Thursday, 16 August 2007

தென்காசி இந்து முன்னணி தலைவன் கைது


தென்காசி பஜாரில் கடந்த 14ம் தேதி இந்து முன்னணி இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டினார்கள். பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் முஸ்லீம்கள் 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இத்தாக்குலில் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இந்து முன்னணியைச் சேர்ந்த இந்துத்துவ கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட பஷீர், நாகூர் மீரான், அசன் கனிஆகிய 3 பேர் ஜனாஸவையும் த.மு.மு.க மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் தலைமையில் அவரது உறவினர்கள் பெற்று நடுப்பேட்டை கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் அலாவுதீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செந்தில், கபிலன், சக்தி பாண்டியன், சுப்பிரமணியன், சுரேந்தர், முத்து, சேகர், மாலையப்பன், சண்முகம், மற்றொரு சேகர், ஆட்டோ ரமேஷ், பிஸ்தா மணி, செண்பகம் ஆகிய இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் சக்தி பாண்டியனும், பிஸ்தா மணியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.



அதேபோல சக்தி பாண்டியன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஹனிபா, அப்துல்லா, அலாவுதீன், அசன்கனி, அபு, ராஜா முகமது, செய்யதலி, மீரான் முகைதீன், நவாஸ், நாகூர் மீரான், சம்சுதீன், பசுலுதின், ஜின்னா மகன் மற்றும் தொழில் அதிபர் ரகுமான் பாட்ஷா, ஹாஜி முஸ்தபா நிறுவனங்களின் உரிமையாளர் கமால் முகைதீன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.





கைது செய்யப்பட்ட சக்தி, பிஸ்தா மணி, அனிபா, அலாவுதீன் ஆகியோர் நேற்றிரவு தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களை வரும் 30ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடையநல்லூர், செங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடையநல்லூர், செங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று தென்காசியில் சில கடைகள் திறக்கப்பட்டன. போக்குவரத்தும் சீராகி வருகிறது. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.



இலண்டன் மையப் பள்ளி இமாம் மீது கொடும் வன்முறை - இமாம் கவலைக்கிடம்!

இலண்டனில் இருக்கும் மையப் பள்ளியின் இமாம்களில் ஒருவர் மீது கடும் கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.

இது ஐக்கிய ராச்சியத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக வளர்ந்து வரும் வெறுப்பினால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலாக இருப்பதை அறிய முடிகிறது.

இலண்டன் மையப்பள்ளியின் 58 வயதான இமாமிடம், கடந்த வெள்ளியன்று (10/8/2007) காலையில் 40 வயது மதிக்கத்தக்க ஐரிஷ் மனிதர் வந்து, தான் இஸ்லாத்தைத் தழுவ விரும்புவதாகக் கூறினார். அவரை வரவேற்ற இமாம் அவருக்கு பேரீச்சைக் கனிகளை அளித்து இஸ்லாத்தின் அடிப்படைகளை விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார்.

அதனை கவனித்துக் கொண்டிருப்பது போலப் பாசாங்கு செய்த ஐரிஷ் நபர் திடீரெனத் தரையில் குப்புறப் படுத்து ஏதேதோ மந்திரங்களைச் சொன்னார். பின்னர் விருட்டென எழுந்து இமாமை இரத்தம் வரும் அளவுக்குக் கண்மூடித்தனமாகத் தாக்கி அவரைத் தரையில் தள்ளினார். இமாம் அவர்களின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து அவரது கண்களைத் தனது இரு விரல்களால் குத்திக் காயப் படுத்தினார்.

இதனால் நிலைகுலைந்த இமாம் உதவி கேட்டுக் கூச்சல் எழுப்பினார். இதனால் மஸ்ஜிதில் பணியில் இருந்த காவலாளிகள் ஓடிவந்து இமாமை ஐரிஷ் நபரிடம் காப்பாற்றினர். காவல்துறையின் அவரசப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஐரிஷ் நபர் கைது செய்யப்பட்டார். இரத்த வெள்ளத்தில் கிடந்த இமாம் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மஸ்ஜிதின் இயக்குனர் டாக்டர். அஹ்மத் அல் துபயான் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் நிச்சயமாக பெருகிவரும் இஸ்லாமோஃபோபியாவின் விளைவு தான் என்றும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து மஸ்ஜித்களுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நன்றி: முஸ்லிம் நியூஸ்

Tuesday, 14 August 2007

தென்காசியில் இந்து முன்னணி வெறியர்களின் வெறியாட்டம்!!!





நடுரோட்டில் 6 பேர் ஓட ஓட வெட்டி கொலை நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று பட்டப் பகலில் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அரிவாள்களால் வெட்டிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் படுகொலையாயினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.

தென்காசி நகர இந்து முன்னணித் தலைவராக இருந்த குமார் பாண்டியன் கடந்த வருடம் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஹனீபா, அப்துல்லா, சுலைமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்துத்துவ கும்பல் முஸ்லிம்களை கொல்வதற்கு அவ்வப்போது பிரச்னை செய்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட தமிழக முஸ்லீம முன்னேற்றக் கழகத் தலைவர் மைதீன் சேட்கானை இந்துத்துவ கும்பல் கடந்த மார்ச் மாதம் வெட்டியது.

இந்து முன்னணித் தலைவராக இருந்த குமார் கொலை வழக்கு தொடர்பாக

ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜாராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜாராகி வந்த நிலையில் அவர்களது நடவடிக்கைகளை குமார் பாண்டியன் ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்துவ கும்பல் கண்காணித்து வந்துள்ளனர்.
அவர்களை போட்டுத் தள்ள முடிவு செய்து இன்று காலை குமார் பாண்டியனின் தம்பி செந்தில் தலைமையில் இந்துத்துவ கும்பல் கூலக்கடை பஜார் பகுதியில் காரில் பதுங்கியிருந்தனர்.

இந் நிலையில் இன்று காலை ஹனீபா, அப்துல்லா ஆகியோர் 4 ேபருடன் தென்காசி காவல் நிலையத்துக்கு 2 பைக்குகளில் கையெழுத்துப் போட சென்றனர். அவர்களை கூலக்கடை பஜார் பகுதியில் முத்தாரம்மன் கோவில் அருகே வைத்து செந்தில் மற்றும் இந்துத்துவ கும்பல் சுற்றி வளைத்தது.

காரில் வந்த அவர்கள், பைக்குகளை வழி மறித்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், அவை வெடிக்கவில்லை. இதையடுத்து அரிவாள்களுடன் காரிலிருந்து குதித்து தாக்குதல் நடத்தினர்.

அசன் கனி மற்றும் அசேகர் அவரது நண்பர் ரவி, ஆகியோர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு அந்த இடத்திலேயே பலியாயினர்.

இவர்களுக்கு கை, கழுத்து, தலை, கால் என பல இடங்களிலும் வெட்டு விழுந்துள்ளது.

ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி வெட்டியதில் அப்துல்லா, அபு அன்சாரி, நாகூர் மிரான், ராஜா, மீரான் மைதீன், செய்யது அலி,செந்தில், ஆகிய 7 பேர் படுகாயமடைந்து தென்காசி மேலமுத்தாரம்மன் கோவில் அருகேயும், கூலக்கடை பஜாரிலிருந்து பூங்கொடி விநாயகர் கோவில், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியிலும் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தனர்.

போலீசார் விரைந்து வந்து இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், இவர்களில் நசீர், நாகூர் மீரான்,செந்தில், ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

இத் தாக்குலில் சையத் அலி, அபு, மீரான், ராஜா, அப்துல்லா ஆகியோர் படுகாயமடைந்து பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிய தெருவுக்குள் இந்துத்துவ கும்பல் பயங்கரமாக ஓடி, விரட்டி வெட்டிக் கொண்டது அந்தப் பகுதியையே பீதியில் ஆழ்த்திவிட்டது.

அந்த வழியாக சென்ற பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு சிலர் கடைகளில் புகுந்து உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் தென்காசியில் கடைகள் மூடப்பட்டுவிட்டன. மதக் கலவர அபாயம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து கடையநல்லூரிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

அங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் பிரகாஷ், எஸ்.பி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் தென்காசியில் முகாமிட்டுள்ளனர்.

Thursday, 9 August 2007

அல் அமீன் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடமை!


அல் அமீன் மஸ்ஜிதின் அவசியத்தை உணராமல் நமதூர் மக்களில் சிலர் விதண்டாவாதமாகச் செயல்படுவதோடு இறையில்லத்தை நிர்மாணிக்கும் மார்க்கக் கடமையில் தங்களை அர்ப்பணித்துள்ள நமதூர் சகோதரர்களை இழிவாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.

ஏற்கனவே பல பள்ளிவாசல்கள் இருக்கிறதே! பிரச்சினைக்குறிய இடத்தில் இன்னொரு பள்ளிவாசல் ஏன்? அப்படியே பள்ளிவாசல் கட்டினாலும், பள்ளிக்கு பேரூந்து நிலைய வாசல் அவசியமா? என்றும் கேட்கிறார்கள்.

நமதூரில் எத்தனை பள்ளிகள் இருந்தாலும், அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் (வக்ப்) செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலும் தொழுகையை கியாமத் நாள் வரையில் தொடர்ந்து நடத்தி வருவது லாஇலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக்கடமையாகும். பள்ளிவாசலின் சொந்த நிலத்தில் தடைகளை ஏற்படுத்தி பிரச்சினைகளை உண்டாகுவது காழ்புணர்வு கொண்ட சிலரே தவிர, பள்ளிவாசல் நிர்வாகம் அல்ல!

மேலும், மெயின்ரோடு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த சரியான இடம் இல்லாததைக் கருத்தில் கொண்டு, ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பில் வாங்கப்பட்ட நிலத்துடன்,பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட நிலத்தில் பள்ளி வாசலை நிர்மாணிப்பது நமதூர் முஸ்லிம்களின் மீது கடமையாகி விட்டது.

பேரூந்து நிலையம் வழியாக வாசல் பள்ளிவாசலுக்கான சொந்தமான நிலத்தில்தான் வாசல் வைக்கப்படுகிறது என்ற பிரதானக் காரணம் போக, பொதுமக்களின் பயன்பாட்டிற்கான எந்த ஒரு முயற்சியையும் சட்டப்படி வசதி செய்து கொடுப்பது சம்பந்தப்பட்ட அரசு, பஞ்சாயத்து அலுவலர்களின் பொறுப்பாகும்.

ஆனால்,பஞ்சாயத்து அலுவலகம் நமதூர் சகோதரர்களின் மீது பொய்வழக்கு போட்டும், பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டிருந்த மின்சாரத்தை துண்டித்தும், பள்ளிவாசலுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட பட்டா அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரியும் பாரபட்சமாகச் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சியின் பாரபட்ச அநியாயத்தைத் தட்டிக்கேட்க நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களோ பஞ்சாயத்து போர்டின் ஊழல்களில் பங்கெடுத்துக்கொண்டு மெத்தனமாக இருக்கிறார்கள்.

இன்னும் ஓரிரு வருடங்களில் தொடங்கப்படவிருக்கும் சேதுசாலை வழியாகச் தினமும் செல்லவிருக்கும் 500-600 பேரூந்து பயணிகளுக்குத் தொழுகவும் முஸ்லிம் பெண்களுக்கு இயற்கைத் தேவைகளுக்காகவும், நீண்ட தூரப்பயணத்தில் ஓய்வெடுக்கவும், தொழுகை முறையையும் கலாச்சாரத்தையும் மாற்றுமதச் சகோதரர்கள் அறிந்து கொள்ளவும் வசதியாக, பேரூந்து நிலையம் வழியாக மெயின் ரோட்டை இணைக்கும் வாசல் அவசியமாகும்.இத்தகைய பல்வேறு நல்ல அம்சங்களைக் கொண்ட அல்அமீன் பள்ளிவாசல் நிர்மாணத்திற்குத் தடையாக இருப்பவர்கள் திருக்குர்ஆனின் போதனையை மீறும் பாவத்தைச் செய்கிறார்கள்.

2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

மேலும், "எவரொருவர் தொழுவதற்காகப் பள்ளிவாசலை உண்டாக்கினாரோ அவருக்கு மறுமையில் (சுவர்க்கத்தில்) அல்லாஹ் மாளிகையை ஏற்பாடு செய்துள்ளான்" என்பது நபிமொழியாகும்.

அதர்கு தகுதியானவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

Tuesday, 7 August 2007

இந்தியாவின் மதச்சார்பின்மை பாரீர்!!

குருசாமிக்கு ஆப்பு வைக்க மறுப்பு தலைமை நீதிபதி'ஜெயேந்திரரின் பக்தன் நான்' - வழக்கைவிசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி மறுப்பு!

நான் ஜெயேந்திரரின் பக்தன். எனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறி விட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்படவுள்ளது.சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை.

இதற்கு, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு வக்கீல்கள்தான் ஆஜராக வேண்டும், தமிழக அரசு வக்கீல்கள் ஆஜராகக் கூடாது என்று கோரி இரு சங்கராச்சாரியார்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுதான் காரணம்.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.

இதனால் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.இந் நிலையில், நேற்று சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்ரமணியன் கூறுகையில், நான் சங்கராச்சாரியாரின் பக்தன். எனவே என்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது.

இம்மனுவை நான் விசாரிக்க மாட்டேன். 3 வாரங்களுக்கு விசாரணையைத் தள்ளி வைக்கிறேன். வேறு பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என்றார்.

இதையடுத்து இந்த வழக்கு 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இது தான் இந்தியாவின் மதச்சார்பின்மை!! இந்திய அரசியல் சட்டத்தின் தலைமை பீடமான உச்ச நீதி மன்றம் வரை சாதீய, பார்பனிய வேர் ஊடுருவி உள்ளது!! ஒரு விபச்சாரன், மத தலைவர் வேஷத்தில் காமலீலைகள் செய்தவன் தன்னிடம் பக்தியோடு வந்த பக்தைகளை காமத்தோடு தடவியவன், தனது ஊழல்களை மறைக்க பல கொலைகளை செய்து! உலக மஹா அயோக்கியன் இந்த சங்கராச்சாரி என்பவன்,

இவனின் பக்தனாக இருக்கிறானாம் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி!! என்ன கொடுமையாடா?

இந்தியர்கள் அணைவரையும் சமமாக நடத்தக்கூறும் அரசியல் சாசனத்தை அமல்படுத்த வேண்டிய நீதிபதி காமரசம் சொட்டுமு், மனிதர்களை தலையில் இரந்தும் காலில் இருந்தும் வந்தவன் என பாகுபாடு படுத்தும் மனுவின் சட்டத்தை அமலாக்க நினைக்கும் அயோக்கியன், தீவிரவாதி சங்கராச்சாரியாரின் பக்தனாம்!!

இவனைப்போன்ற சங்கராச்சாரியாரின் பக்தர்கள் நீதிபதியாய் அமாந்திருக்கும் நீதிமன்றங்களில் இந்தியாவின் சாமான்ய மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அய்யோ பாவம் இந்தியாவும் இந்திய குடிமக்களும்!! சுதந்திரமடைந்து பல ஆன்டுகலாகியும் இன்னும் மனுவின் பிடியில்!! பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ள இந்திய நீதி மன்றங்கள் என்று சுயமாக செயல்படும்?

இதுதான் குஜராத் மற்றும் பாபரி மஸ்ஜித் வழக்குகளிலும் நடந்தது!!

நன்றி : தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை