Thursday 8 January 2009

என்ன பாவம் செய்தன இந்த பிஞ்சுகள்!







அன்பர்களே!
ஹமாஸ் நிலைகள் மீதுதான் நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என்று அரபு நாடுகளையும், மேற்கத்திய நாடுகளையும் நம்பவைத்து அவர்களின் மவுனத்தை தனக்கு சாதகமாக்கி கோர தாண்டவமாடிவருகிறது இஸ்ரேல்.
ஒரு பாவமும் அறியா பச்சிளம் பாலகர்கள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. பழிவாங்கும் இஸ்ரேலும், பார்த்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம் நாடுகளும் இந்த உலகில் வேண்டுமானால் தப்பிக்கலாம் ஆனால் மறுமையில் இந்த பிஞ்சுகளிடம் இறைவன்,
நீங்கள் என்ன பாவம் செய்ததால் கொலை செய்யப்பட்டீர்கள் எனவினவும்போது,

இறைவா! உனது நாட்டப்படி பாலஸ்தீன மண்ணில் பல கனவுகளோடு பிறந்தோம் பெற்றோரின் அரவணைப்பில் சுகம் காணவேண்டிய எங்களை யூத ஓநாய்கள் குதற வந்தபோது குரல் கொடுத்தோம் எங்களை காத்துக்கொள்ள! ஓடிவந்தனர் ஹமாஸ் வீரர்கள். அந்தோ பரிதாபம் அவர்களும் நிராயுதபாணிகளாய்!! இறுதில் நாங்களும் எங்களை காக்கவந்த ஹமாஸ் வீரர்களும் யூத ஓநாய்களின் ரத்தப்பசிக்கு இரையானோம்.

எங்கள் இறைவா! நாங்கள் கதறியபோது, உன்னால் செல்வமும் அதிகாரங்களும் வழங்கப்பட்ட ஏனைய முஸ்லீம் நாடுகள் வேடிக்கை பார்த்தது! தங்கள் அரியாசனத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு!! என்று இந்த பிஞ்சுகள் கூறினால், இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றுபவர் யார்? இதை முஸ்லீம் நாடுகள் உணரவேண்டும்.

மேலும் இறைவன்சூரத்துன் நிசாவில்,

பலகீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக போர் செய்யாமல் இருக்க உங்களை தூண்டியது எது?
என்று கேட்கிறான்.
இதற்கு என்ன பதிலை முஸ்லீம் அதிகார வர்க்கம் வைத்துள்ளது என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.



No comments: