Sunday 15 June 2008

விமானங்களில் கட்டண சலுகை : ஏர்இந்தியா அறிவிப்பு


சென்னை :

உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் பதிவு செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என்று ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்திய அரசு நிறுவனமான ஏர்இந்தியா, ஸ்பாட் பேர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.


இத்திட்டத்தின்படி, உள்நாட்டில் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்குள்ளாக, விமான டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்படும்.


இதன்படி சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் என்றும், இச்சிறப்புத் திட்டத்தின்படி டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 5400 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஏர்இந்தியா அறிவித்துள்ளது.


இதற்கான டிக்கெட்களை விமான நிறுவன அலுவலகம், விமான நிலையம் மற்றும் இன்டெர்நெட்டிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தத் திட்டத்திற்கு விமான பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

No comments: