Sunday 9 November 2008

மாலேகான் குண்டுவெடிப்பு


மாலேகான் குண்டுவெடிப்பு: இருவருக்கு நீதிமன்றக் காவல்!

மராட்டிய மாநிலம் மாலேகானில் உள்ள மசூதிக்கு அருகில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய இராணுவ வீரர் உட்பட இருவரை நவம்பர் 10 தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலேகான் மசூதி அருகே அன்று நடந்து குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், 101 பேர் காயமுற்றனர். இதில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை ஏற்பாடு செய்து அளித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாய் ஆகிய இருவரும் இன்று நாசிக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்த இவர்களில் ரமேஷ் உபாத்யாய் இந்திய இராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்தின் அடிப்படையிலேயே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மேஜர் ரமேஷ், நாட்டிற்கு சேவை புரிந்த தான் எந்த விதத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது கிடையாது என்றும, தன்னிடம் இருந்து உண்மையை வரவழைக்க நார்கோ சோதனை நடத்திலும் அதற்கு தனது உடல் நிலை அனுமதிக்குமானால் முழு விருப்பத்துடன் சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூருடன் ரமேஷ் நெருங்கியத் தொடர்பில் இருந்தார் என்றும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே அவரை கைது செய்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் மிஸ்ரா கூறியுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்!

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்து ஜாகிரன் மஞ்ச் என்ற இந்து அமைப்பே காரணம் என கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் நகரில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது.அதே நாளில், குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது.
இதில் மொத்தமாக 6 பேர் உயிரிழந்தனர்.
மாலேகானில் 5 பேர் இறந்தனர்.
இரு சம்பவங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகியுள்ளனர் என்று மாலேகான் நகர காவல்துறை இணை ஆணையர் ஹேமந்த் கர்கரே தெரிவித்துள்ளார். மேல் விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.கைது செய்யப்பட்ட 3 பேரும் நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முன்னதாக ஷியாம் சாஹு, திலீப் நஹர், சிவநாராயணன் சிங் மற்றும் தர்மேந்திரா பைராகி ஆகிய நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர். இவர்கள் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்து அமைப்பே காரணம்
இதற்கிடைேய, இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற இந்து அமைப்பே மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரக்யா சிங் தாக்கூர் என்கிற துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் (இதில்தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது) சூரத்தைச் ேசர்ந்த ஒருவருக்கு சொந்தமானது.
இவருக்கு இந்து அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கிருந்துதான் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான பல முக்கிய துப்புக்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.
மோடாசா குண்டுவெடிப்புக்கும் இந்து ஜாகிரண் மஞ்ச்தான் காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மாலேகான்-2 ராணுவ பள்ளி ஊழியர்கள் கைது

நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ராணுவப் பள்ளி ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் அடுத்தடுத்து பலரைக் கைது செய்து வருகின்றனர்.
முதலில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் 2 பேர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர். இந் நிலையில் நாசிக்கைச் சேர்ந்த போன்ஸாலா ராணுவப் பள்ளியை நடத்தி வந்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் ஷைலேஷ் ரெய்க்கர் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்புக்கு முதல் நாள் (செப்டம்பர் 28) இவரும், பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவரான சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாயா ஆகியோரும் சந்தித்துப் பேசியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதே ராணுவப் பள்ளியைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.
தீவிரவாத பெண் சாமியாருடன் கூட்டு-லெப்டினென்ட் கர்னல் சிக்கினார்

போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஒருவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்துள்ளனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது.

இதையடுத்து அந்தஅமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் இருவர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர்.இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பச்மார்ஹி பகுதியைச் சேர்ந்த ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஒருவர் மகாராஷ்டிர போலீஸ் வசம் சிக்கியுள்ளார்.அவருக்கும்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த அதிகாரியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

உடனடியாக அவர் மும்பை கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

பெண் சாமியாருக்கு சீட்-உமா பாரதி:
இதற்கிடையே பெண் சாமியார் பிரக்யா சிங்கு விரும்பினால், மத்திய பிரதேசத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்படு்ம் என உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சி தெரிவித்துள்ளது.
மூலம் தட்ஸ்தமிழ்
மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யபப்பட்டனர்.இந்நிலையில், ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி வரும் புரோஹித் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவரையும் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீகாந்த் புரோஹித், ராணுவத்தில் அதிகாரியாக இருப்பதால் அவரை போலீஸார் முறைப்படி தங்களிடம் ஒப்படைக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து ராணுவமும், புரோஹித்தை தீவிரவாத தடுப்பு சட்டப் பிரிவு போலீஸிடம் ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். புரோகித் அபினவ் பாரத் என்ற அமைப்பை தொடங்கியதாக கருதப்படுகிறது.

இது ஒரு இந்து தீவிரவாத அமைப்பும் என்று கருதப்படுகிறது.

புரோஹித்துக்கும், ரமேஷ் உபாத்யாயாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

புரோகித் ரமேஸ்க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் புரோகித் ரமேஸை மொபைல் எண்ணை மாற்றும் படியும் வற்புறுத்தியிருக்கிறார்.

இந்தியாவில் முதல் முறையாக ராணுவத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிடிப்பட்டுருக்கிறார்.

மாலேகான் : மும்பையில் சிபிஐ அதிகாரி விசாரணை

மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளை, மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) உயர் அதிகாரி ஒருவர் மும்பையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி புரோஹித் தன் மீதான குற்றச்சாற்றை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சிபிஐ அதிகாரியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இணை இயக்குனர் நிலையிலான சிபிஐ அதிகாரி மும்பையில், வெள்ளிக்கிழமை முழுவதும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினருடன் இருந்து ஆலோசனை நடத்தியதாக அதிகாரிகளை மேற்கோள்காடி பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிலரையும் சிபிஐ அதிகாரி சந்தித்ததாகவும் அந்த தகவல் கூறுகிறது.

சாது ஒருவரும், ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், தற்பொழுது ராணுவத்தில் பணியாறறிவரும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உட்பட இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான புரோஹித் வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இதனிடையே மேலும் சில ராணுவ அதிகாரிகளுக்கும் மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,விசாரணையில் குண்டுவெடிப்பில் தமக்குள்ள தொடர்பை புரோகித் ஒப்புக் கொண்டுள்ளார்.

மாலேகானில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: