Thursday 16 August 2007

தென்காசி இந்து முன்னணி தலைவன் கைது


தென்காசி பஜாரில் கடந்த 14ம் தேதி இந்து முன்னணி இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டினார்கள். பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் முஸ்லீம்கள் 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இத்தாக்குலில் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இந்து முன்னணியைச் சேர்ந்த இந்துத்துவ கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட பஷீர், நாகூர் மீரான், அசன் கனிஆகிய 3 பேர் ஜனாஸவையும் த.மு.மு.க மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் தலைமையில் அவரது உறவினர்கள் பெற்று நடுப்பேட்டை கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் அலாவுதீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செந்தில், கபிலன், சக்தி பாண்டியன், சுப்பிரமணியன், சுரேந்தர், முத்து, சேகர், மாலையப்பன், சண்முகம், மற்றொரு சேகர், ஆட்டோ ரமேஷ், பிஸ்தா மணி, செண்பகம் ஆகிய இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் சக்தி பாண்டியனும், பிஸ்தா மணியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.



அதேபோல சக்தி பாண்டியன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஹனிபா, அப்துல்லா, அலாவுதீன், அசன்கனி, அபு, ராஜா முகமது, செய்யதலி, மீரான் முகைதீன், நவாஸ், நாகூர் மீரான், சம்சுதீன், பசுலுதின், ஜின்னா மகன் மற்றும் தொழில் அதிபர் ரகுமான் பாட்ஷா, ஹாஜி முஸ்தபா நிறுவனங்களின் உரிமையாளர் கமால் முகைதீன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.





கைது செய்யப்பட்ட சக்தி, பிஸ்தா மணி, அனிபா, அலாவுதீன் ஆகியோர் நேற்றிரவு தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களை வரும் 30ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடையநல்லூர், செங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடையநல்லூர், செங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று தென்காசியில் சில கடைகள் திறக்கப்பட்டன. போக்குவரத்தும் சீராகி வருகிறது. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.



இலண்டன் மையப் பள்ளி இமாம் மீது கொடும் வன்முறை - இமாம் கவலைக்கிடம்!

இலண்டனில் இருக்கும் மையப் பள்ளியின் இமாம்களில் ஒருவர் மீது கடும் கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.

இது ஐக்கிய ராச்சியத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக வளர்ந்து வரும் வெறுப்பினால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலாக இருப்பதை அறிய முடிகிறது.

இலண்டன் மையப்பள்ளியின் 58 வயதான இமாமிடம், கடந்த வெள்ளியன்று (10/8/2007) காலையில் 40 வயது மதிக்கத்தக்க ஐரிஷ் மனிதர் வந்து, தான் இஸ்லாத்தைத் தழுவ விரும்புவதாகக் கூறினார். அவரை வரவேற்ற இமாம் அவருக்கு பேரீச்சைக் கனிகளை அளித்து இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார்.

அதனை கவனித்துக் கொண்டிருப்பது போலப் பாசாங்கு செய்த ஐரிஷ் நபர் திடீரெனத் தரையில் குப்புறப் படுத்து ஏதேதோ மந்திரங்களைச் சொன்னார். பின்னர் விருட்டென எழுந்து இமாமை இரத்தம் வரும் அளவுக்குக் கண்மூடித்தனமாகத் தாக்கி அவரைத் தரையில் தள்ளினார். இமாம் அவர்களின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து அவரது கண்களைத் தனது இரு விரல்களால் குத்திக் காயப் படுத்தினார்.

இதனால் நிலைகுலைந்த இமாம் உதவி கேட்டுக் கூச்சல் எழுப்பினார். இதனால் மஸ்ஜிதில் பணியில் இருந்த காவலாளிகள் ஓடிவந்து இமாமை ஐரிஷ் நபரிடம் காப்பாற்றினர். காவல்துறையின் அவரசப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஐரிஷ் நபர் கைது செய்யப்பட்டார். இரத்த வெள்ளத்தில் கிடந்த இமாம் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மஸ்ஜிதின் இயக்குனர் டாக்டர். அஹ்மத் அல் துபயான் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் நிச்சயமாக பெருகிவரும் இஸ்லாமோஃபோபியாவின் விளைவு தான் என்றும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து மஸ்ஜித்களுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நன்றி: முஸ்லிம் நியூஸ்

Tuesday 14 August 2007

தென்காசியில் இந்து முன்னணி வெறியர்களின் வெறியாட்டம்!!!





நடுரோட்டில் 6 பேர் ஓட ஓட வெட்டி கொலை நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று பட்டப் பகலில் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அரிவாள்களால் வெட்டிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் படுகொலையாயினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.

தென்காசி நகர இந்து முன்னணித் தலைவராக இருந்த குமார் பாண்டியன் கடந்த வருடம் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஹனீபா, அப்துல்லா, சுலைமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்துத்துவ கும்பல் முஸ்லிம்களை கொல்வதற்கு அவ்வப்போது பிரச்னை செய்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட தமிழக முஸ்லீம முன்னேற்றக் கழகத் தலைவர் மைதீன் சேட்கானை இந்துத்துவ கும்பல் கடந்த மார்ச் மாதம் வெட்டியது.

இந்து முன்னணித் தலைவராக இருந்த குமார் கொலை வழக்கு தொடர்பாக

ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜாராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜாராகி வந்த நிலையில் அவர்களது நடவடிக்கைகளை குமார் பாண்டியன் ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்துவ கும்பல் கண்காணித்து வந்துள்ளனர்.
அவர்களை போட்டுத் தள்ள முடிவு செய்து இன்று காலை குமார் பாண்டியனின் தம்பி செந்தில் தலைமையில் இந்துத்துவ கும்பல் கூலக்கடை பஜார் பகுதியில் காரில் பதுங்கியிருந்தனர்.

இந் நிலையில் இன்று காலை ஹனீபா, அப்துல்லா ஆகியோர் 4 ேபருடன் தென்காசி காவல் நிலையத்துக்கு 2 பைக்குகளில் கையெழுத்துப் போட சென்றனர். அவர்களை கூலக்கடை பஜார் பகுதியில் முத்தாரம்மன் கோவில் அருகே வைத்து செந்தில் மற்றும் இந்துத்துவ கும்பல் சுற்றி வளைத்தது.

காரில் வந்த அவர்கள், பைக்குகளை வழி மறித்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், அவை வெடிக்கவில்லை. இதையடுத்து அரிவாள்களுடன் காரிலிருந்து குதித்து தாக்குதல் நடத்தினர்.

அசன் கனி மற்றும் அசேகர் அவரது நண்பர் ரவி, ஆகியோர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு அந்த இடத்திலேயே பலியாயினர்.

இவர்களுக்கு கை, கழுத்து, தலை, கால் என பல இடங்களிலும் வெட்டு விழுந்துள்ளது.

ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி வெட்டியதில் அப்துல்லா, அபு அன்சாரி, நாகூர் மிரான், ராஜா, மீரான் மைதீன், செய்யது அலி,செந்தில், ஆகிய 7 பேர் படுகாயமடைந்து தென்காசி மேலமுத்தாரம்மன் கோவில் அருகேயும், கூலக்கடை பஜாரிலிருந்து பூங்கொடி விநாயகர் கோவில், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியிலும் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தனர்.

போலீசார் விரைந்து வந்து இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், இவர்களில் நசீர், நாகூர் மீரான்,செந்தில், ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

இத் தாக்குலில் சையத் அலி, அபு, மீரான், ராஜா, அப்துல்லா ஆகியோர் படுகாயமடைந்து பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிய தெருவுக்குள் இந்துத்துவ கும்பல் பயங்கரமாக ஓடி, விரட்டி வெட்டிக் கொண்டது அந்தப் பகுதியையே பீதியில் ஆழ்த்திவிட்டது.

அந்த வழியாக சென்ற பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு சிலர் கடைகளில் புகுந்து உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் தென்காசியில் கடைகள் மூடப்பட்டுவிட்டன. மதக் கலவர அபாயம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து கடையநல்லூரிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

அங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் பிரகாஷ், எஸ்.பி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் தென்காசியில் முகாமிட்டுள்ளனர்.

Thursday 9 August 2007

அல் அமீன் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடமை!


அல் அமீன் மஸ்ஜிதின் அவசியத்தை உணராமல் நமதூர் மக்களில் சிலர் விதண்டாவாதமாகச் செயல்படுவதோடு இறையில்லத்தை நிர்மாணிக்கும் மார்க்கக் கடமையில் தங்களை அர்ப்பணித்துள்ள நமதூர் சகோதரர்களை இழிவாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.

ஏற்கனவே பல பள்ளிவாசல்கள் இருக்கிறதே! பிரச்சினைக்குறிய இடத்தில் இன்னொரு பள்ளிவாசல் ஏன்? அப்படியே பள்ளிவாசல் கட்டினாலும், பள்ளிக்கு பேரூந்து நிலைய வாசல் அவசியமா? என்றும் கேட்கிறார்கள்.

நமதூரில் எத்தனை பள்ளிகள் இருந்தாலும், அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் (வக்ப்) செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலும் தொழுகையை கியாமத் நாள் வரையில் தொடர்ந்து நடத்தி வருவது லாஇலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக்கடமையாகும். பள்ளிவாசலின் சொந்த நிலத்தில் தடைகளை ஏற்படுத்தி பிரச்சினைகளை உண்டாகுவது காழ்புணர்வு கொண்ட சிலரே தவிர, பள்ளிவாசல் நிர்வாகம் அல்ல!

மேலும், மெயின்ரோடு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த சரியான இடம் இல்லாததைக் கருத்தில் கொண்டு, ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பில் வாங்கப்பட்ட நிலத்துடன்,பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட நிலத்தில் பள்ளி வாசலை நிர்மாணிப்பது நமதூர் முஸ்லிம்களின் மீது கடமையாகி விட்டது.

பேரூந்து நிலையம் வழியாக வாசல் பள்ளிவாசலுக்கான சொந்தமான நிலத்தில்தான் வாசல் வைக்கப்படுகிறது என்ற பிரதானக் காரணம் போக, பொதுமக்களின் பயன்பாட்டிற்கான எந்த ஒரு முயற்சியையும் சட்டப்படி வசதி செய்து கொடுப்பது சம்பந்தப்பட்ட அரசு, பஞ்சாயத்து அலுவலர்களின் பொறுப்பாகும்.

ஆனால்,பஞ்சாயத்து அலுவலகம் நமதூர் சகோதரர்களின் மீது பொய்வழக்கு போட்டும், பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டிருந்த மின்சாரத்தை துண்டித்தும், பள்ளிவாசலுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட பட்டா அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரியும் பாரபட்சமாகச் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சியின் பாரபட்ச அநியாயத்தைத் தட்டிக்கேட்க நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களோ பஞ்சாயத்து போர்டின் ஊழல்களில் பங்கெடுத்துக்கொண்டு மெத்தனமாக இருக்கிறார்கள்.

இன்னும் ஓரிரு வருடங்களில் தொடங்கப்படவிருக்கும் சேதுசாலை வழியாகச் தினமும் செல்லவிருக்கும் 500-600 பேரூந்து பயணிகளுக்குத் தொழுகவும் முஸ்லிம் பெண்களுக்கு இயற்கைத் தேவைகளுக்காகவும், நீண்ட தூரப்பயணத்தில் ஓய்வெடுக்கவும், தொழுகை முறையையும் கலாச்சாரத்தையும் மாற்றுமதச் சகோதரர்கள் அறிந்து கொள்ளவும் வசதியாக, பேரூந்து நிலையம் வழியாக மெயின் ரோட்டை இணைக்கும் வாசல் அவசியமாகும்.இத்தகைய பல்வேறு நல்ல அம்சங்களைக் கொண்ட அல்அமீன் பள்ளிவாசல் நிர்மாணத்திற்குத் தடையாக இருப்பவர்கள் திருக்குர்ஆனின் போதனையை மீறும் பாவத்தைச் செய்கிறார்கள்.

2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

மேலும், "எவரொருவர் தொழுவதற்காகப் பள்ளிவாசலை உண்டாக்கினாரோ அவருக்கு மறுமையில் (சுவர்க்கத்தில்) அல்லாஹ் மாளிகையை ஏற்பாடு செய்துள்ளான்" என்பது நபிமொழியாகும்.

அதர்கு தகுதியானவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

Tuesday 7 August 2007

இந்தியாவின் மதச்சார்பின்மை பாரீர்!!

குருசாமிக்கு ஆப்பு வைக்க மறுப்பு தலைமை நீதிபதி'ஜெயேந்திரரின் பக்தன் நான்' - வழக்கைவிசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி மறுப்பு!

நான் ஜெயேந்திரரின் பக்தன். எனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறி விட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்படவுள்ளது.சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை.

இதற்கு, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு வக்கீல்கள்தான் ஆஜராக வேண்டும், தமிழக அரசு வக்கீல்கள் ஆஜராகக் கூடாது என்று கோரி இரு சங்கராச்சாரியார்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுதான் காரணம்.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.

இதனால் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.இந் நிலையில், நேற்று சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்ரமணியன் கூறுகையில், நான் சங்கராச்சாரியாரின் பக்தன். எனவே என்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது.

இம்மனுவை நான் விசாரிக்க மாட்டேன். 3 வாரங்களுக்கு விசாரணையைத் தள்ளி வைக்கிறேன். வேறு பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என்றார்.

இதையடுத்து இந்த வழக்கு 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இது தான் இந்தியாவின் மதச்சார்பின்மை!! இந்திய அரசியல் சட்டத்தின் தலைமை பீடமான உச்ச நீதி மன்றம் வரை சாதீய, பார்பனிய வேர் ஊடுருவி உள்ளது!! ஒரு விபச்சாரன், மத தலைவர் வேஷத்தில் காமலீலைகள் செய்தவன் தன்னிடம் பக்தியோடு வந்த பக்தைகளை காமத்தோடு தடவியவன், தனது ஊழல்களை மறைக்க பல கொலைகளை செய்து! உலக மஹா அயோக்கியன் இந்த சங்கராச்சாரி என்பவன்,

இவனின் பக்தனாக இருக்கிறானாம் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி!! என்ன கொடுமையாடா?

இந்தியர்கள் அணைவரையும் சமமாக நடத்தக்கூறும் அரசியல் சாசனத்தை அமல்படுத்த வேண்டிய நீதிபதி காமரசம் சொட்டுமு், மனிதர்களை தலையில் இரந்தும் காலில் இருந்தும் வந்தவன் என பாகுபாடு படுத்தும் மனுவின் சட்டத்தை அமலாக்க நினைக்கும் அயோக்கியன், தீவிரவாதி சங்கராச்சாரியாரின் பக்தனாம்!!

இவனைப்போன்ற சங்கராச்சாரியாரின் பக்தர்கள் நீதிபதியாய் அமாந்திருக்கும் நீதிமன்றங்களில் இந்தியாவின் சாமான்ய மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அய்யோ பாவம் இந்தியாவும் இந்திய குடிமக்களும்!! சுதந்திரமடைந்து பல ஆன்டுகலாகியும் இன்னும் மனுவின் பிடியில்!! பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ள இந்திய நீதி மன்றங்கள் என்று சுயமாக செயல்படும்?

இதுதான் குஜராத் மற்றும் பாபரி மஸ்ஜித் வழக்குகளிலும் நடந்தது!!

நன்றி : தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

Monday 6 August 2007

5-8-2007 ல் நடைபெற்ற TNTJ மாநிலப் பொதுக்குழு:

1.இடஓதுக்கீடு கிடைக்காவிட்டால் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்,


2.கோவை குண்டு வெடிப்பு தீர்ப்பு: தண்டனை காலத்தை விட அதிக நாள் சிறையில் இருந்தவர்களுக்கு உரிய இழுப்பீடை அரசு வழங்க வேண்டும். இன்னும் பல தீர்மானங்கள்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு 05.08.2007 ஞாயிற்றுக்கிழமையன்று திண்டுக்கல் சாத்தங்குளம் நாடார் உறவின் முறை மஹாலில் மஹாலில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவிற்கு மாநிலத் தலைவர் மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முழுவதுமுள்ள கிளைகளிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 பேர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலுடன் இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


தீர்மானங்கள்:


இட ஒதுக்கீடு தொடர்பாக:


1. கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகின்றது. இதற்கென பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. அதன் ஒரு கட்டமாக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் கடந்த ஜூலை 4 அன்று மாபெரும் சிறை நிரப்புப் போராட்டத்தை நடத்தியது. இதற்குப் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாததை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதே நிலை தொடருமானால் வெகு விரைவில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்துவது எனவும் அதற்கான தேதியை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலத் தலைமைக்கு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


2. ஜூலை 4 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய சிறை நிரப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஜமாஅத்தினர் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் இப்பொதுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


3. தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் அனைத்தும் கடந்த தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தன. தற்போது இந்தக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசாங்க ரீதியில் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல், மாநாடுகள் நடத்தி முஸ்லிம்களை ஏமாற்றி வருவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நிலை நீடித்தால் இந்தக் கட்சிகளை முஸ்லிம்கள் வரும் தேர்தலில் புறக்கணிக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றது.


4. முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு அளித்த ஆந்திர மாநில காங்கிரஸ் அரசாங்கத்தையும், முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களையும் இப்பொதுக்குழு பாராட்டுகின்றது.


பாபர் மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக:


5. கோவை குண்டு வெடிப்பு வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு போன்ற வழக்குகள் அனைத்தும் விசாரணை முடிந்து தீர்ப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பாபர் மஸ்ஜித் இடிப்பு தொடர்பான வழக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் இருந்து வருவதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

15 ஆண்டுகளாக நீடித்து வரும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு விசாரணையை விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.


6. பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும், பாபர் மஸ்ஜித் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரியும், மஸ்ஜிதை இடித்த சங்பரிவார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.


மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக:


5. ஆந்திரா மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக முஸ்லிம்களே குற்றவாளிகள் என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கோயிலில் குண்டு வெடித்தாலும், பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நடந்தாலும் முஸ்லிம்கள் மீதே குற்றம் சுமத்தும் போக்கைக் கைவிட்டு, பள்ளிவாசல் குண்டு வெடிப்பு தொடர்பாகப் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று ஆந்திர அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


கோவை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக:


6. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அப்துல் நாஸர் மஃதானி உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


7. எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கும், தண்டனைக் காலத்தை விட அதிகமான காலம் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. சிறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்களுக்குக் கூட வேலை வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு, சுய தொழில் தொடங்கும் வகையில் கணிசமான நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


8. கோவை குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சொத்துச் சேதம், உயிரிழப்பு ஆகியவற்றுக்கு காவல்துறை அதிகாரிகளின் பாரபட்சமான போக்கே காரணம் என்று இப்பொதுக்குழு கருதுகின்றது. கலவரங்களுக்கும் உயிர்ச் சேதங்களுக்கும் காரணமான இத்தகைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.


9. குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையிலிருந்து வெளியாகும் நிலையில், குண்டு வெடிப்புக்குத் தொடர்பில்லாத, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குணங்குடி அனீபா அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.


மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக:


10. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கியது போன்று, 1993ல் மும்பை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 900 பேரைக் கொன்று குவிப்பதற்குக் காரணமானவர்கள் என்று கிருஷ்ணா கமிஷனால் கண்டறியப்பட்ட 31 அதிகாரிகளுக்கும், மற்றும் கலவரத்திற்குக் காரணமான சங்பரிவார்களுக்கும் உரிய தண்டனை வழங்காமல் காலம் தாழ்த்துவதை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் மேற்படி குற்றவாளிகளுக்கு உடனடியாக அதிகப்பட்சத் தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


துணை ஜனாதிபதி தேர்தல்:


11. துணை ஜனாதிபதி தேர்தலில் டாக்டர் ஹமீத் அன்சாரி அவர்களை வேட்பாளராக அறிவித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை இப்பொதுக்குழு பாராட்டுகிறது.


இராக் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புகள் தொடர்பாக:


13. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இராக்கை ஆக்கிரமித்து, அங்குள்ள அப்பாவி மக்களை அமெரிக்க, பிரிட்டானிய படைகள் அன்றாடம் கொன்று குவித்து வருகின்றது. அதன் உச்சக்கட்டமாக முஸ்லிம்களின் பெருநாளன்று இராக் அதிபர் சதாம் ஹுசைனைப் படுகொலை செய்தது. சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அமெரிக்க, பிரிட்டானியப் படைகள் நடத்தி வரும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை உடனே நிறுத்திக் கொள்வதுடன், உடனடியாக இந்தப் படைகள் இராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


14. பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அங்குள்ள அப்பாவி மக்களை தினந்தோறும் கொன்று குவித்து வரும் மனித குல விரோதியான சீயோனிஸ இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக அரபு நாடுகள் ஒன்றிணைந்து போராடி, பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.


ஆஸ்திரேலியாவின் மனித உரிமை மீறலைக் கண்டித்து:


15. பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் எந்தக் குற்றமும் செய்யாத இந்திய டாக்டர் ஹனீஃப் அவர்களை பயங்கரவாத வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலிய அரசாங்கம் கைது செய்தது. டாக்டர் ஹனீஃப் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று நீதிமன்றம் கூறிய பின்னரும் அவரது விசாவை ரத்து செய்து, தீவிரவாதி போல் நடத்திய ஆஸ்திரேலிய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.


ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Click Here for Pothukkulu Photos

Wednesday 1 August 2007

கோவை குண்டு வெடிப்பு தீர்ப்புக்கள்



கோவை குண்டு வெடிப்பில் இன்று வழங்கப்பட்டு வரும் தீர்ப்பின் விபரங்கள் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் இணையத்தில் அப்டேட் செய்யப்படுகின்றன.


தீர்ப்பு விபரம் :மதானி உள்பட 8 பேர் விடுதலை, (4 பேர் தமிழ்நாடு, 4 பேர் கேரளா) - 153 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு (71 பேர் மீத பெரிய குற்றச்சாட்டுக்களும் 82 பேர் மீது சிறிய குற்றச்சாட்டுக்களும் நிறுபிக்கப்பட்டுளதாக அறிவிப்பு) 6 பேர் மீது தீர்ப்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு.



விடுதலையானவர்கள் - நவ்சாத், சர்தார், அக்கோஜி, அப்துல் ஹமீத், அப்துல் நாசர் மதானி, சபேர், ஆர்மி ராஜீ, அஸ்ரப் -KK நகர் வழக்கில் அனைவரும் குற்றவாளிகளாக அறிவிப்பு, 45 பேருக்கு ஜாமினுக்கு அப்ளை செய்ய அனுமதி - 102 பேருக்கு மேல் குற்றவாளிகளாக அறிவிப்பு - தொடரும் அநீதி மக்கள் கொந்தளிப்பு - 45 பேருக்கு ஜாமின் அறிவிப்பு - பாராபட்சமான, அநியாயமான இந்த தீர்ப்பை சிறுபான்மை உதவி அறக்கட்டளை வண்மையாக கண்டிப்பு. அரசியல் உள்நோக்கம் உள்ள தீர்ப்பு அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் கருத்து.



சிறுபான்மை உதவி அறக்கட்டளை
CHARITABLE TRUST FOR MINORITIES


கேரள பி.டி.பி தலைவர் மதானி மீது குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படாததால் விடுதலை. அரசியல் உள் நோக்கம் கொண்ட திர்ப்பு, மதானியை விடுவித்தால் அந்த பரபரப்பில் மற்றவர்களுக்க தண்டனை அளித்தாலும் மக்கள் கண்டகொள்ளமாட்டார்கள் என்ற அரசின் தவறான மனப்பொக்கு, அப்பாவிகள் பலர் அநியாயமாக, பாராபட்சமாக குற்றவாளிகளாக அறிவிப்பு. 45 பொருக்கு ஜாமின் அப்லை செய்ய அனுமதி. 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிப்பு. கெ.கே நகர் வழக்கில் அணைவரம் குற்றவாளிகளாக அறிவிப்பு. மேலும் படிக்க...


கோவை குண்டுவெடிப்பு: ஒரு ஃபிளாஷ்பேக்!

கோவை மாநகரை புரட்டிப் போட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியை திருப்பிப் பார்ப்போம்.
நவம்பர் 29, 1997. இதுதான் கோவை மாநகரின் தலையெழுத்து மாறிப் போக முக்கிய காரணமாக அமைந்த நாள். இந்த நாளில்தான் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அல்உம்மாவினர்தான் இதற்குக் காரணம் என இந்துத்துவ சிந்தனை உடையவர் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவையில் RSS கும்பல் மற்றும் இந்துத்துவ சிந்தனை உடையவர்களால் கலவரம் வெடித்தது. சமூக நீதிக்கும் அமைதிக்கும் நிலைக்கலனாகி நிற்கும் கோவை கலவர பூமியாக்கி முஸ்லிம்களின் ரத்தம் சுவைப்பதற்கு கங்கணம் கட்டி களமிறங்கியது.
தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள், தங்கள் வீடுகளை இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டார்கள். அப்பாவி 17முஸ்லீம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா தாக்கப்பட்டார்.
1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோவை நகரை உலுக்கும் வகையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அல் உம்மா, அகில இந்திய அல் ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முதல் குற்றப் பத்திரிக்கை 1998ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இறுதிக் குற்றப்பத்திரிக்கை 1999ம் ஆண்டு மே 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 2000மாவது ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 2001ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
சாட்சிகள் விசாரணை 2002ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி தொடங்கியது. வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது.
மதவெறியை பயங்கரமாகத் தூண்டி, மக்கள் நெஞ்சுகளில் நஞ்சைக் கலந்து, ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, கலவரத்திற்குக் கால்கோள் செய்து பிணங்களில் நடந்து மேலேறுவதே காவிக் கயவர்களின் கடந்த கால வரலாறு.

Tuesday 31 July 2007

ஷார்ஜா சாலை விபத்தில் தமிழர் உள்பட 5 இந்தியர்கள் பலி


ஷார்ஜாவில் மினி பஸ்ஸும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உள்பட 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஒரு கட்டுமானக் கம்பெனியைச் சேர்ந்த மினி பஸ்ஸில், தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து ஷார்ஜாவில் உள்ள சஜா என்ற பகுதிக்கு வேலைக்காக போய்க் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்து ஷார்ஜா - அல்தாஹித் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தபோது, 7வது வளைவில் எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். லாரி டிரைவர் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஷார்ஜாவில் உள்ள அல்-குஸாமி மற்றும் குவைத்தி மருத்துவமனையிலும், அஜ்மானில் உள்ள கலீபா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினி பஸ்ஸின் டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இறந்தவர்கள் விவரம்

1. ரங்கராஜன் பெருமாள் (25), தமிழ்நாடு.
2. தாமஸ் தாமஸ் (51), கும்பநாடு, கேரளா.
3. பிரகாஷ் ராம் (45), பஞ்சாப்.
4. கேசவன் அஜீத் (37), திருவனந்தபுரம்.
5. ஷோபன் மணிகண்டன் (30), திருவனந்தபுரம்.
இவர்களில் அஜீத்தும், ராமும் அந்தக் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தனர். மற்றவர்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். விபத்தில் சிக்கிய லாரி, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றபோது எதிரே வந்த மினி பஸ்ஸுடன் மோதியது. இந்த விபத்தில் மொத்தம் 17 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் இந்தியா, நேபாளம், வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப கட்டுமான நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Monday 30 July 2007

முஸ்லிம்களின் தேசப்பற்றைக் கண்டு மெய்சிலிர்த்த தினமலர்

ஆம் சுதந்திர தின வைரவிழாவின் நெருக்கத்தில் தான் தினமலருக்கு இஸ்லாமியர்களின் சுதந்திர தாகம் எப்படிப்பட்டதாக இருந்தது என்ற ஞானோதயம் ஏற்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தங்களின் சதவிதத்திற்கு மேலாக கலந்துக் கொண்டவர்களின் எழுச்சியைக் கண்டு தினமலர் மெய்சிலிந்த்து நிற்கும் காட்சியை கீழ்காணும் தினமலரின் வலைதளத்தில் காணலாம்.

Sunday 29 July 2007

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள்

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்
மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும்.
உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும்.
அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவ்வாறு முழுமையாக வழங்கப்பட்ட ஓர் உரிமையை, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பிறகு இந்தியாவை முழுமையாகக் கொள்ளை கொள்ளத் துடிக்கும் இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டங்கள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்நாட்டின் மைந்தர்களான குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும், கலகம் விளைவிக்கவும் தக்க வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து திரித்து வெளிப்படுத்தி வருகின்றன.
ஒரு பொய்யை வெவ்வேறு விதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நாளடைவில் அது உண்மையாகிவிடும் என்பது ஹிட்லர்-கோயபல்ஸ் யுக்தி. நாஜியிச ஹிட்லரின் அடிவந்த சங்பரிவாரங்களும் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடந்த அனைத்து கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக வெளிப்படுத்தப்படும் செய்திகளும், கட்டுரைகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இதனை நன்றாக உணர்ந்து வைத்துள்ளதாலேயே சங்க்பரிவார சக்திகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி துவேஷத்தை வளர்த்து வருகின்றன.
உலகின் அதிவேக வளர்ச்சியில் இன்று மிகப்பெரும் சக்தியாக ஊடகத்துறையில் உருவெடுத்துள்ளது இணையமாகும். இங்கு கருத்துக்களை வெளியிட எவருக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் செய்திகளை வெளியிடத் தக்க விதத்தில் இணையம் அமைந்துள்ளது தான் இதன் காரணமாகும். இந்தியாவின் எல்லாத்துறையிலும் மற்றவர்கள் கண் உணரும் முன்பே நுழைந்து அவ்விடங்களை ஆக்ரமித்துக் கொண்ட சங்க்பரிவார சக்திகள் இன்றைய அதிசக்தி வாய்ந்த இந்த ஊடகத்தையும் தங்களின் லட்சியத்திற்காக மிக அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
கடந்த இரு தினங்களில் பெங்களூரில் நடந்த தென்னிந்திய முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) நடத்திய எம்பவர் இந்தியா (Empower India) மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கோ. சென்ன பாஸப்பா கூறிய வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டியதாகும். "இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கூட இன்று ஃபாஸிஸம் பரவத் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்றவர்களை தங்களது வளர்ச்சிக்காக ஃபாஸிஸ்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட தேச துரோகியான சாவர்க்கரின் படத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவுக்கு இன்று நிலை மாறியுள்ளது". நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது. இவர்களின் இந்த வளர்ச்சிக்கு ஊடகங்களின் பொய் பிரச்சாரம் சிறப்பான பங்கு வகித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும்.
ஊடகத்திற்கு என்று ஒரு தர்மம் உண்டு. அந்த தர்மத்தை இன்று காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவதில் பெரும்பாலான ஊடகங்கள் முன்னணியில் நிற்கின்றன. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது, அதற்கான மறுப்பு கொடுக்கப்பட்டாலோ, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலோ அவற்றை உடனடியாக பிரசுரிப்பது கருத்துச் சுதந்திரத்தை காக்கும் ஊடகங்களின் தலையாய கடமையாகும். இதனைப் பெரும்பாலான ஊடகங்கள் செய்து, கருத்துப் பரிமாற்ற நேர்மையைக் காக்கின்றன.
ஆனால் என்ன காரணத்தினாலோ நடுநிலையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சில ஊடகங்கள் கூட பல நேரங்களில் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுவதற்கும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பம் விளைவித்து கலகங்களை உருவாக்கவும், அதன் மூலமாக இந்துத்துவ சங்பரிவார கூட்டங்களின் வளர்ச்சிக்கும் துணை போய் விடுகின்றன.
இணையத்தில் சங்பரிவார ஃபாஸிஸ கூட்டத்தின் வளர்ச்சிக்காக, பொதுமக்களிடையே பொய்களையும் அவதூறுகளையும் எழுதிப் பரப்புவதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் எழுத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களால் தோலுரித்து காட்டப்பட்டும் உள்ளது. அந்த வரிசையில் மலர்மன்னன் என்ற பெயரில் எழுதும் ஒரு இந்துத்துவ வெறியர் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.
தனது எழுத்துக்களில் இந்துத்துவா தனது எதிரியாக வரையறுத்து வைத்துள்ள இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸத்தைக் குறித்து உணமைக்குப் புறம்பான தகவல்களை வரலாறுகளாகவும், நிகழ்வுகளாகவும் தருவது தான் இந்த கோயபல்ஸின் முக்கிய வேலையாகும்.
காந்திஜியைக் கொன்ற மாபாதகன் கோட்சேயின் கொலைவெறியை தனது நாற்றம் பிடித்த எழுத்துக்களால் நியாயப்படுத்தி எழுதிய தேசதுரோகி மலர்மன்னன், முஸ்லிம்களை குறித்தும் இஸ்லாத்தை குறித்தும் நேர்மையாக எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியாது தான். திண்ணை டாட் காம் என்ற இணைய தளத்தில் இந்திய வரலாறுகளில் பல நிகழ்வுகளைத் திரித்து மக்களிடையே குழப்பத்தையும் துவேஷத்தையும் வளர்க்கும் விதத்தில் உண்மைக்குப் புறம்பாக எழுதியபோது, தோழர் கற்பக விநாயகம் அவர்களால் தோலுரிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அவமானத்தால் கூனிக் குறுகி வாழ்க்கை வெறுத்துப் போய் இனி எதைப்பற்றியும் எழுதப் போவதில்லை என்று வடக்கிருந்த தேசத்துரோகி மலர் மன்னன், இன்று சிஃபி டாட் காம் என்ற தளத்தின் தமிழ் பகுதியில் அவதூறுகளை 'எழுத' வேண்டப்பட்டுள்ளார்.
இதே சிஃபி டாட் காம் இணைய தளம் இஸ்லாத்திற்கு எதிராக இணையத்தில் காழ்ப்பைக் கக்கி எழுதும் கயமை நிறைந்த போலி நபரான நேசகுமார் என்ற மற்றொரு இந்துத்துவ பார்ப்பனருக்கு சிஃபியில் தனி இடம் ஒதுக்கியதும் நினைவு கூரத்தக்கதாகும். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமெனினும் தங்கள் மன அழுக்கைக் கொட்டிக் கொள்ளட்டும். அதற்கு இடம் கொடுப்பதும், பிரித்து விடுவதும் அவரவர் விருப்பம் தான். ஆனால் சாதாரண ஊடகங்களுக்குரிய தர்மத்தை இவர்கள் கடைபிடிக்க வேண்டும் இல்லையா?
சமீபத்தில் இந்துத்துவா ஊதுகுழல் மலர் மன்னன், "கலைகள் தந்த தஞ்சை, கவலை தருகிறது" என்று எதுகை மோனையாகத் தலைப்பிட்டு எழுதி இருந்ததை சிஃபி டாட் காம் தமிழ் பதிப்பில் வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த உணமைக்குப் புறம்பான விஷயங்களையும் தவறுகளையும், பல யதார்த்தமான நிலைமைகளையும் சுட்டி சிஃபிக்கு ஒரு மறுப்புரை எழுதி பிரசுரிக்கும் படி கோரியிருந்தேன். மேலும் அக்கட்டுரை சமூகத்தில் மதக் கலவரைத்தைத் தூண்டும் வகையில் கயமை நோக்குடன் அவதூறாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.
மறுப்பு அனுப்பப்பட்டு மூன்று வாரங்களுக்கும் மிகுந்து நாட்கள் ஆகிவிட்டன. நினைவுறுத்தல் கடிதமும் அனுப்பப்பட்டாயிற்று. இதுவரை சிஃபி தமிழ் தள நிர்வாகியிடமிருந்து மறுப்புரையை பிரசுரிப்பது பற்றியோ அல்லது பிரசுரிக்க முடியாது என்றோ எவ்வித பதிலும் இல்லை. இந்த அளவுக்கு இருக்கிறது சிஃபி தமிழ் தளத்தின் எழுத்து நேர்மையும் கருத்துச் சுதந்திரமும்.
சங்பரிவாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் துணைபோகும் இது போன்ற ஊடகங்களின் உண்மை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வெளியிடப்படும் தகவல்களில் அடங்கியுள்ள உண்மைக்குப் புறம்பான விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில் பல தளங்களை தொடர்பு கொண்டு இறுதியில், தமிழ் முஸ்லிம்களின் இணைய குரலாக வளர்ந்து வரும் சத்தியமார்க்கம் டாட் காம் என்ற தளம் எனது மறுப்புரையை வெளியிட முன்வந்துள்ளது.
நம்மைப் பொறுத்தவரை இஸ்லாமும் முஸ்லிம்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; ஆனால் அதே சமயம் அந்த விமர்சனத்தில் இருக்கும் தவறுகளையும் உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுகளையும் சுட்டி தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டால் ஏற்கும் அல்லது சான்றுகளுடன் மறுத்துரைக்கும் நேர்மை மட்டுமாவது விமர்சிப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். சிஃபியிடம் இத்தகைய கருத்து நேர்மை இல்லையென்பது என்னுடைய மறுப்புரைக்கு அவர்கள் காட்டும் நீண்ட மவுனமும், தேசதுரோகி இந்துத்துவ ஊதுகுழல் மலர் மன்னனின் உணமைக்குப் புறம்பான நாற்றமெடுக்கும் அவதூறு எழுத்துக்களை தொடர்ந்து தங்களது தளத்தில் வெளியிடுவதும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
எனவே சிஃபி வெளியிடும் தேசவிரோதி மலர் மன்னனின் துவேஷ எழுத்துக்களில் உள்ள அவதூறுகளைத் தோலுரிக்கவும் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவும் வாய்ப்பு நல்கிய சத்தியமார்க்கம் டாட் காம் தளத்திற்கு நன்றி கூறி, இங்கு மலர் மன்னனின் அவதூறுகளை மூன்று கூறுகளாகப் பிரித்துத் தொடராக எழுதவிருக்கிறேன். இந்த மறுப்புரைகளை இனி வரும் பகுதிகளில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: நல்லடியார்.

Saturday 28 July 2007

இருமேனி TNTJ பொதுக்கூட்ட விவகாரம்:

  • இருமேனி TNTJ பொதுக்கூட்ட விவகாரம்:கூட்டத்தை தடை செய்ய ஊர் சுன்னத் ஜமாஅத் கடும் முயற்சி.
  • அனுமதி அளித்த காவல் துறை.
  • வுரதட்சனையை ஊக்குவிக்கும் ஊர் சுன்னத் ஜமாஅத்! நியாயத்தை எடுத்து சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்!!
  • நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான பரபரப்பு செய்தி.

28-7-2007 நக்கீரன் பத்திரிக்கை செய்தி:

இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை.


அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை
சிட்னி: இலண்டன் மற்றும் கிளாஸ்கோ விமானநிலையங்களைத் தகர்க்க நடந்த சதியில் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கருதி அவரை விடுதலை செய்ய இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அரசு தலைமை வழக்கறிஞர் டேமியன் பக் பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மருத்துவர் ஹனீஃபுக்கு எதிராக அரசு தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் கைவிடப்பட்டுத் திரும்பப் பெறப்படுவதாகக் கூறினார். இவ்வழக்கைக் கையாண்டதில் அரசின் அனைத்துத் துறையினரும் பொறுப்பற்ற நிதானமின்மையை வெளிப்படுத்தினர் என அவர் ஒப்புக் கொண்டார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கும் உளவியல் ரீதியான தாக்குதலுக்கும் ஆளான மருத்துவர் ஹனீஃபின் குடும்பத்தினர் மட்டுமல்லாது பெங்களூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் இச்செய்தி குறித்து மகிழ்ச்சி ஆரவாரம் தெரித்தனர்.

கடுமையான சூழலுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவர் ஹனீஃபிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோருமா என்ற நிருபர்கள் கேள்விக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்டு அதற்கான சாத்தியம் இல்லை என்று பதிலளித்தார்.

குற்றம் சாட்டுவதும் வழக்குத் தொடுப்பதும் காவல் துறையினரதும் அரசு வழக்கறிஞரதுமான வேலை. இதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு பிரதமர் ஏன் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் ஹனீஃப் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர் இந்தியாவிற்கு புறப்படுவதற்கான முறையான அனுமதியை ஆஸ்திரேலியா இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு இந்திய அரசு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படும் என இந்திய வெளியுறவு இணை அமைச்சர் E. அஹமது தெரிவித்தார். மருத்துவர் ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபணம் ஆகியுள்ள நிலையில் இனியும் அவருக்கு அனுமதி வழங்குவதில் கால தாமதம் கூடாது என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே பல்வேறு மனித உரிமைக்குழுக்களும், மருத்துவர் ஹனீஃபின் வழக்கறிஞர்களும் பொய்யாகப் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டி மருத்துவர் ஹனீஃபை கொடுமைப் படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மரபுப்படி நிரபராதி விடுதலையடைந்தார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து, முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக டாக்டர் ஹனீஃப் மீது பயங்கரவாதி என குற்றத்தைச் சுமத்தி கைது செய்தார்கள்.

விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. பொய் பித்தலாட்டங்கள் செய்து குழப்பங்கள் எஞ்சியது.

இங்கிலாந்து சொன்னதால் நாங்கள் கைது செய்தோம் என்று ஆஸ்திரேலிய சமாதானம் சொன்னாலும் டாக்டர் ஹனீஃபை கைது செய்யச் சொன்ன இங்கிலாந்திடம் ஆதாரம் கேட்டிருக்க வேண்டும். இரு நாடுகளும் டாக்டர் ஹனீஃபின் விஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது என்பது தெளிவு.

Wednesday 25 July 2007

ஜனாதிபதியாக பதவியேற்றார் பிரதீபா பாட்டீல் பாட்டீல்

டெல்லி: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இன்று பதவியேற்றார்.


பதவியேற்பு விழாவுக்காக பிரதீபா பாட்டீல், பாரம்பரிய முறைப்படி அவரது வீட்டிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அப்துல் கலாம் வரவேற்றார்.


பின்னர் அப்துல் கலாமும், பிரதீபா பாட்டீலும் ஒரே காரில், நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ராஷ்டிரபதி பவனிலிருந்து நாடாளுமன்றம் வரை முப்படை வீரர்கள் அணி வகுத்து நின்று இருவருக்கும் மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்றம் வந்து சேர்ந்த பிரதீபா பாட்டீலையும், அப்துல் கலாமையும், பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் சரியாக 2.30 மணிக்கு பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியாக பதவியேற்றுக் ெகாண்டார். அவருக்கு உச்சநீமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட மாநில ஆளுநர்கள், தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.

நன்றி: thats tamil

Tuesday 24 July 2007

வேலைத்தேடி வளைகுடா நாடுகளுக்கு வருகின்றவர்களின் கவனத்தற்கு!

இன்றைய தலைமுறை பரவாயில்லை. பெருமளவில் கல்வி கற்கின்றார்கள்.
என்கிற சந்தோசத்தில் நம் சந்ததிகளின் எதிர்காலத்தை எண்ணி நாம் சற்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இருந்தாலும் இன்று நமது மாணவ சமுதாயம் அடைந்திருக்கின்ற முன்னேற்றம் இன்றைய நவீன யுகத்தின் வேகத்திற்கு இன்னும் ஈடு கொடுக்கவில்லை. அவ்விதம் ஈடு கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நம் ஒவ்வொருவர் உள்ளங்களிலிலும் நிறைந்திருக்கிறது.

வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பைத் தேடி வரும் இளைஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1.கல்வியும் கற்காமல், எந்தவித கைத்தொழிலும் தெரியாமல் எந்த வேலைக்கும் தயார் என்று வேலைத் தேடுபவர்கள்.

2.இன்றைய தேவைக்குகந்ததை கல்லாத பட்டதாரியாக, பணி அனுபவமில்லாமல் சரியான ஆங்கில உரையாடல் தெரியாமல் திணறிக் கொண்டு முடிந்தவரை படிப்புக்கு தகுந்த வேலையைத் தேடி கிடைக்காமல் அலுத்துப் போய் எந்த வேலைக்கும் தயார் என்கிற நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்பவர்கள்.

இரண்டாவது வகையை சார்ந்தவர்களைப் பார்த்து ஆதங்கப் பட்டுக் கொண்டிருக்கின்ற கல்லாத உள்ளங்கள் கற்ற இளம் சகோதரர்களின் நிலை உயர்ந்தாக வேண்டும், தற்போது கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றவர்களின் எதிர் காலம் உன்னதமானதாக விளங்க அவர்கள் சரியாக தயாராக வேண்டும் என்கிற ஆவலுடன் அதற்கான தீர்வுகளையும், வழிக்காட்டுதல்களையும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் வழங்க வேண்டும் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இளம் பட்டதாரிகளில் பெரும்பாலோர் இன்றைய நவீன உலகிற்கு மிகவும் தேவையானவற்றைக் கற்பதில்லை. பொதுவாகவே ஆங்கில உரையாடலில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றார்கள் என்பதுதான் எல்லோராலும் அக்கறையுடன் சுட்டிக்காட்டப் படுகின்ற உண்மை நிலை.

இன்றைய அதிவேக உலகம் கற்பனைக்குதிரையின் வேக ஓட்டத்திற்கேற்ப கடலைத் தூர்த்து கனவு நகரங்களைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது.
முன்னேறும் நாடுகள் பலவற்றிலும் கட்டுமானப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.ஒரு ஊரின் மக்கள் தொகையையை ஓரிரு கட்டிடங்களில் நிரப்புகின்ற வகையில் அழகியக் கலைநுட்பத்துடன் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன புதுப்புதுக் கட்டிடங்கள்.
பல்லாயிரக் கணக்கான வல்லுநர்கள் குழுவாக சாதனைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கு இன்னமும் வேலைவாய்ப்பு சந்தையில் வாய்ப்புகள் ஏராளம். சம்பளம் மற்றும் சகல வசதிகளும் தாராளம்.

ஆம். இன்றைய இளம் மாணவர்கள் எதைப் படிக்கலாம் என்று கேட்டால் ‘கட்டிடக்கலைப் பொறியியல்’ என்றுதான் எங்கும் விடை கிடைக்கின்றது.

இந்தியா உள்பட எல்லா நாடுகளிலுமே இந்த கல்விக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இன்னும் ஆங்கில உரையாடல் குறைப்பாட்டை எப்படி நீக்குவது?
இன்றைக்கு ஆங்கில உரையாடல் பயிற்சிக்கு அநேக வழிமுறைகள்
அறிமுகப் படுத்தப் பட்டாலும் பெரும்பாலும் ஆங்கில மொழியின் இயல்பான நடையிலிருந்து மாறி நமது மொழியின் இயல்பு நடையை அப்படியே மொழிப் பெயர்த்து பேசுவதாகத்தான் அவை அமைகின்றன.இந்த குறைபாடுதான் நாம் ஆங்கிலத்தில் பின்தங்கிய நிலையிலிருப்பதற்கான அடிப்படைக் காரணம்.

சிறந்த வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்புகளை அறிந்து பயிற்சி பெற ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாவலாசிரியர்களின் நாவல்களை படிக்கத் துவங்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் கற்றறிந்தவர்களிடம் கேட்டு அர்த்தங்களைப் புரிந்துக் கொண்டு பயிற்சி பெற்று பேசத் துவங்கும் போது நமது இளம் மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல் சுற்றியுள்ளவர்களை, ஏன் அவர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்
காலத்தை வீணாக்காமல் அதற்கான முயற்சியை இன்றே, இப்போதே துவக்க வேண்டும்.

சமுதாயம் என்னும் ஆலமரத்தைத் தாங்கும் விழுதுகளாய் மாணவர்கள் உறுதியுடன் வாழ்க்கையின் வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.

நன்றி: நீடூர்-நெய்வாசல்

Monday 23 July 2007

லண்டன் தமிழருக்கு அடி-சென்னை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் அடாவடி: 7 பேர் கைது




லண்டனைச் சேர்ந்த தமிழரின் கைக் குழந்தை பந்தைத் திருடி விட்டதாக கூறி, அவரது கையில் இருந்த பந்தைப் பறித்ததோடு நில்லாமல், அந்த தொழிலதிபரையும் சரமாரியாக அடித்து உதைத்த சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் மற்றும் கண்காணிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தி.நகரில் ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இந்த நிறுவனத்தின் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அடாவடி, அராஜகங்கள் செய்தது தொடர்பாக பலமுறை புகார்கள் வந்துள்ளன.

ஒருமுறை பெரிய தொழிலதிபரின் மனைவியையே அடைத்து வைத்ததாகவும் புகார் எழுந்தது. அவர் மானபங்க முயற்சி நடந்ததாகக் கூட புகார் கூறினார். இந்த ஊழியர்களின் அராஜக செயல்கள் குறித்து பலமுறை போலீஸில் புகார்கள் கொடுக்கப்பட்டு, சிலமுறை நடவடிக்கைகள் எடுத்தும் கூட இன்னும் அவர்கள் திருந்தியபாடில்லை.

இந் நிலையில், லண்டனைச் சேர்ந்த தமிழரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள். லண்டனில் வசிக்கும் இளஞ்செழியன் தனது மனைவி குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார்.
வழக்கமாக சென்னைக்கு வரும் வெளியூர்க்காரர்கள் சரவணா ஸ்டோர்ஸுக்குப் போவது போல இவரும் குடும்பத்துடன் போய் பொருட்களை வாங்கியுள்ளார்.

அப்போது அவரது கைக் குழந்தையிடம் பந்தைப் பார்த்த கடை ஊழியர்கள், அதை அவர் திருடி விட்டதாக கூறி பறித்துள்ளனர். ஆனால் அந்தப் பந்துக்குப் பணம் கொடுத்து விட்டதாக கூறிய இளஞ்செழியன், அதற்கான பில்லையும் காட்டியுள்ளார்.

ஆனால் அதைக் கண்டுகொள்ளாத கடை ஊழியர்கள் இளஞ்செழியனை சரமாரியாக அடித்துள்ளனர். காசு கொடுத்து பொருளை வாங்கி, தேவையில்லாமல் அடியையும், அவமரியாதையையும் வாங்கிய அதிர்ச்சியில் இளஞ்செழியன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் 6 ஊழியர்களைக் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகி விட்டனர்.

இந்த நிலையில் நேற்று கடை கண்காணிப்பாளர் லிங்கராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

குர்ஆன் மனப்பாடப் போட்டி!


திருச்சியில் வருகிற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் குர் ஆன் மனப்பாடப் போட்டி நடைபெறுகிறது.

மாநகர ஜமாஅத்தூல் உலமா சபையும், உறையூர் இஸ்லாமிய நலவாழ்வு சங்கமும் இணைந்து மாநில அளவிலான குர் ஆன் ஷரீஃப் மனப்பாடப் போட்டியை நடத்தவுள்ளன.

30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ரோஷன் மஹால் திருமண அரங்கம் மற்றும் ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தப் போட்டி நடைபெறும். முதல் பரிசாக ரூ. 15,000, 2வது பரிசாக ரூ. 10,000, 3வது பரிசாக ரூ. 8000 மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 5000 அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்சாக அன்பளிப்பாக 20 பேருக்கு தலா ரூ. 1000 அளிக்கப்படும்.

Sunday 22 July 2007

ஓட்டு போடத் தெரியாத எம்.பி., எம்.எல்.ஏக்கள்!

ஜூலை 22, 2007 டெல்லி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் 9 எம்.பிக்களும், 69 எம்.எல்.ஏக்களும் செல்லாத ஓட்டுப் போட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் 3,06,810 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஷெகாவத் தோல்வியுற்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் அடிப்படையில் இரு வேட்பாளர்களும் பெற்ற ஓட்டு மதிப்பு

மொத்த ஓட்டுக்கள் - 10,98,882
பதிவான ஓட்டுக்கள் - 9,83,902
செல்லுபடியான ஓட்டுக்கள் - 9,69,422
செல்லாத ஓட்டுக்கள் - 14,480
பிரதீபா பாட்டீல் பெற்ற ஓட்டுக்கள் - 6,38,116
ஷெகாவத் பெற்ற ஓட்டுக்கள் - 3,31,306
வித்தியாசம் - 3,06,810

இதில் 9 எம்.பிக்களும், 69 எம்.எல்.ஏக்களும் போட்ட ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள் என்று அறிவிக்கப்பட்டன.

படிக்காத பாமரர்கள் கூட பளிச்சென ஓட்டுப் போட்டு விட்டு வரும் இந்தக் காலத்தில், மக்கள் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போடத் தெரியாமல் செல்லாத ஓட்டுக்களைப் போட்டுள்ளதை என்னவென்று சொல்வது?.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு ஜாமீன்

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதன் முதலாக இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் முதல் முறையாக 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

122வது குற்றவாளியான நெளசத், 123வது குற்றவாளியான சர்தார் ஆகியோருக்கு நேற்று கோவை தனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்கும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி உத்திராபதி தெரிவித்துள்ளார்.

இருவரும் தலா ரூ. 10,000 ரொக்க உத்தரவாதம் செலுத்தி ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இருவரும் வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு குறித்து பத்திரிக்கைகள், டிவிகள் ஆகியவற்றுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி பலமுறை ஜாமீன் கோரியும் நீதிமன்றம் அளிக்கவில்லை. இந்த நிலையில் முதல் முறையாக இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday 21 July 2007

துணை ஜனாதிபதி: காங். கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி


ஜூலை 21, 2007 டெல்லி:

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பில் தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஹமீத் அன்சாரி போட்டியிடவுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ம் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விட்டது. 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் சமாஜ்வாடி எம்.பி. ரஷீத் மசூத் போட்டியிடுகிறார். நேற்று அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் முக்கியக் கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய தீவிர ஆலோசனை நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக கூட்டணித் தலைவர்களிடையே நடந்து வந்த ஆலோசனைகள் நேற்று முடிவு பெற்றன.
இடதுசாரிகள் சார்பில் தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் முகம்மது ஹமீது அன்சாரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை காங். கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஒருஙகிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. அதில் அன்சாரியின் பெயர் இறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்சாரி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தகவலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முறைப்படிஅறிவித்தார்.

யார் இந்த முகம்மது ஹமீது அன்சாரி? 70 வயதாகும் முகம்மது ஹமீது அன்சாரி 1937ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். சிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் பின்னர் கொல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பிறகு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பைப் படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வில் தேறி ஐ.எப்.எஸ். அதிகாரியான பின்னர் ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தூதராகப் பணியாற்றினார். தற்போது தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக மட்டுமல்லாமல், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் உள்ளார். ஐ.நா. சபையில் இந்தியாவின் சார்பில் நிரந்தர உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற அன்சாரி, பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

அடுத்த முக்கிய கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியும், 3வது கூட்டணியும் முஸ்லீம் வேட்பாளர்களை அறிவித்துள்ளால் பாஜகவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு முனைப் போட்டி நிலவியது. ஆனால் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்படவுள்ளது. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பிக்கள் மட்டுமே வாக்களிப்பார்கள், எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பிரதீபாவுக்கு 171-ஷெகாவத்துக்கு 59


ஜூலை 21, 2007 டெல்லி:

ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் பிரதீபா பாட்டீலுக்கு 171 எம்எல்ஏக்களின் வாக்குகளும் ஷெகாவத்துக்கு 59 எம்எல்ஏக்களின் வாக்குகளும் கிடைத்துள்ளன.


காங்கிரஸ் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபாவுக்கும், பாஜக கூட்டணியின் சுயேச்சை வேட்பாளர் ஷெகாவத்துக்கும் மாநிலவாரியாகக் கிடைத்த வாக்குகள் விவரம்:


மாநிலம்: பிரதீபா பெற்ற ஓட்டு-ஷெகாவத் பெற்ற ஓட்டு


ஆந்திரா: 233 - 2

அசாம்: 92 - 20

அருணாச்சல் பிரதேசம்: 58 - 1

டெல்லி: 50 - 19

பீகார்: 89 - 145

சட்டீஸ்கர்: 37 - 51

குஜராத்: 57 - 123

கோவா: 25 - 14

கர்நாடகா: 83 - 82

ஜார்க்கண்ட்: 49 - 28

ஜம்மு காஷ்மீர்: 77 - 6

இமாச்சலப் பிரதேசம்: 47 - 20

ஹரியானா: 74 - 7

மகாராஷ்டிரா: 223 - 58

மத்தியப் பிரதேசம்: 162 - 53

மணிப்பூர்: 55 - 5

மேகலாயா: 49 - 6

மிசோரம்: 14 - 0

நாகலாந்து: 42 - 12

ஒரிசா: 46 - 100

பஞ்சாப்: 45 - 66

தமிழ்நாடு: 171 - 59


பிரதீபாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதீபா பாட்டீல் வெற்றி-நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார்




ஜூலை 21, 2007 டெல்லி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பெரும் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பிரதீபா பெறுகிறார். தன்னை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிட்ட துணை ஜனாதிபதி பைரான் சிங் ஷெகாவத்தை 3 லட்சத்து 6 ஆயிரத்து 810 மதிப்புள்ள வாக்குகள் வித்தியாசத்தில் பாட்டீல் தோற்கடித்தார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 19ம் தேதி நடைபெற்றது. விறுவிறுப்பான வாக்குப் பதிவுக்குப் பின் நேற்று அனைத்து மாநிலங்களிலுமிருந்து வாக்குப் பெட்டிகள் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டன.
இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது. முதலில் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் அகர வரிசைப்படி மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே வாக்கு எண்ணிக்கையில் பிரதீபா பாட்டீலே முன்னிலையில் இருந்தார். மாலை 5 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. அதில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரதீபா வென்றார்.

பிரதீபாவுக்கு 442 எம்பிக்களின் வாக்குகளும் ஷெகாவத்துக்கு 232 எம்பிக்களின் வாக்குகளும் கிடைத்துள்ளன. அதே போல எம்எல்ஏக்களின் வாக்குகளைப் பொறுத்தவரை பிரதீபாவுக்கு 3,25,180 மதிப்புள்ள வாக்குகள் கிடைத்தன. ஷெகாவத்துக்கு 1,67,050 மதிப்புள்ள வாக்குகள் கிடைத்தன.
எம்பிக்களின் வாக்குகளின் மதிப்பையும் சேர்த்து கணக்கிட்டால் 3 லட்சத்து 6 ஆயிரத்து 810 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பிரதீபா பாட்டீல் ஷெகாவத்தை தோற்கடித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் 13வது ஜனாதிபதியாகிறார் பிரதீபா. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். வரும் 24ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். 72 வயதாகும் பிரதீபா பாட்டீல் வழக்கறிஞராவார்.

45 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். இவர் மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோவான் பகுதியைச் சேர்ந்தவர். சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பலமுறை வென்று எம்.எல்.ஏ, எம்.பியாக இருந்துள்ளார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர்.

இந்திரா காந்தியின் தனிப்பட்ட அன்பை பெற்றவர். சோனியாவுடனும் நெருக்கமாக இருந்து வரும் இவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முன் ராஜஸ்தான் ஆளுநராக இருந்தவர். அன்றுடன் அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிவடைகிறது. ஓய்வுக்குப் பின்னர் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பங்களாவுக்கு அப்துல் கலாம் செல்கிறார். வழக்கமாக குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவருக்கு சம்பிரதாய முறைப்படி வழியனுப்பு விழா நடத்தப்படும்.

ஆனால் அதை கலாம் விரும்புகிறாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எளிய முறையில் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவே கலாம் விரும்புவதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் புதிய முதல்வர் Dr.ராமதாஸ்?!!!


தி.மு.க. அரசை மூச்சுக்கு முந்நூறு தடவை ‘மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசு’ என்று சொல்லி வரும் ஜெயலலிதா, ஒரு மைனாரிட்டி அரசின் ஸ்திரத்தன்மை எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் புரிய வைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.ஜெயலலிதா, திரைமறைவில் காங்கிரஸக்குள் கல்லெறிந்திருக்கிறார்.

கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லாத காங்கிரஸில் பலவகையிலும் பலவீனமான பத்து எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து செங்கோட்டையனை இந்தக் குதிரை பேரத்தில் ஈடுபடவைத்திருக்கிறாராம்.

ஒரே சமூகத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஐந்துபேர் இதற்குச் சம்மதித்துப் பணப் பரிவர்த்தனைகளும் முடிந்துவிட்டதாம். இது தவிர, ராமதாஸின் சம்பந்தியான கிருஷ்ணசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க.வை விளாசும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என கணக்குப் போட்டு, கிட்டத்தட்ட காங்கிரஸை சரிபாதியாக உடைத்து விடும் வேலையும் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.இப்படி பா.ம.க., காங்கிரஸின் ஒரு பிரிவு, அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவற்றுடன், மார்க்சிஸ்ட்டை சரிக்கட்டி அழைத்து வந்துவிட்டால், இந்திய கம்யூனிஸ்டும் தானாக வந்துவிடும் என்று கணக்குப் போடும் ஜெயலலிதா, இதெல்லாம் சேர்ந்தால் நூலிழை மெஜாரிட்டியிலாவது ஓர் ஆட்சியை அமைத்துவிட முடியும் என்று நம்புகிறாராம்!’’அதாவது, திட்டமிட்டபடி எல்லாம் கைகூடி வந்தால், அ.தி.மு.க. ஆட்சி அமைக்காதாம். இத்தனை தூரம் தன்னை நம்பிவரும் ராமதாஸின் மனம் குளிரும்படி பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைய வெளியில் இருந்து ஆதரவளிக்கவும் தயார் என்ற மனநிலையில் இருக்கிறாராம் ஜெ.முழுவதும்.


நன்றி: குமுதம் ரிப்போட்டர்

Wednesday 18 July 2007

துபை TNTJ யின் தஃவா பணியும்! இஸ்லாத்திற்கு மாறும் மாற்றுமத சகோதரர்களும்


அல்லாஹ்வின் மார்க்கத்தில் அலை அலையாய் மக்கள் இணையும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நாள்தோறும் பெருகி வருவதன் தொடரில் ஒன்றாய் கடந்த 13.07.07 வெள்ளியன்று JT மர்கஸில், துபையில் பணியாற்றும் இலங்கை கட்டுநாயக பகுதியை சேர்ந்த, புத்த மத தாய்க்கும் கிருஸ்தவ மத தந்தைக்கும் பிறந்த ''சுரங்கா' என்ற சிங்கள சகோதரர் இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தில் முஹம்மது ரிஸான் என்ற பெயரோடு தன்னை இணைத்துக் கொண்டார், அல்ஹம்துலில்லாஹ்.

எத்தனையோ இயக்கங்கள் இருக்க தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதன் வெளிப்பாடே கடந்த 4 வாரங்களில் JT மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற 3 வது சகோதரர் இவர் என்ற நிஜம்.
பிறந்து வளர்ந்த மதங்களை துறந்து, குர்ஆன் ஹதீஸை விளங்கி மார்க்கத்தை ஏற்கும் இம்மக்களிடமிருந்து இஸ்லாத்திற்குள்ளேயே தன்னை மாற்றிக் கொள்ள மறுக்கும் மத்ஹபு மற்றும் தர்காவாதிகள் பாடம் கற்க வேண்டும் என்ற இலங்கை மவ்லவி.
முஹம்மது நாசர் அவர்களின் கூற்று இந்நிகழ்வின் சிந்திக்கத் தூண்டும் சிறப்பம்சங்களில் ஒன்றாய் அமைந்தது.

செய்தி:
துபையிலிருந்து... அதிரை அமீன்

Tuesday 17 July 2007

மதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் சு.விசுவநாதன் மரணம்




அதிரை மக்களிடம் ஓர் கருத்துக்கணிப்பு!



நமதூர் அல் அமீன் பள்ளிவாசல் கட்டுவதற்க்கு அதிரை பேரூராட்ச்சி நிர்வாகமும் அதன் தலைவர் M M S அப்துல் வஹாப் மற்றும் துனைத்தலைவர் இராம குணசேகரன் ஆகியோர் தலைமையிலான நிர்வாகமும் பெரும்பாலான வார்டு உறுப்பினர்களும் இப்பள்ளிகட்டுவதற்க்கு எதிற்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதனால் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில்கடும் கண்டனகுரல் ஒலிக்கிறது இதனை கருத்தில் கொண்டு ஒரு பிரத்தியோக கருத்துக்கணிப்பை அதிரை கல்லூரி மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ள அதிரை மக்களிடம் நடத்தியது.
அதில் பள்ளிவாசல் கட்டுவதற்க்கு தடையாக இருப்பவர்கள் யார் என்ற கேள்விக்கு 69% பேர் MMS என்றும் 30% பேர் இராம குணசேகரன் என்றும் 1% பேர் கவுன்சிலர்கள் என்றும் தெரிவித்தனர்.
பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஏன் ஆக்கிரமிக்க பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு 81% பேர் தங்களுடைய சொத்தாக்கி கொள்ள என்றனர்.
பல் கொட்டிய பிறகும் கெட்டியாக பதவியை ஏன் பிடித்துள்ளார் என்ற கேள்விக்கு ஊழல் பெருச்சாலிகளை தன் கைவசம்வைத்து பிழைப்பு நடத்த என 66% பேர் தெரிவிக்கிறார்கள்.
அதிரை பேரூராட்ச்சி நிர்வாகத்தை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடந்தால் MMSக்கும் இப்போதைய கவுன்சிலருக்கும் வாக்களிப்பீர்களா? என்பதற்க்கு எதிரி அத்வானிக்கு வாகளித்தாலும் அழிப்போம் ஆனால் துரோகிகளுக்கு எங்கள் வாக்கு கிடையாது என்றனர்.

குண்டூசி



குர்ஆன் ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே நம்பவேண்டும். விதி நம்பிக்கைகளில் ஒன்றாகும். மார்க்கத்தின் சட்டதிட்டங்களை விரிவாக நம் சிந்தனையை செலுத்தி அலசி ஆய்வது போல் விதியைப் பற்றி ஆராயக்கூடாது.விதியைக் கீழ்கண்டவாறு நம்புதல் வேண்டும்.

1. நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற, நடக்கவிருக்கின்ற அனைத்து விஷயங்களும் அதன் அறிவும் அல்லாஹ் நன்கறிந்தவன் என நம்புவது.

2. நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற, நடக்கவிருக்கின்ற இவை அனைத்தும் ஏற்கனவே எழுத்தப்பட்டுவிட்டன.

3. இவ்வுலகில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் ( மனித மற்றும் பிற ஜீவராசிகளின் ) அல்லாஹ்வின் விருப்பபடியே நடக்கின்றன. ( செயல்படுகின்றன )

4. படைப்பினங்களுக்கு அதிபதியான அல்லாஹ்வே இவ்வனைத்தையும் நிகழ்த்துபவன்.

1. மனிதனுக்கு அல்லாஹ் அறிவை வழங்கியிருக்கிறான். இது பிற ஜீவராசிகளை விட மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் மிகப்பெரும் அருட்கொடையாகும்.

2. பகுத்தறிவால் ஆராய்ந்து நலன் தரக்கூடியதைப் பிரித்து அறிந்து அதன்படி செயல்படும் தீர்ப்பையும் ஆற்றலையும் அவனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்.

3. மனிதனை நேர் வழிப்படுத்த அல்லாஹ் நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு நேர்வழிக் காட்டும் வேதங்களை வழங்கி நல்லதை கெட்டதை நன்றாக உணர்த்தியிருக்கிறான்.

4. நல்லதை கெட்டதைத் தேர்வு செய்யும் பொறுப்பும் மனிதனிடமே விடப்பட்டுள்ளது. எனவே அவனின் நல்லறங்களுக்கு நற்கூலியும் தீயவைகளுக்கு தண்டனையும் மறுமையில் அல்லாஹ் வழங்குகிறான்.

5. அல்லாஹ் எவருக்கும் அநீதம் செய்பவனல்ல.90:10. அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.76:3. நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.4:165. தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகபும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே! அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) ''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!''4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.நன்மையும், தீமையும் அல்லாஹ்விடமிருந்து4:78. ''நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது'' என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ''இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது'' என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்; ''எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!''4:79. உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.மன்னு ஸல்வா - பனீஇஸ்ராயிலர்களுக்குஹதீஸ் எண் : 2235 தரம்:- ஹஸன்ஒரு அடியான் ஒரு இடத்தில் மரணிக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருந்தால் அவ்விடத்தில் அவனுக்கு ஒரு தேவையை ஏற்படுத்துவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மதர் பின் உகாமிஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.கல்மழை - லூத்நபி சமுதாய மக்கள்நன்மையும், தீமையும் அல்லாஹ்விடமிருந்தே. நற்கருமங்களுக்கு கூலியும் பாவத்திற்கு தண்டனையும் என்று நம்புதல் வேண்டும்முயற்சி செய்யவேண்டும் (அல்லாஹ் நாடினால் நாங்கள் பாவம் செய்ய மாட்டோம்) எனக் கூறவேண்டும்6:148. (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் ''அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்'' என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்'' என்று (நபியே!) நீர் கூறும்.8:28. ''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு'' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.8:29. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.ஹதீஸ் எண் : 2231 தரம்; :- கரீப்நல்லவை தீயவை யாவும் விதிப்படியே நிகழ்கின்றன. ஓருவருக்கு எது ஏற்படுகிறதோ அது தவறிவிடக் கூடியதன்று. எது தவறி விட்டதோ அது ஏற்படக்கூடியதன்று என்று உறுதியாக நம்பாதவரை ஒருவர் முமீனாக முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.ஹதீஸ் எண் : 2232வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை: நான் அல்லாஹ்வின் தூதர். என்னை இறைவன் சத்தியத்துடன் அனுப்பினான் என்று உறுதியாக நம்பாத வரை மரணம், மரணத்திற்க்கு பின் எழுப்படுதல், விதி ஆகியவற்றை நம்பாதவரை ஒருவர் மூமினாக முடியாது என்று நபி (ஸல்) கூறியதாக அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.ஹதீஸ் எண் : 2245 தரம்; :- ஹஸன் ஸஹீஹ் கரீப்வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான் என்று நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்.ஹதீஸ் :நிச்சயமாக அல்லாஹ் எழுதுகோலை படைத்து எழுது என்று கட்டளையிட்டான். எதை எழுத என்று அது கேட்டது. அதற்கு அவன் இப்போது ஆகியிருப்பதையும் இனிமேல் உலக இறுதிவரை ஆகப் போவதின் விதியையும் எழுது எனக் கூறினான்.திர்மிதி : உபாதா பின் ஸாமித் (ரலி)விதி எந்த படிவத்தில் உள்ளது? ஏடு வடிவத்தில் உள்ளது.6:59. அவனிடமே மறைவனவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனின்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடவிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.54:52. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.11:6. இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.நமக்கும் விதிக்கும் உள்ள தொடர்புஹதீஸ் எண் : 2219 தரம்; :- ஹஸன் ஸஹீஹ்நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் தரையை கிளறிக் கொண்டிருந்தார்கள். திடீரெனத் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி '' உங்களில் எவராக இருந்தாலும் சொர்க்கத்தில் அவருக்குள்ள இடமும், நரகத்தில் அவருக்குள்ள இடமும் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்கள். அப்போது நபிதோழர்கள் '';அல்லாஹ்வின் தூதரே நாங்கள் செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் '' கூடாது ! நீங்கள் செயல்படுங்கள். ஓவ்வொருவருக்கும் எதற்காக படைக்கப்படடுள்ளனரோ அதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளனர் என்று விடையளித்தார்கள். இதை அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - புகாரி, முஸ்லீம்;ஹதீஸ் எண் : 2220 தரம்; :- ஹஸன் ஸஹீஹ்உங்களில் ஒருவரைப் படைக்கும் போது தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (விந்து நிலையில்) வைக்கப்படுகிறார்கள். பின்னர் அதே கால அளவுக்கு கருவறைச் சுவற்றில் ஒட்டிக் கொணடடிருக்கும் நிலையை அடைகிறார். பின்னர் அவரிடம் அல்லாஹ் வானவரை அனுப்புகிறான். அவர் உயிரை ஊதுகிறார். நான்கு விசயங்களை எழுதுமாறு அவர் கட்டளையிடப்படுகிறார். (அதற்கேற்ப) அவரது செல்வம், தவணை, அவரது செயல்பாடு, அவர் பாக்கியசாலியா? என்ற விபரம் ஆகிய நான்கு விஷயங்களை அந்த வானவர் பதிவு செய்கிறார். எவனைத் தவிர வேறு கடவுள் இல்லையோ அவன் மேல் ஆணையாக! உங்களில் ஒருவர் தமக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரே ஒரு முழம் மட்டுமே இருக்குமளவுக்கு சொர்க்கவாசி செயல்களைச் செய்து வருவார். விதி அவரை வென்று முடிவில் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகில் நுழைவார். மேலும் உங்களில் ஒருவர் தமக்கும் நரகத்திற்க்கும் ஒரு முழம் மட்டும் உள்ள அளவுக்கு நரகவாசிகளின் செயல்களைச் செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களைச் செய்து சொர்க்கத்தில் நுழைவார் என்று நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அறிவிக்கிறார்கள்.எதிர்காலச் செய்திகள் என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறிந்துக் கொள்ளமுடியாது. கிளி ஜோஸ்யம், குறி, கைரேகை சாஸ்திரம், சகுணம், பால் கித்தாபு பார்த்தல் ஆகிய இவை அனைத்தும் இம்மை மறுமை நஷ்டத்தை நமக்கும் ஏற்படுத்தும்.இன்ப துன்பத்தில் விதியை நம்பியவரின் நிலை9:51. ''ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்'' என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!



சச்சார் கமிட்டியின் அறிக்கை வெளிவந்த பின் முஸ்லிகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற குரல் பா.ஜ.க தவிர அனைத்து தரப்பிலிருந்து ஒழிக்க ஆரபித்து கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டது. உ.பி மாநில தேர்தல் நேரத்தில் ஓய்ந்த குரல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் ஓர் மின் அஞ்சல் இனையத்தில் உலா வந்தது, சிலர் படித்திருக்கலாம், பலர் ஓரங்கட்டியிருக்கலாம். அவர்களுக்காக இதோ, அம்மின் அஞ்சலின் சாரம்சம், இளைஞர் குழுவினர், கர்நாடக மாநிலத்தில், பல கிராமங்களில் உள்ள பள்ளிகூடங்களுக்கு சென்று கல்வியின் அவசியம் மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. எவ்வாறு பாடங்களை மனணம் செய்வது, பாடங்களை எவ்வாறு தெரிவு செய்து படிப்பது, பரீட்சை காலங்களில் எவ்வாறு பாடங்களை திட்டமிடுவது போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி சாதனை புரிந்திருக்கிறது. இந்த ஒருவார நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட 3000 மேற்ப்பட்ட 10-ம் மற்றும் 12-ம் மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டு பயன் அடைந்து இருக்கின்றனர். இன்று நமக்கு தேவை இது போன்ற கல்வி சம்பந்தமான ஊக்குவிப்புதான். இன்ஷா அல்லாஹ், நம் சமுதாயத் தலைவர்கள், ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தால், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அதற்காக போராட வேண்டும். எந்த சமுதாயம் கல்வியில் முன்னேறி இருக்கிறதோ, அச் சமுதாயம், என்றும் சமூகத்தில் பின் தங்காது.


என்னதான் இட ஒதுக்கீடு செய்தாலும், படித்தவர்கள் இல்லையென்றால், என்ன் பயன்?.


தலைவர்களில் ஒருவராவது, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகள் பற்றி பேசியிருப்பார்களா? என்பதே சந்தேகம் தான்.
மறுபக்கம், 8 , 20, சுன்னத் ஜமா அத், நஜாத் என்று அது சம்பந்தமான மின் அஞ்சல்கள், இதனால் நமக்கிடையே பிரிவினை தான் ஏற்படுகிறது. இதையெல்லாம் விட்டு விட்டு, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகள், திட்டங்கள் போன்றவற்றை நடத்தினாலே, போதும், அல்ஹம்துலில்லாஹ், நம் சமுதாயம், யாரயும் நம்பி இருக்கத் தேவையில்லை, இட ஒதுக்கீடு தேவை இருக்காது, யாருக்கும் அடிமைப்பட்டு இருக்க வேண்டியதில்லை.
நாம் எங்கிருந்தலும் சரி, அவரவர்கள் ஊரிலேயே, ஆரம்பிக்கலாம், இதனால், வருங்கால மாணவ சமுதாயம் பயன்பெறும், அவர்கள் சிறந்த குடிமக்களாக, நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் சேவை செய்வார்கள்.
இன்று, அப்துல் கலாம், நாட்டின் உயர் பதவியை அடைந்தன் காரணம், அவரின் கல்வி தகுதிதான பிரதானமாக அமைந்தது என்று எல்லோருக்கும் தெரியும். யூதர்கள், இன்று உலகையே ஆன்று கொண்டிருப்பதன் காரணம், அவர்களுடைய கல்வி தானே தவிர வேரொன்ருமில்லை என்பதை எல்லோரும் மனதில் நிலைநிறுத்திக் கொள்வோம்.

Sister Yvonne Ridley Becomes Muslim Islam Video

சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து திருச்சியில் பாரதீய ஜனசக்தி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவி செல்வி உமாபாரதி (முன்னாள் பாஜக) "ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்" என்று கர்ஜித்தார்.
அவரது பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதாலோ என்னவோ திருச்சி போலீசார் அவர் மீது கலவரத்தை தூண்டுதல், கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்துறவியான உமாபாரதி, 'சேது சமுத்திர திட்டத்தினால் பாதிக்கப்படும் 10 லட்சம் பொது மக்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று அனைத்து மதத்தினரும் உள்ளார்கள்.
ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க அவர்கள் முன்வரவேண்டும். ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருப்பதால்தான் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துறவிகளெல்லாம் ஏன்தான் இப்படி 'உயிரை எடுக்குறாங்களோ', தெரியலை!

Sunday 15 July 2007

tamil islam clip 1








பள்ளிவாசலுக்கு இடையூறு செய்யும் பேரூராட்சி

அதிரை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதே அல்அமீன் பள்ளியின் பேருந்து நிலைய வாசலை அதிரை பஞ்சாயத்து போர்ட் நிர்வாகம் எவ்வித முன்னறிவூபும் இன்றி அடைத்துள்ளது.
பஞ்சாயத்து போர்டுக்கும் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டிக்கும் இடையேயான நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பேரூராட்சியின் இத்தகைய அடாவடி நடவடிக்கையால் இன்று மாலை (14-07-2007) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அதிரை முஸ்லிம்கள் ஒன்றுகூடி பள்ளிவாசலில் ஆலோசனை நடத்தினர்.
இதனால் எழுந்துள்ள அனாவசிய பதட்டத்தைத் தனிக்க காவல்துறையினர் பேருந்துநிலைய பள்ளிவாசல் அருகே பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.பேரூராட்சி அலுவலரின் அத்துமீறிய செயலைக் கண்டித்து அதிரையில் நோட்டீஸ் மூலம் கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளதைக் காணமுடிந்தது.
மத்தியிலும் மாநிலத்திலும் மதநல்லிணக்க அரசுகள் அமைந்துள்ளதைப் பொறுக்க முடியாத சில மதவாத சக்திகள் சிலவருடங்களுக்கு முன் நமதூரின் அமைதிக்கும் மதநல்லிணக்கத்திற்கும் வேட்டுவைக்க மேலத்தெருவில் முஸ்லிம்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதியில் 'திடீர்' முனிக்கோவிலை ஏற்படுத்தினர்.
உயர்நீதிமன்றம் தலையிட்டு, மதநல்லிணக்கத்திற்கு ஊறு செய்யும் இத்தகையச் செயல்களை தடுத்து நிறுத்த முன்வந்தது குறிப்பிடத் தக்கது.
அதிரை நகர உலமாக்கள் மற்றும் ஊர்ப்பெரியவர்களின் ஆலோசனைப்படி, எத்தகைய பிரச்சினைகளையும் சட்டரீதியில் அணுகுவது என்றும், பேரூராட்சி அலுவலருடன் சேர்ந்து கொண்டு மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் சில விஷமிகளும் கூட்டு சேர்ந்துகொண்டு தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பில் சொல்லப்பட்டது.
தொழுகைக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்றும் சில மதவாத சக்திகள் மட்டுமே தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேவையற்ற வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்படும் செயல்களில் எவரும் ஈடுபட்டு நம்தூரின் பொதுஅமைதிக்குப் பங்கம் வந்து விடக்கூடாது என்பதே அதிரை நலன்விரும்பிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு.

Saturday 14 July 2007

Alaikal - Tamil news - சூரியக்கிரகத்திற்கு அப்பால�


சூரியக்கிரகத்திற்கு அப்பால் இருக்கும் கிரகம் ஒன்றில் புவியில் இருப்பதைப் போலவே தண்ணீர் இருப்பதாக நாஸா அறிவித்துள்ளது. எச்.டி.209458 பீ என்று இதன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 150 ஒளி வருடங்களுக்கு அப்பால் ஒரு சூரியனை சுற்றி இது வலம் வருகிறது.
நமது கிரகத் தொகுதியில் சூரியனும், வெள்ளியும் அமைந்திருப்பது போல இதன் அமைவு இருக்கிறது. சுமார் மூன்றரை நாட்களில் இதன் ஒரு நாள் பயணம் இருக்கிறது. கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் பூமியில் இருந்து 600 கிமீ தொலைவில் நிறுத்தப்பட்ட உறபிள் தொலை நோக்கி இதைக் கண்டு பிடித்துள்ளது. இந்தக் கிரகத்தில் விழும் சூரிய ஒளியானது வித்தியாசமான அளவில் விழுவதாகக் கூறப்படுகிறது. இதனுடைய தோற்றம் பூமி போன்ற ஒரு காட்சியாகவே இருக்கிறது. உலகத்தில் முதல் முதலாக இப்படியொரு செய்தி வெளியாகியுள்ளதால் பலத்த அதிர்ச்சியை அறிவியல் சமூகத்தில் இது ஏற்படுத்தியுள்ளது.


எதிர்வரும் 15 வருடங்களுக்குள் புவியில் உள்ளது போல கடல்கள், தாவரங்கள் கொண்ட அழகிய கிரகமொன்றின் படத்தை இந்த உலகத்திற்கு தருவேன் என்று கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் நாஸாவின் தலைவராக இருந்த விஞ்ஞானி டான் கோல்டன் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் சில வருடங்கள் இருக்க இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு கிரகத்தில் நீர் இருந்தால் அதில் இருந்து உயிரினங்கள் தாவரங்கள் போன்றன உருவாகலாம். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வர வாய்ப்புள்ளது. வானியலாளர் ராவிஸ் பிறீமன் இக்கிரகத்தில் இருப்பது தண்ணீரே என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அடுத்து என்ன மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் காத்துள்ளன.
புவிமீது ஒவ்வொரு தினமும் பல்லாயிரக்கணக்கான றேடியோ சமிக்ஞைகள் வருகின்றன. இவை எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை என்று கூறி, அண்ட வெளிக்கு புவி பற்றிய தகவல்களை காலஞ்சென்ற விஞ்ஞானி கார்ள் சாகன் அனுப்பி வைத்தது தெரிந்ததே. அவர் அனுப்பிய றேடியோ சமிக்ஞைகள் புவியில் ஆண் - பெண் என்று இரு பாலருண்டு, 0 முதல் 9 வரை எமது இலக்கங்கள் உள்ளன, உம்முடன் சமாதானமாக நாம் இருக்க விரும்புகிறோம் ஆகிய செய்திகளை உள்ளடக்கியிருந்தது. குறிப்பிடத்தக்கது.

ஆதரவு குறைந்து வருகிறது அதிபர் புஸ்சிற்கு!

நேற்று வெளியாகிய நியூஸ்வீக் சஞ்சிகை நடாத்திய புதிய ஆய்வு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சிற்கு தொடர்ந்து ஆதரவு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. தற்போதய நிலையில் அவருக்கு 26 வீதமானவர்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது போல வார்டர்கேட் விவகாரத்தில் செல்வாக்கிழந்த முன்னைய அமெரிக்க ஜனாதிபதி றிச்சாட் நிக்சனுக்கு 1974ம் ஆண்டு 23 வீதமான மக்களின் ஆதரவே இருந்தது. இப்போது அவருடைய வீழ்ச்சிப் புள்ளியை புஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஈராக் போரை தவறாக கையாண்டார் என்ற குற்றச்சாட்டை நாலு பேருக்கு மூன்று அமெரிக்கர்கள் தெரிவிக்கிறார்கள் என்றும் நியூஸ் வீக் கூறுகிறது.
அதேவேளை ஈராக்கில் சதாம் உசேனுக்கும் அவருடைய உயர்மட்ட ஆட்சிப்பங்காளர் ஐவருக்கும் வழங்கப்பட்ட மரணதண்டனைகள் தகவல் குறைவாகவும், கடும் பிழைகளை உள்ளடக்கியதகவும் இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற தவறுகள் வருங்காலத்தில் நடைபெறலாகாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பாளர் றிச்சாட் டிக்கர் தெரிவித்தார்.