்டிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தத் திட்டத்திற்கு விமான பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

Tuesday 10 June 2008

கச்சா விலையேற்றமும் - லாப‌க் கொள்ளையும்!

2003ஆம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்ததையடுத்து ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பை தொடர்ந்து சர்வதேச அளவில் உயரத் தொடங்கிய கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இருமடங்காக அதிகரித்துள்ளது. உலக பொருளாதாரத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

2004ஆம் ஆண்டு ஒரு பீப்பாய் கச்சா விலை 35 டாலராக இருந்தது, இந்த 4 ஆண்டுகளில் 400 விழுக்காடு அதிகரித்திருப்பதால் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தாறுமாறாக ஏற்றுவதைத் தவிர வேறு வழியின்றி உலக நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விலையேற்றத்திற்கான காரணமும், அதை முன்னரே உலக நாடுகள் கணிக்கத் தவறியது ஏன் என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய அவசியம் எழுகிறது.


முதலில் கடந்த ஒரே ஆண்டில் இந்த அளவிற்கு கச்சா விலையேறியதற்கு கூறப்படும் காரணங்களைப் பார்ப்போம்.


1) ஆப்ரிக்க நாடான நைஜீரியாவிலும், வடக்கு கடல் என்றழைக்கப்படும் இங்கிலாந்து - ஐரோப்பா இடையிலான கடற்பகுதியிலுள்ள எண்ணெய் கிணறுகளிலும் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பினால் கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் கச்சா விலை பேரலுக்கு 101 டாலரிலிருந்து 120 டாலராக அதிகரித்தது. இதே நேரத்தில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் தேவை அதிகரித்தது விலையேற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது.


2) உலக அளவில் கச்சா உற்பத்தி அதன் முழுத் திறனிற்கு இருந்தாலும், கச்சா உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளால் (உதாரணத்திற்கு நைஜீரியா, வெனிசுலா, ஈராக்) உற்பத்தி பாதிக்கப்படும்போது தேவை - உற்பத்திக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க, அதன் விளைவாக விலை உயர்த்தப்படுகிறது.


3) உலக கச்சா எண்ணெய் தேவை 2008இல் நாள் ஒன்றிற்கு 1.2 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், 2007ஆம் ஆண்டில் கச்சா விலை 72 டாலரை எட்டியபோதே, உலக அளவில் அடுத்த ஒராண்டில் கச்சா விலை (தேவை அதிகரிப்பதன் காரணமாக) பீப்பாய்க்கு 110 டாலராக (ஸ்பாட் பிரைஸ்) உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த கணிப்பை மீறி மேலும் 10 டாலர் மட்டுமே உயர்ந்துள்ளது. இத்தகவலை வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியேட் என்றழைக்கப்படும் எ‌ண்ணெ‌ய் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, கச்சா விலையேற்றம் திடீரென்று, எதிர்பாராமல் முளைத்து விடவில்லை என்பது தெளிவாகிறது.


4) எண்ணெய் உற்பத்தி நாடுகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று ஓபெக் என்றழைக்கப்படும் கச்சா உற்பத்தி - ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு. இவ்வமைப்பில் செளதி அரேபியா, ஈரான், ஈராக், குவெய்த், வெனிசுலா, அல்ஜீரியா, நைஜீரியா, ஐக்கிய அரபு நாடுகள், கட்டார் உள்ளிட்ட 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மற்றவை எவ்வித சர்வதேச அமைப்பும் இன்றி தனித்த கச்சா உற்பத்தி நாடுகள் - ரஷ்யா, அமெரிக்கா, கனடா போன்றவை. இதில் ஓபெக் நாடுகள் - சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவை அதிகரித்தாலும் - கச்சா உற்பத்தியை பெருக்கவில்லை.


ஓபெக் அல்லாத நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தியை விட, ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோலியப் பொருட்களின் தேவை நாள் ஒன்றிற்கு 1 மில்லியன் பீப்பாய் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதாவது ஓபெக் அல்லாத நாடுகள் உற்பத்தியை அதிகப்படுத்தினாலும் தேவை அதிகரிப்பதால், அவைகளின் உற்பத்தியைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக சந்தைப் பொருளாதார நியதியின்படி (Supply - Demand), உற்பத்தியைவிட தேவை அதிகரிப்பதால் விலையேறுகிறது. இந்த விளக்கத்தைத்தான் அனைத்து நாடுகளும் அளித்துக் கொண்டிருக்கின்றன.


கச்சா விலையேற்றத்திற்கு இதுவரை கூறப்படும் காரணங்களில் கேள்விக்குறியது எதுவெனில், சர்வதேச தேவை இந்த அளவிற்கு அதிகரித்துவரும் நிலையில் ஓபெக் நாடுகள் தங்களது உற்பத்தியை பெருக்காத்தது ஏன்? என்பதே. 1973இல் நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் மில்லியன் பீப்பாய் கச்சா உற்பத்தி செய்த ஓபெக், 1977இல் மிக அதிகபட்சமாக 34 ஆயிரம் மில்லியன் பீப்பாய் அளவிற்கு உற்பத்தியைப் பெருக்கியது. அதன்பிறகு சர்வதேச அளவில் தேவை குறையக் குறைய (விலையும் தொடர்ந்து குறைந்து வந்த நேரத்தில்) உற்பத்தியைக் குறைத்தது. நாள் ஒன்றிற்கு 15 ஆயிரத்திற்கும் குறைவாக உற்பத்தி சரிந்தது.

1985ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேசத் தேவை தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க கச்சா உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்த ஓபெக், 2005ஆம் ஆண்டு 33 ஆயிரம் மில்லியன் பீப்பாய் அளவிற்கு உயர்த்தியது. ஆனால் அதற்குப் பிறகு - சர்வதேச அளவில் தேவை நாளுக்கு நாள் (ஆசிய நாடுகளின் தேவை) அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில் உற்பத்தியைக் குறைக்கத் துவங்கியது.

2007ஆம் ஆண்டில் ஓபெக் நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் மில்லியன் பீப்பாய்களுக்கும் குறைந்தது. தனக்குள்ள கூடுதல் உற்பத்தித் திறனையும் ஓபெக் நாடுகள் - குறிப்பாக செளதி அரேபியா - பயன்படுத்தவில்லை.


2005இல் கச்சா விலை ஒரு பீப்பாய்க்கு 40 முதல் 50 டாலர்களாக இருந்தது. அப்பொழுது செய்த உற்பத்தியையே இப்பொழுதும் தொடர்கின்றன செளதி உள்ளிட்ட ஓபெக் நாடுகள். கடந்த 4 ஆண்டுகளில் 400 விழுக்காடு விலையுயர்ந்துள்ள நிலையில், தங்களுடைய உற்பத்திக்கு நான்கு மடங்கு வருவாய் பெற்றுள்ளன ஓபெக் நாடுகள்! இதனால்தான் சர்வதேச அளவில் கச்சா விலை பீப்பாய்க்கு 135 டாலர்கள் வரை உயர்ந்துள்ள நிலையிலும் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஓபெக் நாடுகள் வாய் திறக்கவில்லை.

வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் கூட்டத்தில்தான் உற்பத்தி குறித்து பேசப்போவதாகவும், அதுவரை தங்களுடைய உற்பத்தியில் எந்த மாற்றமும் இராது என்று ஓபெக் அமைப்பு கூறியுள்ளது.அமெரிக்கா, கனடா உள்ளிட்ட கச்சா உற்பத்தி நாடுகளே இந்த விலையேற்றத்தினால் பெரும் பிரச்சனையை சந்தித்துவரும் நிலையில், உலக நாடுகள், உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்த ஓபெக் நாடுகளின் மீது ஏன் அழுத்தம் தரவில்லை என்ற கேள்வி எழுகிறது.இதற்கு பதில் அமெரிக்காவிலிருந்துதான் (ஓரளவிற்கு) கிடைத்துள்ளது.


பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தினால் அமெரிக்க சந்தித்துவரும் பொருளாதார பின்னடைவுத் தொடர்ந்து, இந்த விலையேற்றத்தினால் பெரும் லாபம் ஈட்டிவரும் அமெரிக்க பெட்ரோலிய நிறுவனங்களின் நிர்வாகிகளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் நீதிக் குழு (Judiciary committee) உறுப்பினர்கள் கடந்த வாரம் புதன் கிழமையன்று கேள்வி கேட்டு குடைந்துள்ளனர்.


கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளீர்களே, உங்களுடைய வணிக நடவடிக்கைகளால் உருவாகிவரும் பொருளாதார பின்னடைவு எந்த விதத்திலாவது உங்களுடைய மனசாட்சியை பாதிக்கிறதா? என்று செனட்டர் ரிச்சர்ட் டர்பின் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த பிபி அமெரிக்கா எனும் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் மலோன், “உலக சந்தையை எங்களால் மாற்ற முடியாது.


அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் தேவை அதிகரிப்பிற்கேற்ப கச்சா மற்றும் மரபு சாரா எரிபொருள் உற்பத்தியை பெருக்கத் தவறியதே இன்றைய விலையேறத்திற்குக் காரணம்” என்று கூறியுள்ளார். “அமெரிக்க குடியரசுத் தலைவராக ஜார்ஜ் புஷ் பதவியேற்றதற்குப் பிறகு கச்சா விலை 400 விழுக்காடு அதிகரித்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய செனட் நீதிக் குழுவின் தலைவர் பேட்ரிக் லீஹி, ‘தேவை - உற்பத்தி நியதிப்படி பார்த்தாலும் கச்சா எண்ணெய் விலை 55 முதல் 60 டாலர் அளவிற்குத்தானே உயர்ந்திருக்க வேண்டும், சரியாக இயங்கும் போட்டிச் சந்தையில் இந்த அளவிற்கு உயர என்ன காரணம்?” என்று கேட்டுள்ளார்.

இக்குழுவின் மற்றொரு உறுப்பினரான (ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்) ஆர்லென் ஸ்பெக்டர், “எக்ஸான் மொபில் நிறுவனத்தின் லாபம் கடந்த 5 ஆண்டுகளில் 11.5 பில்லியன் டாலர்களில் இருந்து 40.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனம் ஒன்று இந்த அளவிற்கு லாபத்தை அடையும் போது பயனாளர்கள் இந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாவதற்கான காரணம் புரியவில்லை” என்று கூறியுள்ளார்.


இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சற்றும் பதற்றமடையாமல் பதிலளித்த எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள், எண்ணெய் இருப்பைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் காரணங்களைக் காட்டி தடுப்பதும், அதிகமான வரி விதிப்பும் விலையேற்றத்திற்கு மற்ற காரணங்கள் என்று கூறியுள்ளனர்.எக்ஸான் மொபில், கோனாக்கோ ஃபிலிப்ஸ், ஷெல் ஆயில், ஷேவ்ரான், பிபீ ஆகிய அமெரிக்காவின் 5 முன்னனி எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் காரணமாக இந்த ஆண்டின் முதல் 3 வாரங்களில் மட்டும் 36 பில்லியன் டாலர் (1 பில்லியன் டால‌ர் = 100 கோடி x 42 ரூபாய் = ரூ.1,51,200 கோடி) லாபம் சம்பாதித்துள்ளன.

ஷேவ்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ராபர்ட்சன், “எங்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. மாறாக, இந்த அளவிற்கு லாபம் ஈட்டியதற்காக பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

ஆக, விஷயம் இதுதான், கச்சா எண்ணெய் தேவை அதிகரிப்பதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி எண்ணெய் நிறுவனங்களும், ஓபெக் உள்ளிட்ட நாடுகளும் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.

ஓபெக் நாடான செளதி அரேபியாவிற்கு அடுத்தப்படியாக உலக அளவில் கச்சா உற்பத்தி செய்யும் நாடான ரஷ்யாவும் இந்த விலையேற்றத்தினால் சர்வதேச சந்தையில் ‘நல்ல’ லாபம் ஈட்டுவது மட்டுமின்றி, வரி விதிப்பின் மூலம் உள்நாட்டிலும் வருவாயை அதிகரித்துக் கொள்கிறது.எனவே கச்சா உற்பத்தி நாடுகள் அனைத்தும் இன்றைய நிலையில் ஓரணியில் நின்று லாப கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. அதுதான் இந்த வானளாவிய விலை உயர்விற்குக் காரணம்.

தங்களுடைய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவரும் இப்பிரச்சனையை இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் உலகிலேயே அதிகமாக பெட்ரோலியப் பொருட்கள் தேவை கொண்டுள்ள நாடான அமெரிக்காவில், பொருளாதார பின்னடைவு, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றால் அதன் அன்றாடத் தேவை 190,000 பீப்பாய் அளவிற்கு குறைந்துள்ளது.

எத்னாலை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் அந்நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு இந்த ஆண்டில் நாள் ஒன்றிற்கு மேலும் 330,000 பீப்பாய்கள் அளவிற்கு குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Sunday 8 June 2008

இன்றைய உலகில் முஸ்லிம்களின் வாழ்வு

مَنْ كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لاَ يُبْخَسُونَ أُوْلَائِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الآخِرَةِ إِلاَّ النَّارُ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِل ٌ مَا كَانُوا يَعْمَلُونَ

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.
(அல்குர் ஆன் 11:15,16)

ஒருவர் தனது சமீபத்திய சாதனைகளைப் பற்றி மிகைப்படுத்திக் கூறிக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் சமீபத்தில் வெளியான மிகப் பிரபலமான பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருப்பார், அடுத்து இன்னுமொருவர் புகைத்துக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் இன்னொருவரைத் திட்டிக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் பிறரை வஞ்சித்துக் கொண்டிருப்பார், இப்படி ஏகப்பட்ட அவலங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலைகளில் வாழக் கூடியவரும், இன்னும் பேசினால் புறமும், கோள் சொல்லுதலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டும், விளையாட்டு போட்டிகளின் முடிவுகள் எப்படி இருக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்று புலம்பிக் கொண்டு பந்தயங்களைக் கட்டிக் கொண்டிருக்கக் கூடிய மக்களின் கூட்டத்தில் வாழக் கூடிய ஒருவருக்கு எப்படி ஈமானின் வேகம் அதிகரிக்கும்.

இத்ததைகய சூழ்நிலையில் வாழக் கூடிய ஒருவருக்கு இந்த உலக வாழ்க்கையின் அம்சங்கள் தான் ஞாபகம் வருமே ஒழிய, இறை நம்பிக்கையும், இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளும் எவ்வாறு ஞாபகத்திற்கு வரும்?! இன்றைக்கு நாம் வாழக் கூடிய சூழ்நிலைகள் இவ்வாறு தான் இருந்து கொண்டிருக்கின்றன. இருவர் சந்தித்து விட்டால் வியாபாரம், வேலை, பணம், முதலீடு, வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சம்பள உயர்வு, சம்பள வெட்டு, பதவி உயர்வு, திட்டங்கள் போன்றவற்றைப் பற்றித்தான் அதிகம் பேசக் கூடியவர்களாகவும், அவர்களது சம்பாஷனைகள் யாவும் இதனைச் சுற்றியே தான் அமைந்திருக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.

இன்றைய முஸ்லிம்களின் வீடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்றால் ஷைத்தானிய சக்திகளின் பிடியில் தான் இன்றைய முஸ்லிம்களின் வீடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அசிங்கமான பாடல்கள் ஒலிக்கக் கூடிய இல்லங்களாகவும், இன்னும் வக்கிரமான சினிமாப் படங்கள், ஆணும் பெண்ணும் கலந்துறவாடும் காட்சிகளைக் கொண்ட படங்கள், பாடல்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் அகப்பட்டு விடக் கூடிய முஸ்லிம்களின் இல்லங்களில் எவ்வாறு இஸ்லாமியத் தாக்கம் இருக்கும். மாறாக, ஈமானை இழந்து விட்ட, ஷைத்தானின் பிடியில் சிக்கிச் சீரழியக் கூடிய, மனநோய் கொண்ட சமுதாயமாகத் தான் அது இருக்கும். இந்த உலகமே கதி என்று வாழக் கூடிய ஒருவனது இதயம், இந்த உலகத்திற்கும் இந்த உலகத்தின் ஆதாயங்களுக்கும் அடிமைப்பட்டதாகத் தான் இருக்கும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தீனாரின் அடிமைகள் மற்றும் திர்ஹத்தின் அடிமைகள், (இவர்களுக்கு) அவனுக்கு அழிவுதான்.
(புகாரி,).


இந்த உலக வாழ்க்கைக்கு குறைந்த அளவு வளங்களே போதுமானதாக இருப்பினும், இந்த மனிதன் இந்த உலக வாழ்வே கதி என்று எண்ணம் கொண்டதன் காரணமாக, அவன் எப்பொழுதும் ஷேர் மார்க்கெட், உற்பத்தி, வியாபாரம் என்று ஓடி ஓடித் திரிகின்ற அவலத்தை நாம் கண்டு வருகின்றோம். இது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்றை மெய்பிப்பதாக உள்ளது.

மனிதன் இறைவனை வணங்குவதற்காகவும் இன்னும் ஸகாத் வழங்குவதற்காகவும் தான் நாம் வளங்களை இறக்கி வைத்தோம், ஆனால் ஆதத்தினுடைய மகன் ஒரு சமவெளியைப் பெற்றிருந்தால், அவன் தனக்கு (இதைப் போல)இன்னொன்று இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான், இன்னும் அவனுக்கு இரண்டு சமவெளிகள் இருந்தால் மூன்றாவதாக ஒன்று நமக்கு இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான். ஆதத்தினுடைய மகனது வயிற்றில் மண் தான் நிறைந்திருக்கின்றது (அதாவது அவன் என்றைக்கும் திருப்தி அடையவே மாட்டான்), இன்னும் யார் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டார்களோ அவர்களது பாவத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.(அஹமது)

செல்வமும், மனைவி மக்களும்''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு"" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
( அல்குர் ஆன் 8:28)

பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது இவை உலக வாழ்வின் சடப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
(அல்குர் ஆன் 3:14)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தில் வருகின்ற இந்த உலகத் தேவைகளான மனைவி மக்கள் செல்வங்கள் ஆகிய யாவும், இறைவனின் மீதுள்ள அன்பைக் காட்டிலும் மிகைத்து விடக்கூடிய அளவில் சென்று விடக்கூடாது. அவ்வாறு செல்லும் பொழுது தான் இறைவனுக்குக் கீழ்படியாமையை அது உருவாக்கி விடுகின்றது. அவ்வாறில்லாமல், இஸ்லாமியச் சட்டங்களின் வரையறைக்குள், இன்னும் இறைவனுக்குக் கீழ்படிகின்ற தன்மையிலிருந்து அவனை வழி தவறச் செய்யாத விதத்தில் அமைந்து விடுமானால், இத்தகைய செல்வங்களும், உறவுகளும் அவனுக்கு மிகப் பயன்தரக் கூடியதாக அமைந்து விடும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இந்த உலகத்தில் பெண்களும், நறுமணங்களும் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தும் கூட, இவை அனைத்தைக் காட்டிலும் தொழுகை தான் எனக்கு மிக மிக விருப்பமானதாக இருக்கின்றது என்றார்கள்.
அநேக ஆண்கள் தங்களது மனைவிமார்களின் விருப்பங்களைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாகவும், அந்த விருப்பங்கள் ஹராமான வழியில் இருந்தாலும் அவற்றைத் தடுக்க இயலாமலும், தங்களது குழந்தைகளை தொழுகை போன்ற இறைவணக்கங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டாமல், அவர்களை பள்ளிவாசல் பக்கமே ஒதுங்கவியலாத அளவுக்கு வளர்க்கின்ற பழக்கத்தையும் நாம் கண்டு வருகின்றோம்.

இறைத்ததூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அச்சத்திற்கும், கபடத்திற்கும், ஏமாற்றத்திற்கும் இன்னும் கஞ்சத்தனத்திற்கும் காரணமாக உங்களது குழந்தைகள் உங்களை ஆளாக்கி விடுவார்கள். (தப்ராணி, அல் ஜாமீஈ ).

கஞ்சத்தனம் என்பது என்னவென்றால், இவன் அல்லாஹ்வினுடைய பாதையில் ஒரு பொருளைச் செலவு செய்ய எண்ணியிருப்பான். அப்பொழுது ஷைத்தான் குறுக்கிட்டு அல்லாஹ்வின் பாதையில் இந்தப் பொருளை நீ செலவழித்து விட்டால், உன்னுடைய குழந்தைகளின் கதி என்னாவது என்பதை நினைவூட்டுவதன் மூலம், அந்தப் பொருளை இறைவனுடைய பாதையில் செலவழிக்க இயலாதவானாக அந்த மனிதனை ஆக்கி விடுகின்றான்.
அறியாமை என்பது என்னவென்றால், இவன் அறிஞர்களின் உரைகள் மற்றும் கல்வியைத் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக முயற்சி செய்யும் பொழுது, குழந்தைகள் குறுக்கிட்டு அறிவைத் தேடிச் செல்வதனின்றும் இவனைத் தடுக்கக் கூடியதாக இருந்து விட்டால், அதுவே அவனது அறியாமையைக் காரணமாகி விடும்.

கவலை என்பது என்னவென்றால், அவன் செல்லமாகப் போற்றி வளர்க்கக் கூடிய அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டு விட்டால் அதற்காகக் கவலை கொள்ளக் கூடியவனாகவும், இன்னும் தன்னுடைய குழந்தை பிரியப்பட்டு ஒரு பொருளைக் கேட்கும் பொழுது அதனை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை என்றால், அதற்காகக் கவலைப்படக் கூடியவனாகவும் மனிதன் மாறி விடுகின்றான். இன்னும் தான் வளர்த்த அந்தக் குழந்தை பெரியவானாக ஆகி விட்டதும், தன்னைப் பராமரிக்காமல் விட்டு விட்டால், தான் கஷ்டப்பட்டு அவனை எவ்வாறெல்லாம் வளர்த்தோம், இந்த வயதான காலத்தில் நம்மை இப்படி வெறுமனே தவிக்க விட்டு விட்டுச் சென்று விட்டானே என்று புலம்பக் கூடிய நிலைக்கு விட்டு விடக் கூடியவனாகவும் அவன் மாறி விடுகின்றான்.

மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அம்சங்களைக் கருத்தில் கொண்டு, திருமணமே செய்து கொள்ளாமல், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளாமல் வாழ வேண்டும் என்பதல்ல, மாறாக, செல்வங்களும், மனைவி மக்களும் இறைவனது நினைவை விட்டும் ஒருவனை மாற்றி விடக் கூடிய விதத்தில் அமைந்து விடக் கூடாது என்பதும், மனைவி மக்கள் அந்த மனிதனை ஹராமான வழியில் அவர்களின் நலன்களுக்காக பொருளீட்டத் தூண்டுகோளாக அமைந்து விடக் கூடாது என்பதே இதன் கருத்தாகும்.
செல்வங்கள் மனிதனை எவ்வாறெல்லாம் நிலைமாறச் செய்யும் என்பதை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

ஒவ்வொரு உம்மத்திற்கும் ஒவ்வொரு �பித்னாக்கள் (குழப்பங்கள், கோளாறுகள்) உண்டு. என்னுடைய உம்மத்தைப் பொறுத்தவரை செல்வம் தான் அந்த �பித்னவாக இருக்கும்.
(திர்மிதி 2336)

செல்வத்தை அதிகம் சேகரிக்க வேண்டும் என்ற ஆசையானது, ஆட்டிற்கு பக்கத்தில் இருக்கக் கூடிய ஓநாய் எவ்வாறு ஆட்டை வெகு சீக்கிரத்தில் கபளீகரம் செய்து விடுமோ, அதைப் போல செல்வத்தின் மீதுள்ள ஆசை ஒருவனது மார்க்கத்தையே அழித்து விடும். இதைத்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :
இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டிருக்கின்ற ஒருவனது பொருளாசையானது, இரண்டு பசி கொண்ட ஓநாயிடம் அகப்பட்ட ஆட்டிற்கு நேரக் கூடிய பாதிப்பை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
(திர்மிதி)

எனவே தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களது தேவைகளுக்கு எவ்வளவு போதுமானதாக இருக்குமோ அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள், தேவைக்கு மிஞ்சக் கூடிவைகள் இறைவனது நினைவை விட்டும் உங்களை பராக்காக்கி விடும்.

தான தர்மம் செய்யாமல், பணத்தைச் சேகரித்து வைப்போரை இறைத்தூதர் (ஸல்) எச்சரித்திருக்கின்றார்கள்.என்னுடைய செல்வம் இங்கிருக்கின்றது, இங்கிருக்கின்றது. இங்கிருக்கின்றது என்று கூறி, தனக்கு முன்னாலும், பின்னாலும், வலப்புறமும், இடப்புறமும் (தான தர்மங்களுக்காக) செல்வத்தை வாறி வழங்குகின்றாரே அத்தகையவரைத் தவிர, செல்வத்தைச் சேகரித்து வைக்கின்றார்களே அவர்களுக்கு நாசம் உண்டாகட்டும்.
(இப்னு மாஜா).

உலகமே கதிஇறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
(அல்குர் ஆன் 15:03)

அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் :நீங்கள் உங்கள் மன இச்சையைப் பின்பற்றுவது குறித்து நான் பயப்படுகின்றேன் இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையும், மன இச்சையைப் பின்பற்றுவதும் சத்தியத்தை மறக்கச் செய்துவிடும், இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையானது மறுமையை மறக்கச் செய்துவிடும்.
(�பத்ஹுல் பாரி 11�236)

ஒருவரது ஈமானின் உறுதியை இழக்கக் செய்யக் கூடிய இன்னுமொரு அம்சம் என்னவென்றால், அதிகமாக உண்பது, இரவில் மிக நீண்ட நேரம் விழித்திருப்பது, அதிகமாகப் பேசுவது மற்றும் அதிகமான நேரங்களை மற்றவர்களுடன் கூடியிருந்து (அரட்டைகளில்) கழிப்பது. யார் அதிகமாக உண்கிறார்களோ அவர்களது உடம்பு பெருத்து விடும், இத்தகைய தன்மைகள் இறைவனை நினைவு கூர்வது மற்றும் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனத்தை உண்டாக்கி விடுவதோடு, இத்தகைய நபர்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவதில் ஷைத்தானுக்கு மிக எளிதாகவும் இருக்கும்.

எவரொருவர் அதிகமாக உண்கிறாரோ, குடிக்கின்றாரோ இன்னும் தூங்குகின்றாரோ அத்தகையவர்கள் இறைவனது வெகுமதியை இழந்து விடுகிறார்கள். அதிகமாகப் பேசுவது இதயத்தை இறுகச் செய்து விடுகின்றது, அதிகமான மக்களுடன் வீணாகத் தன்னுடைய நேரங்களைக் கழிப்பவர்களுக்கு தனியாக இருந்து தன்னுடைய நிலைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரம் கிடைக்காது.

அதிகமாகச் சிரிப்பது ஒருவனது இதயத்தின் வாழ்நாளையை பாழடித்து விடும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகமாகச் சிரிக்காதீர்கள், அதிகமாகச் சிரிப்பது இதயத்தை மரணிக்கச் செய்து விடும்.
(இப்னு மாஜா)

ஒருவனது நேரங்கள் வணக்க வழிபாட்டுடன் கூடியதாக இறைவனுடைய ஞாபகத்தை அதிமதிகம் நினைவு கூரத்தக்க விதத்தில் கழியவில்லை என்றால், அவன் குர்ஆனை உதறித் தள்ளி விட்டுச் செல்லக் கூடியவனாகவும், இன்னும் இறை நம்பிக்கையாளர்களின் அறிவுரைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவும் மாட்டான்.

ஈமானைப் பலவீனப்படுத்தக் கூடிய அம்சங்கள் ஏராளமாக இருந்தும், இங்கே நாம் அவற்றில் சிலவற்றைத் தான் குறிப்பிட்டிருக்கின்றோம். இங்கே குறிப்பிடப்படாத சில அம்சங்கள் உங்களது வாழ்க்கையில் உங்களை பாதித்திருக்கலாம், அதனை நீங்கள் கூர்ந்து கவனிப்பதன் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம். நமது இதயங்களை அல்லாஹ் சுத்தப்படுத்தி, கெட்ட செயல்பாடுகளிலிருந்து நம்மைக் காத்தருளப் பிரார்த்திப்போமாக! ஆமீன்!!

Saturday 7 June 2008

சிறப்புச் செய்தி



இந்துத்துவா பற்றிய பழ. நெடுமாறனின் புதிய நூல்


இருள் மண்டிக் கிடக்கும் இந்திய அரசியல் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளையும் உரைக்கப்படாத சதிகளையும் உலகறிய ஏந்திவரும் புதிய நூல்!


பழ. நெடுமாறன் எழுதிய உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் இந்நூல் சிறைக்கோட்டத்தில் செதுக்கப்பட்டது

ஏறத்தாழ 800 பக்கங்கள் விலை ரூபாய் 350/-
வெளிநாடு ஒரு நூல் : $ 17/-10 நூல்கள் : $ 150/-(அஞ்சல் செலவு உள்பட)
காசோலைகள் வரைவோலைகள் "தமிழ்க்குலம்" என்ற பெயரில் இருக்க வேண்டும்.


Payment documents to be drafted in the name of "Tamil Kulam"


வெளியீடு:

தமிழ்க்குலம்

33, நரசிம்மபுரம் மயிலை,

சென்னை - 600 004.

தொ. பே - 91-44-24640575

ஹோட்டல்களில் விலையோடு அளவும் குறைப்பு - ஊறுகாய் கூட இல்லை!



முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் பரிசாக ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பண்டங்களின் விலைக் குறைப்பு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விலையோடு சேர்த்து அளவைக் குறைத்து விட்ட ஹோட்டல்காரர்கள், சாப்பாட்டுக்கு ஊறுகாய் கூட வைப்பதில்லை என்று மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

தமிழக ஹோட்டல்களில் அதிகரித்து விட்ட உணவுப் பண்டங்களின் விலையை குறைப்பது குறித்து இரு முறை ஹோட்டல் அதிபர்கள் சங்க நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் இறுதியில் 15 சதவீத அளவுக்கு விலைக்குறைப்பு செய்ய ஹோட்டல்காரர்கள் முடிவு செய்தனர்.

முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் முதல் இது அமலுக்கு வந்தது. அதன்படி இட்லி, வடை உள்ளிட்ட பொருட்களின் விலையில் ரூ. 1 வரை குறைக்கப்பட்டது. அளவுச் சாப்பாடு ரூ.20க்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 20 ரூபாய்க்கு வழங்கப்படும் சாப்பாடு, கொஞ்சம் கூட திருப்தி தருவதாக இல்லை என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.
பல ஹோட்டல்களி்ல் தரப்படும் 20 ரூபாய் சாப்பாடு மகா மோசமாக இருக்கிறது. கவுன்ட்டரில் போய் ரூ.20 சாப்பாடு கொடுங்கள் என்றால், ஏதோ கொலையாளியைப் பார்ப்பது போல மேலும், கீழுமாய் பார்க்கிறார்கள். ஒரு தடவைக்கு மூன்று தடவை 20 ரூபாய் சாப்பாடா என்று கேட்டுவிட்டு டோக்கனை கொடுக்கிறார்கள்.

அப்பளம் அளவுள்ள சிறிய தட்டில் பாதியளவுதான் சாப்பாடு இருக்கிறது. 2வது முறை கூட்டு, பொரியல் கேட்டால், மறுத்து விடுகிறார்கள். ஊறுகாயைக் கூட கண்ணில் காட்டுவதில்லை.

இது சாப்பாடு போலவே இல்லை. சாப்பாட்டுக்கு முன்பு வைக்கப்படும் 'ஸ்டார்ட்டர்' போல இருக்கிறது. இதே சாப்பாட்டை மூன்று முறை சாப்பிட்டால்தான் சாப்பிட்டது போல இருக்கும் என்கிறார்கள்.
பல ஹோட்டல்களில் விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வைக்கப்படவில்லை.

சாப்பாடு தவிர இட்லி, வடை, பொங்கல், பூரி ஆகியவற்றின் விலையும் பெரிய அளவில் குறையவில்லை. அதேசமயம், பெரும்பாலான ஹோட்டல்களில் சைஸைக் குறைத்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதிக்கு வழங்கும் பிறந்த நாள் பரிசு என்று கூறி விட்டு அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல இப்படி ஹோட்டல்காரர்கள் நடந்து கொள்வது தவறு என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

Thursday 5 June 2008

இந்தியா-துபாய் வர்த்தகம் 74% உயர்வு!

புதன், 4 ஜூன் 2008

இந்தியாவுக்கும் துபாய் நாட்டிற்கும் இடையிலான வர்த்தகம் சென்ற ஆண்டு 74 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பெட்ரோலிய கச்சா எண்ணெய் இல்லாத மற்ற பொருட்களின் வர்த்தகம் 2006ஆம் ஆண்டில் 10.9 பில்லியன் அமெரிக்க டாலர் (40 பில்லியன் தினார்) அளவிற்கு வர்த்தகம் நடந்தது.

இது சென்ற ஆண்டு 74 விழுக்காடு உயர்ந்து 19 பில்லியன் டாலராக (69.7 பில்லியன் தினார்) அதிகரித்துள்ளது.

இது பற்றி துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் கான்சல்-ஜெனரல் வேணு ராஜாமணி கருத்து தெரிவிக்கையில், இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி அபரிதமாக இருக்கின்றது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு சிறப்பாக இருப்பதால், வர்த்தகம் உயர்ந்து வருகிறது என்று கூறினார்.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு பட்டை தீட்டப்பட்ட, பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த ஆபரணக் கற்களும், தங்கம் போன்ற உலோகங்களும் 5.8 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (21.2 பில்லியன் தினார்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் துபாயில் இருந்து இந்தியாவிற்கு பட்டை தீட்டப்பட்ட, பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த ஆபரணக் கற்களும், தங்கம் போன்ற உலோகங்களும் 2.7 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (9.9 பில்லியன் தினார்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இராமர் பாலம் : நம்பிக்கையின் பெயரால் நீதிக்கு மிரட்டல்

800 மில்லியன் (80 கோடி) இந்திய மக்கள் அதனை (இராமர் பாலத்தை) கட்டியது இராமர்தான் என்று நம்புகிறார்கள். கடவுளான இராமர் இருந்தாரா அல்லது அவர்தான் அந்த பாலத்தைக் கட்டினாரா என்ற பிரச்சனைக்குள் நீதிமன்றம் நுழைய முடியுமா?”

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையில், தண்டி மடாதிபதி வித்யானந்த பாரதி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் எழுப்பியுள்ள கேள்வி இது.

தனது வாதத்திற்கு ஆதரவாக (ஆதாரமாக) மற்றொரு கேள்வியையும் வழக்கறிஞர் வேணுகோபால் எழுப்பியுள்ளார்: “இந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இதனை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? இவையெல்லாம் மக்களின் நம்பிக்கைகள், அவைகளை நீதிமன்றங்களோ அல்லது அரசுகளோ விசாரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை துவக்கும் போது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், அப்பொழுதெல்லாம் இராமர் பாலம் பாதிக்கப்படும் என்று எந்தக் குரலும் கொடுக்காமல், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஒரு செயற்கைக் கோள் படத்தை வெளியிட்டவுடன் “இதுதான் இராமர் கட்டிய பாலம்” என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள், அதனை நிரூபிக்க ஆதாரமேதும் இல்லையென்பது தெளிவானவுடன் நம்பிக்கையை கையிலெடுத்துள்ளது மட்டுமின்றி, அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சட்டத்தை மிரட்டும் அளவிற்கு இறங்கியுள்ளதையே இந்த வாதங்களும் கேள்விகளும் உணர்த்துகின்றன.

சேது சமுத்திர கால்வாய் பகுதியில் உள்ள நிலத்திட்டுகள் இராமர் பாலமே என்றும், அது புராதன காலத்தில் கட்டப்பட்டது என்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ள வழக்கறிஞர் வேணுகோபால், அந்த ஆதாரத்தின் அடிப்படையில் இராமர் பாலத்தை மெய்பிக்க வாதிட்டிருந்தால் அது சட்டப் பூர்வமான வாதமாக இருந்திருக்கும்.

ஆனால், அந்த ஆதாரத்தைச் சார்ந்து நின்று வாத்த்தை எடுத்துரைக்காமல், நம்பிக்கையை பிரச்சனையாக்கி, அதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று வாதிடுவது, “தெய்வத்தின் பேரால் நாங்கள் செல்வதுதான் சட்டம், வழங்குவதுதான் தீர்ப்பு” என்கின்ற புராதன மத ஆட்சிக் காலத்தையே நினைவூட்டுகிறது.

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த சுப்பிரமணிய சுவாமியும் இதேபோல், “இராமர் பாலம் என்பது 80 கோடி மக்களின் நம்பிக்கை” என்றுதான் வாதிடுகிறார்.

சுப்பிரமணியம் சுவாமி வாதிடுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் அரசியல்வாதி. எப்படி வேண்டுமானாலும் பேச "உரிமை" உள்ளவர்.

ஆனால் மூத்த வழக்கறிஞரும், அரசமைப்பு சட்ட நிபுணர் என்று அறியப்படுபவருமான வழக்கறிஞர் வேணுகோபால் அவர்களும் நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டு வாதிட்டிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.

அது இருக்கட்டும், 80 கோடி மக்களின் கருத்தை இவர்கள் எப்பொழுது கேட்டறிந்தார்கள்? 80 கோடி மக்களின் நம்பிக்கைகளைப் பற்றிப் பேச இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? இந்திய நாட்டின் 80 கோடி மக்கள் அது இராமர் பாலம்தான் என்று நம்பிக்கொண்டிருப்பதாக இவர்கள் கூறுகிறார்களே, அப்படியானால், நாசா செயற்கைக் கோள் புகைப்படத்தை வெளியிடும்வரை அம்மக்களின் நம்பிக்கையை இவர்கள் அறியாமல் இருந்ததேன்?

Wednesday 4 June 2008

ஐக்கிய அரபு எமிரேட் அரசு, விசா அனுமதிக்கான கட்டணதை உயர்த்தியுள்ளது..

துபை
ஐக்கிய அரபு எமிரேட் அரசு, விசா அனுமதிக்கான கட்டணதை ஜுலை முதல் உயர்த்தியுள்ளது. ஒரு மாதத்துக்கான விசா கட்டணம் 200 திர்ஹம் இருந்து 500 திர்ஹம் (5,839) உயர்த்தப்படுகிறது.3 மாதங்களுக்கான விசா கட்டணம் 1000 திர்ஹம் உயர்த்தப்படுகிறது.
இதற்கு முன்பு இதற்கான கட்டணம் 700 திர்ஹம்.2000 திர்ஹம்( ரூ.23.200) கட்டணத்தில் 6 மாத விசாவும் அறிமுகப்படுத்தப்படுகிறது.இதன் மூலம் 6 மாதங்களுக்கு நாட்டில் தங்கியிருக்கலாம்.
இடையில் எத்தனை முறை வேண்டுமானாலும் சொந்த நாட்டுக்கு சென்று வரலாம்.கம்பெனிகள் தங்கள் அதிகாரிகளுக்கு இந்த 6 மாத விசாவை பெறலாம்.
தெழிலாளர்களை இந்த விசா மூலம் அழைத்து செல்ல முடியாது.சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள்,ஐக்கிய ஆரபு எமிரெட்டில் குடியிருப்போரின் உறவினர்களுக்காக இத்தகைய விசா ( விசிட்டர் விசா) தரப்படும்.
நன்றி தினமணி

மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்

"மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்' என, அபர்டீன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள ஐந்து பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று அபர்டீன் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
www.lalpet.com